சனி, 16 மார்ச், 2024

பூர்தல், பூருதல் வினையாக்கம் , விக்கிரகம்.

 பூர்த்தி என்ற சொல் வழக்கில் உள்ளது.  ஒரு படிவத்தைப் பூர்த்தி செய்து அலுவலகத்தில் கொடு  என்று பேச்சு வாக்கியங்களில் வரும்,   பூர்(-தல்) என்ற ஏவல் வினையுடன் தி என்ற தொழிற்பெயர் விகுதி வருவதே  பூர்த்தி என்ற சொல். வினையில் மிகுந்து அதை நீட்டமாக்கிப் பெயராக்குவதே விகுதி   .  மிகுதி> விகுதி,  இதுபோல் திரிந்த இன்னொரு சொல்:  மிஞ்சு> விஞ்சு என்பதாகும்,  விகுதி என்பது  சொல் மிகுதலே.. விகுதி என்பது காரண இடுகுறிபோன்றது,  இதற்குக் காரணம் முன்னில் மிகுதலா பின்னில் மிகுதலா என்பது பின்னில்தான் என்று வருவிக்கவேண்டியுள்ளது.  விகுதி என்பது  பூசை மொழியில் விக்குருதி என்று வரும். (  விக்ருதி).  இதை மிக்கு + உரு + தி என்று உணர்ந்தால்,   மிக்குருதி, விக்குருதி என்று சிந்தனை பெறலாகும்.  உருவானது மிகுந்து வருவது.

அடிப்படைக் கல்லின் மிக்கு  ( மிகுந்து)   அழகுடன் செதுக்குற்று பீடத்தில் அமர்த்தப்பட்டிருப்பதே  மிக்கு+ இரு + அகம்   >  மிக்கிரகம் >  விக்கிரகம். இங்கும் அடிச்சொல் மிகுதல் என்பதே. கல்லின் மிக்கது விக்கிரகம், அது மிக்கு இரு அகம்.  அகம் என்பது  அ+  கு + அம்  :  அங்கு சேர்ந்து அழகாயிருப்பது என்று பொருள். அம் அமைதல், அழகு,  அம்மை, ( அம்மா) இவற்றுக்கெல்லாம் அடிச்சொல்லும் ஒரு விகுதி அல்லது இறுதிநிலையும்  ஆகும். 

இனிப் பூர்தல் என்ற வினையை ஆய்க:

புகு > புகவு >  புகர்வு

புகர் >  பூர்.

பகுதி என்பது பாதி என்று நீண்டு திரிதலை உணர்க.  அதுபோலவே புகு என்ற ஈரெழுத்துக்களும் பூ என்று நீண்டு திரிந்தது.

பூ -  பூத்தல்  என்ற வினை வேறு.

பூர் >  பூர்ந்தது பூர்ந்தான் என்று வினைகளாகி ரகர மெய் இழந்தது பூந்தது மற்றும் பிறவாக வழங்கும்,

தொழுகை மொழியில் சொற்கள் வேகமாக வெளிப்படுத்தப் படுவதாலும்  நாவின் சுழற் சி பிறழ்சிகளாலும் திரிபுகள் பல்கி அது தனிமொழியானது.  திரிபுகள் மொழிக்கு வளம் சேர்ப்பனவே.

அர் என்பது அருகு,  அருகில் என்ற சொற்களில் உள்ள் அர் என்ற அடிச்சொல்.  அருகு என்பதில் கு என்பது வினையாக்க விகுதி. இது வேற்றுமை உருபாகவும் தமிழில் வருவது.  புகு +  அர் > புகர்.  இங்கு அர் என்பது  நீட்சி.  இதனால் புதுப்பொருள் யாதும் ஏற்படாமையின் சாரியை என்னலாம்,  பூத்தல்  (  தோன்றுதல் )  என்ற வினையினின்றும் பூர்தல் என்பதை அர் வேறுபடுத்திற்று என்னலாம்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

வியாழன், 14 மார்ச், 2024

பேயைப் பார்த்த கதை

 


அம்மையார் வனஜா  முன்னிரவில் தங்கி இருந்த இடத்தில் பேயைக் கண்டதாகக் கூறிக் கொண்டிருக்கிறார். அப்போது பேத்தி உரோசினி எடுத்த படம்.

