வெள்ளி, 26 அக்டோபர், 2018

துரு ஓங்கிய நிலை துரோகம்.

இரும்பில் பிடிப்பது துரு.

இரும்பு என்பதைத் தமிழர் பிற்காலத்து அறிந்துகொண்டனர்.  உந்துவண்டிகள் வந்தபின்பு,  சிலர் ஒட்டுநர்களாகப் பயிற்சி பெற்று  ஓட்டி ஊதியம் பெற்று வாழ்க்கை நடாத்துகின்றனர்.  அதுபோல இரும்பு வந்தபின்பு அதை உருக்கவும் அதனால் ஆயுதங்கள் செய்யவும் தமிழர் அறிந்துகொண்டனர்.

இரும்பு பொன் என்ற இரண்டிலும்  பொன்னையே அவர்கள் முதலில் அறிந்திருந்தனர்.  இரும்பு பின் வந்தது,   ஆகவே அதை இரும்பொன் என்றனர். இரும்பொன் என்றால் பொன்னை விடப் பெரியது என்று பொருள்.  இப்படி ஒப்பாய்ந்து பெயரிடுவதென்றால் பொன் முன் வந்தது என்ற பொருள்  சொல்லாமல்  விளங்கும்.

இரும்பொன் என்பது பின் இரும்பு என்று திரிந்தது   - நல்லபடி சொல்லானது.

துரு என்பது இரும்பைத் துருவிச் செல்வது. முதனிலைத் தொழிற்பெயர்.  எண்ணெய் சாயம்  போலும் பொருள்களால் தடையேதும்  ஏற்படாவிட்டால் துரு இரும்பைத் தின்றுவிடும்.  ஆனால் நாளாகலாம்.

இரும்பு நல்லது;  துரு கெட்டது என்று மக்கள் அறிந்துகொண்டனர்.  எளிதில் அப்போது கிட்டாத இரும்பை  அருந்துபொருள் துருவும் துருவாகும். இதிலிருந்து  துரு துர் என்று குறுகிக் கெடுதலை அறிவித்தது.

எடுத்துக்காட்டு:  துரு > துர்.     பலன் -   துர்ப்பலன்.
அதிருட்டம்  -   துரதிருட்டம்.

துரோகம் என்பதென்ன?  துரு ஓங்கிய நிலையே துரோகம் ஆகும்.

துரு =  கெடுதல். (பெறப்பட்ட பொருள்)
ஓகம் =  ஓங்கிய நிலை.

ஓ > ஓங்கு
இடைக்குறைந்து :  ஓகு.     பின்:  ஓகு+ அம் -  ஓகம்.

துரு+ ஓகம் =  துரோகம்:  கெடுதல் ஓங்கிய செயல்.

சொல்லமைப்பை ஆய்ந்து பெறப்படும் பொருள் இன்றைய வரையறவுக்கு ஏற்றதாய் முழுமையானதாய் இருக்கும் என்று எதிர்பார்க்க இயலாது. இதனைப் புரிந்துகொள்ளாத கற்போன் எவனும் ஓர் அறிந்த ஆசிரியனிடம் மேலும் விளக்கம் பெற்றாலே முடியும். இங்கு சொல்லமைப்புப் பொருள் சொற்பொருளினை நோக்கச் சற்றுப் பொதுமை வாய்ந்ததாய் உள்ளது. சரி, ஸ்பீக்கர் (  நாடாளுமன்றத் தலைவர் )  என்ற சொல் பேசுவோன் என்றுதானே  பொருள்படுகிறது.  அதன் சொற்பொருளுடன் அது ஒத்து நிற்கவில்லை அன்றோ?  அதனை நன்கு அறிந்துகொள்ளச் சொல்லியல் அறிவுடன் வரலாற்றறிவும் தேவைப்படுகிறதே!

இங்கிலாந்தில் மக்கள் பதிலாளர்கள்  வைத்த கோரிக்கைகளை, தெரிவித்த கருத்துக்களை அரசரிடம் அல்லது அரசியிடம் சென்று தெரிவித்தவரே  பேசுவோனாகிய ஸ்பீக்கர். மற்ற பொதுவர்கள் (காமன்ஸ்)  அரச அரசிகளைக் காணற்கு "அருகதை" அற்றவர்கள். இப்படியே ஸ்பீக்கர் என்ற சொற்பொருள் உருப்பெற்றது.  சில சொற்கள் கால ஓட்டத்தாலும் வரலாற்றுப் பின்னணியாலும் தம் பொருளைப் பெறுகின்றன.  இத்தகைய பொருளைப் பெறுபொருள் என்று குறித்துள்ளேம்.  புகார்மனு, புகார் என்ற சொற்களின் பொருளை விளக்கியுள்ளேம்.  உருது கிருது ஒன்றுமில்லை. இப்போது புகார் என்ற சொல்லை எந்த மொழியினரும் பயன்படுத்தலாம்.

அறிந்து மகிழ்க.

