புதன், 19 ஏப்ரல், 2023

சுவாஹா என்பதன் பொருள்.

 சுவாகா  (  சுவாஹா)  என்று மந்திரத்தின் இறுதியில் சொல்லப்படுவது, "உண்மை நலமே  ஆகுக" என்பதுபோலும்   ஓர் ஆக்கம் தரும் சொல்லாகும். இதுவே ஒரு தெய்வம் என்று சொல்வோருமுண்டு.  இச்  சொல் அல்லது சொற்றொடர்  ஒன்றுக்கு மேற்பட்ட வகைகளில்  பொருள்காண்போரால்  உணர்த்தப் பெறுகிறது.

இது தமிழில் இவ்வாறு உருவாகுதல் காண்க.

சு   <   சுவ (  ஸ்வா )   <  சொ.   (  சொந்தம் )

வாகா <   ஆக    (   ஆகட்டும் )     ஆதல் வேண்டுகிறேன், வேண்டுகிறோம்..

ஆகவே, நாம் வேண்டும் கடவுளுக்கு இவை யாவும் ( படையல் )  சொந்தமானவையாய்   ஆகட்டும்.

அதாவது,  சென்றுசேர்க என்பது.

இவையாவும் உமவாக.

தமிழில் உமது என்பது ஒருமை,  உம  என்பதுதான் பன்மை.  ஆனால் உம என்பது வழக்கில் இல்லை.  இக்காலத் தமிழில் உம்மவை என்றால் ஒத்துவரக்கூடியதாய் இருக்கும்,.  இப்படி அறிவதன் மூலம்,  ஒரு காலத்தில் இருந்து பின் ஒழிந்தவையையும் உணர முடியும்.  ஒழிந்த மட்டைகளில் சுவடுகள் மரத்தில் காணப்படுதல் போன்றதே இது.

சொந்தம் -   சொ  

சொ + அம் >  சொயம்  ( இங்கு யகர உடம்படுமெய் தோன்றியது ). > சுயம் உடம்படுமெய்  இல்லாவிடின்  சொ+ அம் >  சொ + ம் >  சொம்  ஆகும்.

சொம்  என்றால் சொத்து. சொம் என்பது பழந்தமிழ்.  அகரவரிசைகளில் இல்லாமலும் இருக்கலாம். பலவற்றில் இல்லை.

பூசாரி மொழியில் சோகா அல்லது ஸ்வாகா.

வீட்டு மொழியில் சொ(ந்தமா)க>  சோ ஹா.  அதுவே  ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்.


ஞாயிறு, 16 ஏப்ரல், 2023

தெய்வப் பற்று செழிக்கப் பாடுபட்டவர்,

தெய்வப்பற்று மிகப் பாடுபட்டவருக்கு ஆலயச் சார்பில் பிரார்த்தனை.


 இன்றுநடை  பெற்ற  இரங்கு  பதினாறில்

நன்றுபலர்  சேர்ந்து  நலம்தந்தார் ---- ஒன்றிணைந்து

நாடிவன  சாபுகழில்  நாடுதெய்வப்   பற்றுயர

ஓடுபுனல் பாடுமுயர்  வாம்.

பொருள்:
திருமதி  வனஜா அம்மையாருக்கு 18.4. 2023ல்  ஆத்ம சாந்திப் பூசை
நடந்தேறியது.   கலந்து கொண்ட  அவர்  தொண்டு  அறிந்தோர்  அவர்தம்
கடின உழைப்பினை நினைவுகூர்ந்தனர்.  தெய்வப்பற்று மேம்பட அவர் பாடுபட்டார்.  ஓடையில் சலசலவென்று ஓடும் நீரும்  அவர்தம் உயர் பண்பினை பாடிக்கொண்டு ஓடுகின்றது என்கிறது இப்பாடல்.

பதினாறு -  ஆத்மசாந்தி

இரங்கு-   பிரிவுத் துன்பம் அல்லது கையறுநிலை.

பலர் சேர்ந்து -   திரளான வருகை.  ஒன்றிணைந்து -  கூடினர் என்பதும் அது.

வனசா -  வனஜா  (  பெயர்)

தெய்வப் பற்றுயர -   இது பத்தி மார்க்கம் செழித்ததை உணர்த்துகிறது,

ஓடுபுனல்    ஓடும் ஓடையின்  நீர்.

புதன், 12 ஏப்ரல், 2023

செயலால் மேம்படும் துன்பம்

 பிறமதத்தான் பின்சென்ற பெண்திசை  மாற்றி


உறுமதத்தின் உள்ளிருத்தி   னாலும்  -----பெறுமதியும்

மேம்படுமோ  தொல்லைதான்  மேம்படுத்தி விட்டபழி 

தாம்படவே  நோய்மிகவே    ஆம்.


ஒருவன்பின் சென்ற பெண்ணை மீட்டுக் கொணர்ந்தாலும்  அவள் பிறந்த வீட்டுக்கு நலம் சேர்க்கமாட்டாதவள் என்பது கருத்து.  (இது பெரும்பான்மை பற்றிய கருத்து.)


பிறமதம் -  நீங்கள் சாராத வேறுமதம்.
உறுமதம் -  உங்கள் மதம்
பெறுமதி  -  அடையும்  அறிவு
(மேம்படுமோ  தொல்லை  மேம்படுத்தி விட்டபழி 
தாம்படவே  --   வழிமாற்றியவன் துன்புறுமாறு)
நோய்மிகவே    ஆம்.  -  நோய் கூடுதல்  ஆகும்.

இப்பாடலின் நோக்கம் பிறமதம் சார்ந்தோரை குறைத்து மதிப்பிடுவ தன்று. பல்வேறு பழிகள் தோன்றி அவர்களைப் பாதிக்கக் ]காண்கிறோம் என்பதுதான். தொல்லைகள் ஏற்படுகின்றன என்பது தான் நம் முன் ஏற்படும் காட்சி. இதையே இப்பாடல் பதிவு செய்கின்றது.