சனி, 7 நவம்பர், 2020

ராக்காயி, ராக்கம்மா

 இராக்கம்மா, இராக்காயி என்பவை அம்மனின் பெயர்கள்.  சிற்றூரால் ஆளப்படும் சொற்கள் இவையாகும்.

    இது அமைந்த விதம்:

    இரக்கம் உடையவள் அம்மன்.

    இரக்க +  ஆயி =  இராக்காயி > ராக்காயி.

    இரக்க + அம்மா = இராக்கம்மா> ராக்கம்மா.

    இவ்வாறு திரிந்த இன்னொரு சொல்:  பக்கம் > பட்சம் > பக்ஷம்.

    மோள் > மோள்+சு+அம் = மோட்சம் > மோக்கம்.

    மோள் > மோள்+கு +அம் > (மோட்கம்)> மோக்கம் > மோட்சம்.

    மோள் என்பது மேல் என்பதன் திரிபு. கேரளத்தில் இவ்வழக்கு உள்ளது. மேலுலகு என்பது பொருள்.

இதைப்பற்றிய முழு நீள இடுகை நீக்கப்பட்டுள்ளது. சுருக்கமான செய்தி மேற்கண்டபடி.

மறுபார்வை பின்.


வெள்ளி, 6 நவம்பர், 2020

அங்கீகரித்தல்

 அங்கீகரித்தல் என்பதை முன்னர் விளக்கியுள்ளேம். இங்கு கண்டுபிடிக்க இயலவில்லை. இதை வேறு வலைத்தளங்களில் வரைந்திருத்தலும் கூடும் பல ஆண்டின்முன்.  இவற்றைத் தேடிக்கொண்டிருக்காமல், அதை இங்கு தருவேம்.1

இது முற்காலத்து எம் நெகிழ்வட்டுகளில் உள. floppy discs.

அங்கு .  ( அதாவது முன்வைக்கப்பட்ட மாத்திரத்தில் )

ஈர் -  ( ஈர்த்தல்:  பெற்றுக்கொள்ளுதல், ஏற்றல், தன்பால் இழுத்துக்கொள்ளுதல்).

இது ஈ என்று குறைந்தது கடைக்குறை.

கரித்தல் -  இது சில இடுகைகளில் விளக்கப்பட்டுளது.  ( கு+ அரு+இ+தல்)

கு - வந்து சேர்தல் குறிக்கும் இடைச்சொல். 

அரு = தன் பால்.  (  அருகில் ).

இ - வினையாக்க விகுதி.

இது பல சொற்களில் உள்ளது. எ-டு:  ஆமோதி(+தல்).  ஆமென்று ஓதுதல். ஓது+ இ. வினையினின்று வினையாக்கம்.

ஆகவே  ஏற்றுக்கொள்ளுதல் என்பது இப்புனைசொல்லின் திரண்ட பொருள் ஆவதாம்.

" அதை அதிகாரி முன்னாலே வச்சாங்க. அவர் ஈகரிச்சுக்கிட்டாரு" என்று முன் காலத்தில் பேசப்பட்டு, பின்னர் அங்கு என்பது முன் ஒட்டிக்கொண்டு ஒரு சொன்னீர்மை எய்திச் சொல் அமைந்திருக்கலாம். எழுத்தில் வரும்போது ஒரு சொல்லாய்ப் புனைவுறலானது. முன்னோர் பேசிய சொல்வழக்குகளை அறிய வழியொன்றுமில்லை.  எழுத்தில் இருந்தன கிடைத்தவை சில, நூல்கள் வாயிலாகவே.

அறிக மகிழ்க.



தருவேன்,  இதன் பன்மை தருவேம் (ஏம் விகுதி).

வியாழன், 5 நவம்பர், 2020

வழிபாடு - இன்னொரு சொல்

 

வழிபாடு இன்னொரு சொல்

வழிபாடு என்பதை எழுத்துத் தமிழில் சொல்லப் பல சொற்கள் உள்ளன. இறைவழிபாடு என்று இன்னும் தெளிதிருத்தமாகச் சொல்வதும் உண்டு.

பழந்தமிழ் நூல்களிலிருந்து "பணியல்" என்ற சொல்லும் கிடைக்கின்றது. இந்தச் சொல்லைப் பயன்படுத்தி அது வழக்கிறந்துவிடாமல் காப்பாற்றுவதும் தமிழர் கடனாகும். இது பணி(தல்) என்ற வினையினின்று அமைந்த சொல்லே ஆகும்.

ஒரு வீட்டில் ஒரு விழாப்போல எடுத்துப்ெரிய அளவில் பணியல் நடைபெற்றுக்கொண்டிருந்தது. யாமும் சென்றிருந்தோம்.  அப்போது ஒருவர ்  வந்து உரையாடத் தொடங்கினார்.  "இவர்கள் ரொம்ப மும்முரமாகச் சாமி கும்பிட ஆரம்பித்துவிட்டார்கள்" எ்ன்றார் அவர்.  இவர்கள் என்றது வீட்டாரை.  இதிலிருந்து  "சாமி கும்பிடுதல்" என்பதே பணியல் என்பதற்குப்ேச்சு வழக்குச் சொல் என்பதை அறிந்துகொள்ளலாம்.

பணியல் என்பது பணிதல் என்ற வினையடிச் சொல்லே என்பது யாம் சொல்லாமலே உங்கட்குப் புரியும்.


மெய்ப்பு பின்