வியாழன், 21 செப்டம்பர், 2023

சிப்பாய் என்ற ஆங்கிலச்சொல்.

 இன்று சிப்பாய் என்ற ஆங்கிலச் சொல்லை ஆய்வு செய்க.

பாரசீக வளைகுடா நாடுகளிலிருந்தோர், அங்கிருந்து வெளிப்போந்து பல இடங்களுக்கும் சென்றுள்ளனர். அங்கு மிங்கும் நடைபெற்ற போர்களில் சேனைச் சேவகர்களாய் வேலைசெய்து  சம்பாதிப்பதே இவர்களின் நோக்கமாகும்.  வெற்றி அடைந்தாலும் அடையாவிட்டாலும் விலையுள்ள பொருட்களைக் கவர்ந்து செல்வது பண்டை நாட்களில் படைஞர்களிடம்  பொதுவான காணப்பட்ட நடவடிக்கையாகும். இதுவே பெரிய ஊதியமெனலாம். அழகிய பெண்களைக் கவர்ந்து சென்றுவிடுவதும் பரிசுகளில் முதன்மையானதாக அவர்கள் கருதியதே  ஆகும்.

வெள்ளைக்காரர்கள் வந்துசேர்ந்த பொழுதும் அவர்கள் உள்நாட்டி லுள்ளவர்களைத் தம் படைகளிற் சேர்த்துத்தான் போதுமான ஆள்பலத்தை அடையவேண்டியிருந்தது. இந்திய நாட்டுப் படைமறவர்கள் உருவிற் சிறியவர்கள். வெள்ளைக்காரர்களின் முன் இவர்கள் சிறு பையன்களாகவே காட்சியளித்தனர்.

இந்தப் பையன்களை எவ்வாறு குறிக்கலாம் என்னும்போது " சிறு பையன்" என்றே  அழைத்தனர். சி - பை என்பதே இவர்களைக் குறிக்கும் சொல்லாகக் கையாளப்பட்டது.  இதுவே எல்லாத் தொடர்புடைய மொழிகளுக்கும் பரவிற்று.

சி - சிறு;  பை -  பையன்.  இது "சீ போய்", அல்லது "சீ பாய்"  ஆனது.  தமிழில் இது குறுகிச்  சிப்பாய் ஆயிற்று. இது ஆங்கில மொழிக்கும் பொருந்தியதாய் அமைந்தது.  சி - சிமால்,  பாய் . boy,

பழம் நழுவிப் பாலில் விழுந்ததுபோன்ற பொருத்தம் இதுவாகும். 

பாரசீகம் வரை பரவிவிட்ட இச்சொல்லின் திரிபுகள்  வெறுந்திரிபுகளன்றி மூலங்கள் என்று கருதக் காரணமில்லை.  இந்தியச் சிப்பாய்களின் புகழ் எங்கும் பரவியிருந்தமையே இப்பரவுதலுக்குக் காரணமாகும்.

அறிக மகிழ

மெய்ப்பு பின்னர்.

மீள்பார்வை செய்யப்பட்டது: 22092023

திங்கள், 18 செப்டம்பர், 2023

"செம" : மிகுதிப் பொருள் "செம்மை" யா?

 "வட்டி  செம  ஏற்றமாக அந்த வங்கியில் உள்ளது"  என்று பேசப்படுவதை கேட்கின்றோம்.  எல்லா வங்கிகளிலும் அப்படியா,  அந்த வங்கியில் மட்டுமா என்று அவருடன் உரையாடுபவர் கேட்பதில்லை. பேசுபவர்க்கும் தெரிவதில்லை.

செம என்பது செம்மை என்பதன் திரிபாகக் கொள்ளவும் பொருட்பொருத்தம் தெளிவாக இல்லை.

சுமை என்ற சொல் இருக்கின்றது. சுமைகாரன்,  சுமைகூலி  ( செமகூலி என்ற பேச்சுவழக்கின் எழுத்துவடிவச் சொல் ).  சுமைகூலி என்பதற்கு இப்போது இன்னொரு சொல்:  " எடுகூலி". (தூக்குகூலியுமாம்).

சுமைகூலி என்பதை வலிமிகுத்து  " சுமைக்கூலி" என்றும் சொல்வதுண்டு:  "சுண்டைக்காய் கால்பணம் ,  சுமைக்கூலி முக்கால் பணம்"  (பழமொழி).  

இவ்வாறு வலிமிகுத்தும் மிகாதும் வருமென்பது  தெரிகிறது.

