வெள்ளி, 15 நவம்பர், 2019

Rigor mortis or மரித்திறுக்கம்.

ஆங்கில வைத்தியத்தில் ஒரு கலைச்சொற்றொடராகப் பயன்படுவதுதான் "ரிகோர் மோர்ட்டிஸ்"  (அல்லது ரிகார் மார்ட்டீஸ் }  என்ற இலத்தீன் மொழித் தொடராகும்.

ரிகோர் ----   இறுகு ஊர்தல்.
சதை இறுகும்படியான நிலை ஊர்ந்துவரல்.
 இரிகோர்  -- இறுகூர்.

மார்ட்டீஸ் ---  மரித்தல்.   மரி > மார்.  மாரகம் என்ற சோதிடச் சொல் மரணம் என்று பொருள்படும்.


செத்துச் சில மணி நேரத்தில் உடல் விறைப்பு.

பழைய இடுகைகள் காண்க.

அதிகம் சொன்னால் "காப்பி அடிக்கும்" கூட்டம் பெருகும். வரலாற்றையும் உடன் சொல்லற்க.

அறிந்தின்புறுக.



அடிக்குறிப்புகள்

ஒரு பெரிய நோய்வந்துவிட்டால்  ஒரு வைத்தியனை வைத்து நோயைப் பார்க்கவேண்டும் என்பது தமிழ் நாட்டில் பேச்சு வழக்காகும். வைத்தியனை வைத்து என்றால் அவனை டப்பாவிற்குள் அடைத்து வைத்து என்று பொருளன்று. "அப்போய்ன்ட் ஏ டாக்டர்"  என்றுதான் அதற்குப் பொருள். கடினமான ஆங்கிலத்தையும் வெகு எளிதாக மொழிபெயர்த்தறிய வல்லது தமிழ்ப் பேச்சுமொழி என்று உணரவேண்டும்.  சீனக் கிளைமொழியான ஹோக்கியனில் உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி அல்லது கார் என்பதை "பா ஹோங்  சியா" என்பார்கள்.  அப்படியென்றால்  "வண்டி அடி(த்தல்)" என்றுதான் சொற்களுக்கு அர்த்தம் என்றாலும் அச்சொற்கள் வழக்கில் தரும்பொருள்  உரிமம் இல்லாத வடகை உந்துவண்டி (பயன்பாடு)  என்பதே ஆகும்.  In Chinese intonation is important  and changes must be adverted to.  தமிழைப் போலவே சொல்லையும் பொருளையும் சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் திறம்படைத்தவை சீனக்கிளைமொழிகள்.  வைத்துப்பார்க்கப்படுவோனே  பின் "வைத்தியன்" என்ற புனைச்சொல்லால் குறிக்கப்படுவோன் ஆயினன்.

வை+  து  + இ + அன்  >  வைத்தியன்.

இட்டு அப்பி வைக்கும் சிற்றேனமே  டப்பி அல்லது டப்பா.
இடு அப்பி   ( அப்பி இடு அல்லது இட்டுவை )  -  இடப்பி >  டப்பி > டப்பா.

எழுத்துப்பிழைகள் பின்பு பார்க்கப்படும்.

வியாழன், 14 நவம்பர், 2019

ஆபத்து என்ற சொல்

இது ஒரு மூவசைச் சொல்.

ஆநிரைகளைக் கைப்பற்றுதல் பண்டைத் தமிழர் போர்த் தொடக்க நடவடிக்கை.    ஆ பற்றுதல்  எனப்படுவது  ஆ பற்று  >  ஆ பத்து என்று மாறியுள்ளது.

ற்று என்பது த்து என்று மாறுவது எழுத்துத் தமிழ் -  பேச்சுத் தமிழ் இவற்றிடை நிகழும் இயல்புப் பெருநிகழ்வாகும்.   இதைப் பல இடுகைகளில் கூறியுள்ளோம்.
இடுகைகள் சில ஈண்டு குறைவுண்டன  (இன்மை).

ஆ பற்றுதல் என்பதில் ஐ யுருபு தொக்கது.

