வியாழன், 30 ஜூன், 2022

பல்லவராயன் -

 காளமேகப் புலவர் முதலியவர்கள்  ஒரு சொல்வடிவத்தைப் பலவாறாகப் பிரித்து எப்போதும்  இயல்பாக நாம் "இதுதான் பொருள்,  வேறில்லை" என்று  கட்டித் தொங்கிக்கொங்கிக் கொண்டிருக்கும் பொருளே அன்றி பொருட்பொலிவுகள் பிறவும் உண்டு என அறிவுறுத்தும் வண்ணமாகப் பல்வேறு   பொருட்களையும் ஒரு கவிக்குள் புகுத்தி,  மரம்போல் நின்ற காண்திட்பனையும் மல்லாந்து வீழும்படி இயற்றி.  வெற்றிக்கொடிகளைப் பறக்கவிட்டுச் சென்றனர்.  தமிழைப் படிக்கும்போதெல்லாம் அதனை வியக்கிறோம்  அல்லோமோ?

பல்லவராயன் என்பதற்கு இயல்பான பொருளையே நாம் முன் இடுகையில் கூறினோம்.

இப்போது இன்னொரு பொலி பொருளைக் காண்போம்.

பல்லவன் +  அருமை + ஆயன்,

பல்லவ +  அரு  +  ஆயன்

இவற்றுள் அரு ஆயன் என்பதைப் புணர்த்தினால்,  அராயன் என்று வரும். அரு என்பதிலுள்ள ஈற்று உகரம் வீழும். வீழ்ந்தபின் மிச்சம் அர்  + ஆயன்.   இப்போது அடிச்சொல்லலைப் பார்க்கிறோம். அது அர். அர் என்பதற்குப் பொருள் பல உள. அவற்றை அறியப் புறப்பட்டுக் குழம்பி விடாமல்,  அருமை என்னும் பொருளே கருதுவோம். இதனை ஆங்கிலத்தில் சொல்வதானால்  aru  -  special.  சிறப்பானது, சிறப்பானவை.  ஆய் என்பதற்கு ஆராய்  என்று பொருள். சிறப்பான வழக்குகளை ஆய்ந்து முடிப்பவன்.  ( ஒரு நீதி அரசனோ, விசாரண செய்வோனோ ). ஆய்+ அன் = ஆயன்.  A special investigator ( appointed by the Pallava monarch.)

பல்லவ  -  an epithet. அடைச்சொல்.

அராயன்  - a designation.  ஒரு பதவிப் பெயர்.

பலலவ மன்னன் ஆட்சியின் போது செதுக்கப்பட்ட கல்வெட்டு இலக்கியம் முதலிய ஆதாரங்கள் கிடைக்கவேண்டும்.  அவற்றில் பல்லவராயன் என்ற அதிகாரிபற்றிய குறிப்புகளைச் சேகரிக்கவேண்டும்.  இன்னும் வேண்டிய சான்றுகள் பல. நமக்குத் தெரிந்தது : சிலர் இந்தப் பட்டம் தமக்கு உண்டு என்று சொல்கிறார்கள்.  இந்தப் பட்டத்தை முதன்முதலாய்ப் பெற்ற மனிதனிலிருந்து நம் ஆய்வு தொடங்கவேண்டும். நாம் வேலையிலிருந்த காலத்தில் செய்ததைவிட அதிக வேலை!   இதற்குமேல் நீங்கள் ஆய்வு செய்யுங்கள். எவனாவது செய்துமுடித்த இலக்கிலிருந்து நீங்கள் தொடருங்களேன். எவனாவது முடித்ததைப் போய் மீண்டும் பிசையாமல், இதைச் செய்யுங்கள். ( முடிந்தால்).

பல்லவராயன் என்பது தமிழ்ப் புணரியலுக்கு ஒத்துப்போகிற  சொல்லமைப்பாகிறது.. பாணினி என்ற பாணாயனின் இலக்கணத்துக்குப் போகவேண்டியதில்லை. குழப்பம் குறைகிறது.