வலி மிகவேண்டிய இடங்களில் மிகாமல் காத்து எழுதுவது இப்போது மிகுதியாய்க் கடைப்பிடிக்கப் படுகிறது. வல்லான் வகுத்தது வாய்க்கால் என்பதில் வல்லான் ஒருவனாக இருந்த காலம்போய்,  மக்கள் என்போரை ஒருவனாயும் வல்லானாயும் கருதும் நிலை வந்துவிட்டது.  நெடுங்காலமாகப் பல திரிபுகள் முன்னர் எதிர்க்கப்பட்டுப் பின்னர் ஆட்சி பெற்றுவிட்டமையானது தெளிவாகத் தெரிகிறது.   வல்லான் ஒருவன் என்பது ஒரு கற்பனை!  அவன் ஒருவனல்லன், பலர்.

ஒரு காலத்தில் ஒன்பதுக்குத் தொண்டு  எனப்பட்டது.  பின் தொண்பது என்னும் எண் ஒன்பது ஆயிற்றென்பர்.    ஒன்+பது என்பதால்,  பத்தில் ஒன்று குறைவு ஒன்பது ஆனது என்பர்.  அஃதிருக்க,  ஒன்பதுக்கு அப்புறம்  பத்து என்று இனி ஓர் எண்ணிக்கை தேவைப்பட்ட போது, தமிழர்  பல் - பல என்ற சொல்லினின்று அதைப் படைத்துக்கொண்டனர்.   பல்து > ப+ து >  பத்து ஆனது.  பல் என்ற ஈரெழுத்துச் சொல், ப என்று கடைக்குறையானது.  இதை இன்னொரு வகையில் பல்து > பற்று> பத்து  எனலாம்.  வல்லோர் பலர்,  பற்று என்பதைப் பத்து எனலாகாது என்று போராடியிருந்தாலும் அவர்கள் எல்லோரும் தோற்றுப்போயினர்!!  பற்று என்பது பற்றிநிற்கும் ஆசையை  அன்றோ குறிக்கவேண்டும் என்ற வாதம் தோற்றுவிட்டது. பற்று என்பது பத்து என்ற எண்ணைக் குறிக்கும் நிலை காணப்படவில்லை.  இருந்திருக்கலாம், நமக்குக் கிடைக்கவில்லை.  புலவர் காலமானபின் அவர் சேர்த்துவைத்திருந்த பழம்பதிவுகள்  எறியப்பட்டமையே  இயல்புநிலை ஆகும். 

கழுத்திருத்தல் என்பது சுமை என்பதற்கு இன்னொரு வரணனைச் சொற்றொடர்.   கழுத்து+ இருத்து + அல்>  கழுத்திருத்தல். இருத்து~(தல்) -கழுத்தை அழுத்தும் சுமை வை(த்தல்)  .   கோப்பு என்பது சுமைக்கு இன்னொரு சொல். இப்போது file  என்ற ஆங்கிலத்தை மொழிபெயர்க்கப் பயன்படுகிறது.  அரத்திற்கும் அது பெயராவதுடன், ஆங்கிலத்தில் வினைச்சொல்லாகவும் பயன் தருவது ஆகும். பலவற்றையும் ஒரு பைக்குள் கொட்டினால் சுமை மிகுதலால், கொட்டியான் என்பது சுமைதூக்குவோனுக்குச் சொல்லானது. காய்கறிகளும் பைக்குள் கொட்டப்பட்டுக்  கொண்டுசெல்லப் படுதலால்   கொட்டியான் என்பது காய்கறிகளையும் குறித்தது.  அரசர்கள் இவற்றை வாங்கி அலுவலர்களுக்கு இனாமாக அளித்தனராதலால், இவை படித்தரம் ஆயின.  ( படியாகத் தரப்படுவது படித்தரம் ).   இன் என்பது  உரியது, உரியன குறிக்கும் பழஞ்சொல். ஆம் என்பது ஆவது  ஆகும் என்று பொருள்தரும்.  இனாம் -  உரிமையாகத் தரப்படுவது. Don't always think of the word : "free".  Nothing is for free,  said our Statesman Mr Lee Kuan Yew. ( Someone had to work for it to be produced). கொடுப்பவன் வணிகன் அல்லன் ஆதலால்,  விலையின்றி என்ற வருணனைச் சொல் தேவைப்படவில்லை. Among factors of production, Labour has its own dignity and importance. Capital has its own. "எனமா", "எனாமா" என்பவை தவறான திரிபுகள். அறிக.  ஆனால் ஆய்வுக்குப் பயன்படலாம்.

சுமைதாங்கி என்பதைச் செமதாங்கி என்றும் சொல்வதால்,   செம என்பது பேச்சுவடிவச் சொல்.  இது சுமை என்பதன் திரிபே ஆகும்.