நாளடைவில் ஆ என்ற சொல் பேச்சு வழக்கின்றி மறைந்ததும் தமிழரசு மாறிப் பிற நிகழ்ந்தமையுமே  இதன் பொருள் சற்றுத் திரிந்து  பேரிடர் என்னும் பொதுப்பொருளில் இச்சொல் வழங்குதற்குக் காரணங்களாவன.

சிறப்புப் பொருள் திரிந்தமையில்  திரிசொல்.

மாடு பிடித்தல் என்ற தொடரில் வலிமிகாமை போலுமே இது.  காட்டை வெட்டுவோன் காடுவெட்டி.  காட்டுவெட்டி அன்று.  இங்கும் இரட்டிக்கவில்லை.

காடு > காடை.  குருவிப்பெயர்,  இரட்டிக்கவில்லை.   காட்டில் வாழும் ஒரு வகைக் குருவி என்பது பொருள்.  காரண இடுகுறி.

காவு தாரி  >  கௌதாரி.    (முதனிலைக் குறுக்கம் ).  காடுகள் பெருவாரியாகத் தரும் பறவை.  அவை காட்டில் பெரிதும் வாழ்வன என்று பொருள்.  சில வீட்டுப் பக்கங்களுக்கு  -    பின்பு இடம் மாறின.

குறிப்பு: 

ஆபத்து என்பதில் வலிமிகாமைக்குக் காரணங்கள்:

1..  ஆப்பத்து  <  ஆப்பற்று என்றால்,  ஆப்பு + அற்று என்று பிரிந்து   "ஆப்பு வைக்காமல்" என்ற பொருள் தந்து பொருள் மயக்கு உண்டாம்.

2.  இது சொல்லாக்கம். வாக்கியத்தில் வரும் நிலைமொழி வருமொழி அல்ல.


 காவு என்ற சொல் பயன்பாடு:
ஆரியங்காவு.  காவு கொடுத்தல்.

காடு என்பது இருபிறப்பிச் சொல்.  கடு > காடு. (  கடுமை மிக்க இடம்.  வேங்கடம் என்பதில் கடு> கடம் எனினுமதுவாம்.  காத்தல் : கா > காவு. காப்பு.

பின் உரையாடுவோம்.

மறுபார்வை பின்

சனி, 9 நவம்பர், 2019

வித்துவான் பற்றிய இன்னொரு சிந்தனை

வித்துவான் என்ற சொல்பற்றி முன்பதிவுகள் இட்டதுண்டு.  அவற்றுள் ஒன்று அடிக்குறிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது.

இச்சொல்லை வித்துவன் என்று எழுதுவோருமுண்டு.  அன், ஆன் என்பன இரண்டும் தமிழ்விகுதிகளே.

விள் என்பதோர் அடிச்சொல்.  வித்து விதை முதலிய பலவேறு வடிவங்கள் இதனோடு தொடர்பு கொண்டவை ஆகும்.

எச்ச வினையினின்று சொற்களைப் பிறப்பிக்கும் முறை பாலி முதலிய மொழிகளில் காணப்படுகிறது.

விளைத்தல் என்பதினின்று விளைத்து,  விளைத்த என்ற எச்ச வினைகள் தோன்றும்.  விளைத்து என்பது எச்சவினை வடிவத்திலே பெரிதும் காண்புறும் சொல்லாயினும் அதைப் பெயர்ச்சொல்லாய்க் கருதுவதற்கு இறுதித் துகரத்தைப் பெயராக்க விகுதியாகக் கொள்ளுதல் வேண்டும்.  கொள் > கொளுத்து என்பது வினையாகவும் பெயராகவும் பயன்பாட்டிற்கேற்பப் போதரும்.  கொளுத்து என்பது கொண்டி அல்லது தாழ்ப்பாள்.  விளைத்து எனற்பாலதும் அவ்வண்ணமே   போதரத் தக்கது.

விளைத்து என்பது இடைக்குறைய வித்து என்றாகிவிடும்.   வித்து என்பது பெயரும் வினையுமாம்.  ளைகாரம் கெட்டது.

எதனையும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் விளக்கினும்  ஏற்புடைமை மாறாதது காணலாம்.

அடிக்குறிப்பு.


வித்துவான்.
https://sivamaalaa.blogspot.com/2017/12/blog-post_33.html