ஆயன் என்பது : இடையன் என்ற பொருளாய் இருக்காது. ஒருவேளை ஆசிரியன் என்ற சொல்  ஆயன் என்று குறுகி இருந்தால் ஆய்வு இன்னும் விரிகிறது.  ஆசிரியன் >  ஆ(சிரி)யன் >  ஆயன் என்று!  இதில்  சி மட்டும் வீழ்ந்தால் ஆரியன் என்றாகிறது.  ஆர் என்பது மதிப்பைக் குறிப்பதால்,  அது வெறும் அரசன் மதித்த குடிமகன் என்ற பொருளுடையதாக இருக்கலாம். எந்தப் பதவியும் இல்லை என்பதாகவும் இருக்கலாம்.

பல்லவராயன் என்பது பல்லவ மன்னன் கீழ் இயங்கிய ஓர் அதிகாரி என்று நிறுத்திக்கொள்வது கொஞ்சம் சும்மா இருக்க உதவும்.


 


செவ்வாய், 28 ஜூன், 2022

புதன் கிழமை வணக்கம்


[ நண்பருக்கு அனுப்பிய வாழ்த்து வணக்கம் தொகுப்பு.]

( கொஞ்சம் மரபுப் பாக்கள் போல் இருப்பினும் இவை புதுக்கவி 

வகையின  ஆகும்]

புதியன எல்லாம் தருவதும் புதன்,

புத்தொளி வீட்டில் வீசிடும் புதன், 

அதிநலம் உடலில் அளித்திடும் புதன், 

வணங்குவம் : காலை, 

 வணக்கம் சொல்வோமே.

[ எந்த நேரமானாலும் வணங்கலாம்,  ஆனால் காலையில் சொல்வது சிறப்பு  என்பதே கருத்து,   இனி,  இறைவனை வணங்குவோம், நண்பருக்கும் காலை வணக்கம் சொல்வோம் என்பதும் கருத்து ஆகும். ]

[இவை வாரத்தின் மற்ற நாட்களுக்கு, சனி ஞாயிறு  நாட்களுக்கு முன் இடுகை காண்க ]


திங்கட்கிழமைக்கு:-

எத்திக்கும் இனிதாகத்

தித்திக்கும் திங்களில்

காசி விசுவநாதனின்

ஆசிகள் பெருகிட

கணபதி கருணைசெய்வார். 

காலை வணக்கம்.


செவ்வாய்க்கிழமைக்கு:-

இனிய நாள்  செவ்வாய்,  எழுதரும் வருவாய்!

தனிநலங்கள் எலாம்  மலிதரும் தறுவாய்;,

 இறையருள் என்றும் உங்கள் இல்லத்தில் 

தங்குக  காலை வணக்கம் செல்வத்தில்.


புதன்:  மேலே  காண்க.

 பெருமான் அருளால்

 புதுமைப்  புதனால் 

அரிய நலங்கள் 

அடைவீர்களாக.


வியாழக்கிமைக்கு:


விரிந்த உலகில் 

சிறந்தவை யாவும்‌தரும்

வியாழ பகவான் ஆசியுடன்

 காலை வணக்கம். 

அம்மன் அருளால் 

இ‌ந்த நாள் இனிய நாள்.


வெள்ளிகிழமைக்கு:-

மெள்ள மெள்ள வந்திடுமே

மிக்க உறுதி தந்திடுமே,

வெள்ளியில்  நலமே சொந்தமினி, 

யாவும் செழிக்க உந்தல்தனி, 

வெள்ளியில் வெள்ளி முந்திவரும்

இல்லத்தில் தினம் பந்திதரும்,

காலை வணக்கம்  தண்கலமாய்

காண்பீர் எம்கவி வெண்கலமாய்.


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்னர்

 

.

பலம் உடையவர் : பலவர்> பவர் ( வலிமை)

ஒரு பழைய திரைப்பாடல் : " எளியோரைத் தாழ்த்தி  வலியோரை வாழ்த்தும் ,  உலகே உன்செயல்தான் மாறாதா" ( கவி கா.மு. ஷெரிப் அவர்தம் அழகான வரிகள் , நெஞ்சைத் தொடுவது)   தொண்சுவைகளில் ஏக்கச்சுவை பொங்கிவரப் பாடுவார் பாடகர்.  இதனை  நாடகத்துக்காகப் பாடலாம்,  அது மாறப்போவதில்லை. அப்படியே மாறிவிட்டாலும்,  பிறரைக் கட்டுக்குள் வைத்திருக்கும்  திறனற்றவர்களால்  மன்பதையில் ( சமுதாயத்தின்) ஒழுங்கு முறையை நெறிப்படுத்த இயலாமல் அதனால் சரிவினைச் சந்திக்கவேண்டி நேரலாம்!! பலம் வாய்ந்தவர்கள் பலம்தேவைப்படும் வேலைகட்குத் தேவைப்படுகிறார்கள். But don't bully the weak. 

