வெள்ளி, 30 அக்டோபர், 2020

யானைக்குட்டி

 இரண்டு வயது  யானைக்குட்டி

புரண்டு விழுந்து  சண்டைபோடும்

பிறந்த தாயும்  தந்தை யென்றும்

சுரந்த அன்பு  காணவில்லை.


அன்னை வந்து  அணைத்த போதும்

அஞ்சுதலில் முட்டும் கோபம்

பின்னை வந்து மனிதர் பாலும்

பீடையாகிப் போனதாமோ!


பிள்ளைகள் அம்மாவுடன் சண்டையிடுதல், இந்த யானைக்

குட்டி அதன் தாயுடன் சண்டையிட்டது போன்றது.  விலங்குக் குணம்

மானிடன் அடைந்துவிட்டானோ என்பது இந்த வரிகள்

எழுப்பும் கேள்வியாகும்.


பிறந்த -  தான் பிள்ளையாய்ப் பிறந்த

அஞ்ச்சுதல் இல் -   அச்சமில்லாமல்

சுரந்த -  பிள்ளையிடம் ஏற்பட்ட

மனிதர்பாலும் -  மனிதரிடத்தும்

பீடை - நோய்.

மணிமேகலைக் காப்பியம்: அட்சயபாத்திரம்.

 ஒன்றைப் பிறருக்கு -  அது வேண்டியோருக்கு -  அளிப்பது ஓர் அருள், ஓர் அன்பு. இதை "அளி" என்று இலக்கியங்கள் புகழும்.  இது குழைவையும் குறிக்கும்.  " அளிந்த ஓர் கனி " என்பது திருவாசகம். இரக்கமும் குறிப்பது ஆகும்.

அட்சயப் பாத்திரத்திலிருந்து மணிமேகலை அள்ளி அள்ளி மக்களுக்கு வழங்குகிறாள். எல்லோருக்கும் அமுதளித்து இரக்கம் காட்டுகின்றாள்.  இப்பாத்திரம் அள்ள அள்ளக் குறையாதது.

அட்சயப் பாத்திரம் என்பதில் அட்சய என்ற சொல்லை அறிவோம்.

அளிச்செயல் பாத்திரம்

அச்செய பாத்திரம்

இங்கு  ளி என்ற எழுத்துக் குறைவுண்டது.  லகர ஒற்றிறுதியும் கெட்டது.

இந்த நிலையில் இது அட்சய என்று மாறி அமைந்தது. இஃது ஓர் ஒலிநயமூட்டுத்

திருத்தம்.

இந்தத் திரிபுகளையும் கவனித்துக்கொள்ளுங்கள்:

இடுக்கண் > இடுக்கட்டு > இக்கட்டு.  (டு இழப்பு)

சகக்களத்தி >  சக்களத்தி.  ( க இழப்பு)

பகுக்குடுக்கை >  பக்குடுக்கை  (கு இழப்பு)

சறுக்கரம் >  சக்கரம் ( று இழப்பு)

மக + கள் = மக்கள்.

இச்சொல் ( அட்சய ) ஒரு பலபிறப்பிச் சொல்.  

அருட்செயல் >  அட்செய  > அட்சய என்றுமாகும். ரு, ல் இழப்பு.

மற்றோர் மாற்று விளக்கம்:

அட்சய பாத்திரம் http://sivamaalaa.blogspot.sg/2016/01/blog-post_29.html



வியாழன், 29 அக்டோபர், 2020

சனாதன தருமம்.

 சனாதன தர்மம் என்பது " இந்து மதம்" என்பதன் ஒரு பெயர். இதனை மதம் என்பதை விட ஓர் வாழ்நெறி என்றுதான் கூறவேண்டும். இந்திய உச்ச நீதி மன்றமும் தன் தீர்ப்பொன்றில் இவ்வாறே கூறியுள்ளது. உத்தரப் பிரதேச மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் இதையே தீர்ப்பின்பின் கூறினார்.  இதுவே உண்மையுமாகும்.

இது இஸ்லாமிய கிறித்துவ மதங்களைப்போல் ஒருவரால் அமைக்கப்பட்டதன்று.

ஒரே மதநூலை அடிப்படையாய்க் கொண்டதுமன்று.

கருத்துகளும் கடைப்பிடிக்கும் விதிகளும் இடங்கட்கேற்ப சற்று மாறுபடுதலும் இவ்வாழ்நெறிக்கு இருக்கலாம். எடுத்துக்காட்டாக திருமணங்களில் தாலிகட்டுதல் ஒரு மதச்சடங்கோ இல்லையோ, அது தென்னாட்டில் உள்ளது; வட இந்தியாவில் இல்லை. பூசை முறைகள் தென்மாநிலங்களில் ஒரு விதமாகவும் வடமாநிலங்களில் வேறு விதமாகவும் இருக்கலாம். விளக்கங்களும் வேறுபடலாம்.