Heavy என்பதும் ஆங்கிலத்தில் மிகுதி குறிப்பதுண்டு.  எ-டு:  heavy rain. மற்ற மொழிகளிலும் இதைக் கண்டறியலாம்.  எடுத்துக்காட்டு:  மரமி   - (தகலோக் மொழி)  heavy (meals).  மிகுதியாய் ( உண்ணல்).

அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்னர்.



பூசுரர்

 பூசுரன் என்ற சொல்லை இப்போது கவனிப்போம்.

சொற்கள் சில ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் பிரித்தறியத் தக்க உள்ளுறைவு உடையனவாய்  உள. இவ்வாறான சொற்களை அங்ஙனமே பிரித்தறிதல் அறிவுடைமை.  ஒரு பொருளையே வலியுறுத்தல் அறிவுகோடுதல்  ஆகும்.

பூ + சுரன் என்றும் பிரிக்கக் கூடும்,  பூ -  மலர்.  சுரன் =  ஊற்றாகுபவன்.. நல்லோன்.  இதனை நற்குண நற்செய்கைகட்கு வெளிப்பாடாக இயல்பவன் என் க.

பூசு + உரு +  அன்  -  பூசுரன்,    ஓர் உகரம் கெட்டது;  இரண்டாம் உகரமும் கெட்டது;   இவ்வாறு:

பூச் + உ  ,  ர் + உ,  ன் ஆண்பால் விகுதி.

பூ + சு+  ர +   ன்

பூச்+ உர  + ன்

பூசையின்போது சந்தனம் அல்லது வேறு பூசைக்குரிய அரைப்புகள் சிலைக்கு பூசப்படும் அல்லது அப்பப் படும்,  அதுபின்  நீரினால் கழுவப்பட்டு,  பூச்சுகள் விலக்கப்படும்,  இதைச் செய்வதால்,   பூசி உருக்கொடுப்பவர் என்னும் பொருளில்  பூசுரர் என்னும் சொல் உருவானது,   பின் இது வேறுவகைகளிலும் விளக்கப்பட்டது,  பூசையின்போது பூசி உருக்கொடுப்பதே இச்சொல் எழக்காரணம்  ஆகும்,  உருக்கொடுத்தல் சொல்லாலும்  நடைபெறும்.

பூச்சால் உருக்கொடுத்தல்,  சொல்லால் அல்லது அருச்சனையால் உருக்கொடுத்தல் என உருக்கொடுத்தல் இருவகை.

தமிழென்பது வீட்டுமொழி.    சமஸ்கிருதம் என்பது பூசைக்குரிய மொழி.  பூசாரிகள் பயன்படுத்தியது.  இந்தோ ஐரோப்பியமென்பது பிற்காலத்தில் வெள்ளைக்காரர்கள் இயைத்துகொண்டது ஆகும்.  ஆரியர் என்று பெயரிய வெளி இனத்தவர் யாருமிலர்.  ஆரியர் என்பது ஆர் என்ற மரியாதை விகுதி ( பன்மை விகுதி) பெறுந்தகைமை உடைய மதிக்கப்பட்ட உள்ளூரார்.  பனியால் வெளுத்த தோலர்கள் அல்லர்.  பழைய நூல்களைப் பாதுகாத்து வைத்திருந்த இலக்கியவாதிகள். இந்தக் காப்பியக்குடியினர் இல்லாமற் போனதால் பல நூல்கள் இறந்தன.

பூச்சொரிதல் என்ற சொற்றொடரையும் கருத்தில் கொள்வோம்.  சொரி + அர் = சொரர் >  சுரர் என்றும் திரியும்.  இங்ஙனம் திரிந்த சொற்கள் பல.  பழைய இடுகைகளைப் படித்து ஒரு பக்கத்துக்கு ஒருவகைத் திரிபாகப் பட்டியலிட்டுக் கொள்க. இவற்றுள்  ஒலகம் '> உலகம் போன்ற பேச்சுத் திரிபுகளைபும் இட்டுக்கொள்ளுங்கள்.  கொடி - குடி என்ற சொற்களின் தொடர்பும் அறியற்பாலதே. நாளடைவில் திரிபுப் பட்டியல்களெல்லாம் விரைந்தினிது உங்கள்பால் தொழில்கேட்டு அடிமைகளாம். இப்போது நாம் பட்டியல்கள் பார்ப்பதில்லை. அவை காணாமற்போய்விட்டன.இவ்வளவு போதும்.  இவ்வாறு பூசுரர் என்பதற்கு வேறு திரிபுகளும்  பொருந்த நிற்பன.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.