வியாழன், 8 டிசம்பர், 2022

பவணந்தி என்ற பெயர். (நன்னூல் ஆசிரியர் ) 13th c AD approx

 பவணந்தி என்பது ஒரு கொடி.  இக்கொடி மற்ற கொடிகளைப் போல்  படரும் கொடியே.  ஓர் முனிவர் பெயருமாம்.

பர  என்பது முதற்சொல்.  அடுத்து நின்றது  வண் என்ற இன்னொரு சொல். இவற்றைச் சேர்க்க, பரவண் ஆனது.

அந்தி என்பது அழகு என்றும் பொருள்தரும்.  அம் :  அழகு.  தி என்பது விகுதி.

பரவண் என்பது பவண் என்று இடைக்குறைந்து  அந்தி என்ற சொல்லுடன் இணைவுற்றது.

இந்த இடைக்குறைச் சொற்களையும் அறிக:

பருவம் >  பவ்வம்.

கடலும் பரந்தது ஆகலின்,  பவ்வம் ஆனது.  பருவமும் ஆம்.

பரவு அம் > பவு அம் > பவ்வம். 

அந்தியிற்பரவும் அழகு எனினுமாம்.

பிறவழிகளிலும் ஆகும்.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

சுமங்கலிப் பூசையும் இராகுகாலப் பூசையும்

 சுமங்கலிப்பூசை என்பது சுமார் ஐம்பது ஆண்டுகட்கு முன்பு  சிங்கப்பூரில் நடைபெற்றதாகத் தெரியவில்லை. இதை இங்கு அறிமுகப் படுத்தியவர், இலங்கையிலிருந்து வந்து  சிங்கைச் சிவதுர்க்கா ஆலயத்தில் ( முன்னையப் பெயர்:  சிவன் ஆலயம் ) இதனைத் தொடங்கியவர் ஆவார்.  வனஜா அம்மையாரே தம் நண்பர்களுடன் இதில் முதலில் ஈடுபட்டவர்.  இது பெரும்பாலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நடைபெற்றது.  அடுத்துவந்த செவ்வாய்க்கிழமையில் இராகுகாலப் பூசை என்ற ஒரு நிகழ்வும் நடைபெற்றது.

16.8.2016ல் நடைபெற்ற  இரு மேற்கண்ட வகைப் பூசைகளிலும் $6672 (வெள்ளிகள்) செலவிடப் பட்டிருக்கலாம்.  இதனினும் கூடுதலாக இருந்திருக்குமே தவிரக் குறைந்திருக்காது.  இது கோவிலுக்குக் கட்டிய தொகையே.  மற்ற அலங்கார வகைகளுக்கும் பூமாலை முதலியவற்றுக்கும் கூடுதல் செலவு ஆகியிருக்கும்.  அவற்றை முன் இடுகைகளில் கண்டுகொள்க.






இந்தப் பழைய பதிவுகளிலிருந்து  அறியப்படுவன.


As you can see, these were unedited and likely to be originals.


அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்.


வீட்டுப் பூசைகள்


 பூசைகள் கோவில்களில் மட்டுமே நடைபெறுபவை அல்ல.  பலர் வீடுகளிலும் இறைப்பற்று மேம்பட்டுப் பூசைகள் நடைபெறுகின்றன. நம்பாதவர்கள் தொகை குறைவு என்பதே எம் கணிப்பு ஆகும். பல்வேறு நம்பிக்கைகள் உடையவர்களும் அவரவர்கள் நம்பிக்கைகளுக்கு இணக்கமான முறைகளில் இத்தகு பூசைகள், பிரார்த்தனைகள்,  செபங்கள், ஓதுதல்கள் முதலியவற்றைக் கடைப்பிடிக்கிறார்கள். அதனால் நன்மைகள் அடைதலையும் உணர்கிறார்கள்.

இவைகட்கு உணவு ஏற்பாடு செய்யும் வணிகர்களும் சிங்கப்பூரில் நிறைய இருக்கிறார்கள்.இந்நகரம் அதற்குப் பெயர் பெற்றதாகும். ஏற்பாட்டாளர்களுக்கும் குறைவில்லை.  

மேற்காணும் ஒரு பதிவு இதை நன்கு உணர்த்தவல்லதாகும்.

பல்வேறு வணிக வகைகளிலும் உணவுப் பகிர்மானம் சிறந்தது ஆகும். இது ஒரு விளம்பரம் அன்று.


அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.