சனாதன என்பதை மட்டும் இங்குக் காண்போம்.

ஒரு குறிப்பிட்ட கூட்டத்தார் தமக்குள் கொள்வனை கொடுப்பனை மூலம் தொடர்புடையவர்களாய் இருக்கும் நிலையில், ஒரு கோவிலை அமைத்துக்கொள்கிறார்கள். அவர்களில் ஒருவரே அதில் பூசாரியாய் இருக்கிறார். கோவிலில் மூல தேவதை பகவதி அம்மன் என்று வைத்துக்கொள்வோம். அத் தேவதையே அங்கு பெரிதாய் அமைந்துவிடுகிறது.  மற்ற  தேவர்களின் சிலைகளும் சிற்றளவினவாய் அமைக்கப்படுகின்றன. பெருவிழாக் காலங்களில் ஒரு பிராமணப் பூசாரியை (போற்றியை) வரவழைப்பதுண்டு. மற்றவேளைகளில் உள்ளூரில் எப்போதும் பார்ப்பவரே காரியங்களைப் பார்ப்பார்.

இங்கு நடப்பவை எல்லாம் விருப்பப்பட்டு அவர்களே ஆற்றிக்கொள்ளும் கடமைகள் தாம்.  தன்னால் ஆனவற்றைத் தான் செய்து வழிபாடுகள் நடைபெறுகின்றன.

தன்  ஆ தன   (தன்னால் ஆன தன்  செயல்கள்).

தனாதன 

இதில் தன் என்பது சன் என்று த- ச திரிபு விதிப்படி திரிகிறது.

தன்  ஆ தன >  சனாதன.

தன்னால் ஆன தன் பொருட்களாய் வைத்து :  அதாவது,  மாலை போடுதல், பூக்களைக் சொரிதல், சந்தனம் குங்குமம் வைத்தல், திருநீறு வைத்தல், பால் வைத்தல், நீர்வைத்தல்  சர்க்கரைப் பொங்கல் வைத்தல் என்று விரும்பியன வைத்து வழிபடுவர்.

தன என்றால் தன்னுடையவை.   அ (தன என்பதில் )  பன்மை.  தனது என்பதில் து ஒருமை.

சமஸ்கிருதத்தில் தன் என்பது சன் ஆனதுதவிர மற்றவை மாற்றமில்லை.

த என்பது ச ஆவது ஒரு மோனைத் திரிபு. பல சொற்களில் காட்டப்பட்டுள்ளது. பழைய இடுகைகள் காண்க.  ஓர் எ-டு:

தன்-கு > தங்கு > சங்கு > சங்கம் 

புலவர்கள் தங்கி, அரசன் தந்த சோற்றையும் குழம்பையும் உண்டுவிட்டு,  கிடைப்பவற்றைப் பெற்றுக்கொண்டு, கன்னா பின்னா என்று கவியைப் பாடி அதனாலும் பரிசில் பெற்றுக்கொண்டு கூடியிருப்பது சங்கம்.  தங்கு என்பதில் வந்த சொல்.  தான் > தன்,  கு என்பது சேர்விடம் குறிக்கும் உருபு இங்கு சொல்லாக்கத்தில் வந்தது.

இந்து மதத்தில் தன்னைத் தான் அறியவேண்டும், இறைவனை அதிலிருந்து கண்டுபிடி என்று சொல்வார்கள்.  பூசை (பூ +செய்: ) என்பது ஒரு கருவிபோன்றதே. உள்ளம் பெருங்கோயில் என்றார் மாமூலர்.  தானே அறிக என்பது இந்துமதம்.

தன் ஆ தன > சனாதன என்பது சரியான பொருத்தமாய் உள்ளது.

பின் வந்து பார்த்துப்

பிழைகள் இருந்தால் திருத்துவோம். 

நன்றி. 


Sanātana Dharma (Devanagariसनातन धर्म, meaning "eternal dharma", or "eternal order")[1] is an alternative name for Hinduism used in Hindi alongside the more common Hindu Dharm (हिन्दू धर्म).[2][3]

Long time ago Even Buddhism or Jainism were thought to be within the fold.

முகக்கவசம் அணிந்து

தொலைவு கடைப்பிடித்து,

தூய்மை போற்றி

நோயினின்று காத்துக்கொள்ளுங்கள்.