Madam Wanaja saw a ghost in a room where she stayed for the night. A hospital.

Frightening experience. Others came to see her. They were listening.

Then thaththa told them: In 1961 I was sleeping    in the vicinity of KK Hosp mortuary and a  a fellow worker was also sleeping nearby. Each of us lay on a big lace containing wooden  carton.  After midnight.(2 am) my colleague was forcefully pushed into the drain. I had to drag him out of it. He had bruises and lacerations . He had to be brought to GH A&E.

Roshini commented:

Thatha hope you will feel better with this video of amumma's encounter of a ghost in the hospital hehe

Shamini commented,:

OMGGGG I miss her! She’s so cute the way she talks 😂😍

Commented by APM:

[14/03, 22:02]: They said he was sleeping in the ghosts' path .( referring to the fellow worker pushed into the drain)

[14/03, 22:05]  Don't put your bed in a place the room door opens to . Be inside.. Not directly facing doorway. ( But you won't be allowed to change bed location in hospitals )

Roshini  commented:

So scary!

புதன், 13 மார்ச், 2024

கோலு-தலும் கோருதலும் திரிபு

 இன்று கோருதல் என்ற சொல்லை அறிந்துகொள்வோம்.

கோரிக்கை என்ற சொல் இப்போது வழக்கிலுள்ளது.  

வாங்குதல் என்ற சொல்லை ஆய்ந்த அறிஞர்கள்,   அதை வளைதல் என்ற சொல்லுடன் தொடர்பு படுத்தி,  வளைந்து பெற்றுக்கொண்டதனால் வாங்குதல் என்ற சொல் பொருளை ஏற்றுக்கொண்டபோது வளைந்து ஏற்றதனால் இப்பொருள் உண்டாயிற்று என்று அறிந்துகொண்டனர்.

வாங்குவில் தடக்கை வானவர் மருமான் என்ற தொடரில்  வாங்குவில் என்பது வளைந்த வில் என்று பொருள்தருவதை அறியலாம்.  வாங்கறுவாள் என்பது வளைந்த அறுவாள் என்று பொருள்படும்.  அறுவாள் என்பது அறுக்கும் வாள். அரிவாள் என்பது சிறிதாக அரிந்தெடுக்கும் வாள்.  மறக்கலாகாது.

அதைப் போலவே  கோலுதல் என்பதும் சுற்றிநிற்றல் அல்லது சுற்றிவருதல் என்று பொருள்பட்ட சொல்.

மரத்தில் பரண் கட்டி வாழும் காலத்தில் பாதுகாப்புக் காரணங்களுக்காக யாரையும் நேராக அங்கு வரவிடுவதில்லை.  கோலிவர நின்று வரவின் அறிகுறிகளைத் தெரிவித்து அழைக்கப்பட்டவுடன் தான்  எதையும் சென்று பெற்றுக்கொள்ள முடியும்.  இன்று இம்முறை வேண்டிய மாற்றங்களுடன் கடைபிடிக்கப்படுகிறது.

ரகர லகரத் திரிபின்படி அமைந்த சொற்கள் பல இங்கு ஆராயப் பட்டுத் தரப்பட்டுள்ளன.  படித்து அல்லது வாயித்து ( வாசித்து)  அறிந்துகொள்க.  கோலுதல் என்ற சொல்லே திரிந்து கோருதல் ( ஒன்றை வேண்டுதல்)   என்ற பொருளைப்  பெற்றது.  

இது இங்கு விரித்து எழுதப்பட்டுள்ளது: சொடுக்கி அறிந்து மகிழ்க.

https://sivamaalaa.blogspot.com/2023/08/blog-post_27.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்