சாதுவானவர்கள்,  மென்மையான வேலைகளில் ஒளிதருவர். சாது என்ற சொல் எவ்வாறு தோன்றியதென்பதைப் பின் பார்க்கலாம். நிற்க.

நாம் இப்போது "பவர்" என்ற ஆங்கிலச் சொல்லைக் கவனிப்போம்.  

சுருங்க விளக்கினால் இவ்வாறு வரும்:

பலம் + அர் >   பல + அர் >  பலவர் >  ( இதில்  லகரம் இடைக்குறையாகிவிட்டால்), >  பவர் ( power) :  ஆகிவிடும்.

பலம்  ( வலிமை), இதில் இறுதி குன்றி  எச்சம் ஆகிவிடும்.

பல ஆன் > பலவான்.  இதில் பல என்பது எச்சச் சொல்.  அது போலவே இதுவும்.

'புத்திமான் பலவான் ஆவான்'

வந்தான் சென்றான் என்பதில் வரும் ஆன் விகுதிதான் இது.

பலவான் >  balwant  ( வட இந்திய மொழிகள் ).

ஓ மல்லா   :  ஓ பலம் பொருந்தியவனே!  என்பது.

மல் > வல் > பல்.

வல்லோன்,  மல்லன்,  பலவன்.

பல் >  பல்+ அவன் >  பல்லவன்:   பலமுடைய மன்னன்.

அரையன் > அரசன்.   பல்லவ அரையன் > பல்லவராயன்  (திரிபு)

பல்லவன் <> வல்லவன்.

புத்திமான்:  மான் என்பது இங்கு மகன் என்ற சொல்லின் திரிபு.  மக>  மா.

மேலும் பலம் என்பது  வலம் என்பதன் திரிபு.  வல் > பல் + அம் > பலம்,

புத்திமான் புத்தம்புதிய சிந்தனையில் செயல்படுபவன்.  புது அன் >புத்தன்.  புது இ > புத்தி. புத்தர் என்ற பாராட்டுப்பெயர் தென்னாட்டார் கொடுத்தது.  அதுவே சிறந்த பெயராய் நின்றது.

வலம்படு என்று பழந்தமிழில் வந்தால்,  அது "பலம் படு"  அதாவது வலிமைப்பட்ட என்று பொருள்.

இழிநிலை இலத்தீனில் potere  போட்டு அறை என்பதுபோல் உள்ளது. பழம் பிரஞ்சு மொழியில் pouair  என்று வந்தது.  மொழிதோறும் திரிபுகள் ஊரும்.

ஐரோப்பிய வடிவங்கள் போடு என்பதனுடன் தொடர்பு காட்டினும்,  போடுகிறவனும் வலிமை  உடையவன் தான். அதாவது உதைகொடுப்பவன்.  வாங்கிக்கட்டிக்கொள்பவன் வலிமை இல்லாதான்.

என்றாலும்,  பலம் அர் >  பலவர் >  பவர் என்று,  ஒரு பலம் பொருந்தியவனை முன் வைத்து எழுந்த சொல் இதுவென்பது பொருத்தமாகிறது. 

தமிழ்ச்சொற்களை ஆராய்ந்தால் இன்னொரு மெய்ம்மையும் விளங்கும். அதாவது இடையிடையே, இப்போது  கிடைக்காத,  அகரவரிசைகளில்  இல்லாத  சொற்களும் கிடைக்கும்.  அது நம்மிடம் இல்லாமல்,  வெளியுலகில் பலவிடங்களில் வாழ்ந்துகொண்டிருக்கும். அடிச்சொற்கள் மூலங்கள் வழியாத அவற்றை அறிந்து அவற்றின் வாழ்விடங்களை அறியலாம். உறவு துண்டித்துப் பிரிந்திட்ட சொற்கள். நாம் அவற்றை நம் ஆய்வுப் பாதையிலிருந்து விலக்கிவிடலாகாது.  மேலும் ஆய்ந்து  தொடர்புகளை வெளிக்கொணர்க. ஆய்வை விரிவுசெய்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.