சில எழுத்துப்பிழைகள் சரிசெய்யப்பட்டன.
பிற தோன்றின் (  மென்பொருள் தன்- திருத்தத்தால் ) உரிய நேரத்தில்
செம்மையுறும்.
 

சிறுமி கொலை - குற்றவாளி பிடிபடுவானா?

நோக்குங்கால் யாவரும்  கால்களுடன் கைகளுடன்
பார்க்கவிரு கண்களுடன் பண்பமை  ----  நீக்கமுடன்
ஞாலமேல்  உள்ளார்   ஞயமுடையார்  யார்யாரோ
காலமும் சொல்லா விடை.


விராலிமலை புதுக்கோட்டை வீட்டின்  முன்னே
விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தன்னை
வராதவொரு வன்னெஞ்சன் வந்து கண்டு
வளைத்தாழ்த்திப் பிடித்திட்டான்  கொண்டு சென்றான்
உறாததுயர் உறப்போவ தறிந்தி   டாத
ஒண்சிறுமி கண்டமதை அறுத்து க் கொன்றான்
இராதுவெளித் துணையுமிலர் சிறார்கள் சற்றும்
ஏற்பிலாத  தெருக்களியில் தவிர்ப்பீர் ஆட்டம்!


( இந்த வழக்கில் காவல்துறை குற்றவாளியைப்
பிடித்துவிட முடியுமா --  என்பது தெரியவில்லை. )


இராது - வீட்டுக்குள் இருக்க மாட்டாமல்.

வியாழன், 25 அக்டோபர், 2018

விகுதி விகாரம்

இன்று விகாரம் என்ற சொல்லை நோக்குவோம்.


இதன்  முந்துவடிவம் மிகாரம் என்பது.


இச்சொல் இப்போது இல்லை. மொழியின் நெடிய ஓட்டத்தில் இறந்துவிட்ட சொற்களில் இதுவுமொன்று.   (இது மீட்டுருவாக்கம்.)


இது மிகு+ ஆர் + அம் என்று பிரியும்.


மிகுதல் என்பதன் பொருளாவன:


அதிகமாதல்
மிஞ்சுதல்
பொங்குதல்
சிறத்தல்
பூரித்தல்.


ஆர்தல் என்பதன் பொருளாவன:


நிறைதல்
புசித்தல்
பொருந்துதல்
அடைதல்
ஒத்தல்
தங்குதல்
அணிதல்.


மிகரத்தில் தொடங்கும் சொல் விகரமாதல் உண்டு. இது வருக்க எழுத்துக்களுக்கும் பொருந்துவது.


எடுத்துக்காட்டுமிஞ்சுதல் விஞ்சுதல்மினவுதல் வினவுதல்.
வானம் என்பதைச் சிற்றுரார் மானம் என்று சொல்வர்.   >< .
விழித்தல் என்பதை முழித்தல் என்றும் பேச்சில் கூறுவர்
( இகரம் ஏறிய மகர(ஓற்று)த் தொடக்கத்துச் சொல் உகரமேறிய மகர(ஓற்று)த் தொடக்கமாக வருவது   மிண்டுதல்  - முண்டுதல் என்பதிற் காண்க ). 
மகரத்துக்கு வகரம் பாட்டில் மோனையாகவும் வரும்.


மிரட்டு என்பதும் வெருட்டு என்று திரியும்விரட்டு என்றும் திரியும்.


மிகு + ஆரம்  எனின்   அதிகமாகி, அல்லது மிஞ்சி அல்லது சிறப்படைந்து  பொருந்தும் சொல் என்று பொருள்மிகு என்பது விகு என்று திரியவே, விகு+ ஆரம் என்பது விகாரம் ஆயிற்று.

அதிகமாகி:    விகுதிபெற்று நீட்சி பெறுதல்.
மிஞ்சிஎழுத்துக்கள் குறைந்து, அதன் காரணமாக மிஞ்சி இருக்கும் சொல். இவை பெரும்பாலும் குறைச்சொற்கள்-டுமயங்குவது (யங்குவ)து = மதுஇதில் நாலெழுத்துக்கள் குறைந்தன.   கபோதி:   கண் போன திக்கற்றவன். இதில் மூன்று பதங்களில் எழுத்துக்கள் குறைந்தன
சிறப்படைந்த நிலைதப்பு + அம் தபு அம் தபம் > தவம்உலகியல் துன்பங்களிலிருந்து தப்புவதற்காகச் செய்வதே தபம் அல்லது தவம்தப்புதல் என்பது இடைக்குறைந்து தபுதல் ஆனதுபின் தபம் > தவம் என்ற சொல் அமைந்தது.


இவ்வாறு ஆகும் சொல் மூலத்துடன் வேறுபடும்ஆகவே விகாரம் என்பது
வேறுபாடு என்றும் பொருள்படும். பல்வேறு விகாரங்களை இலக்கண நூல்களிற் காண்க.


வி என்ற ஓரெழுத்துச் சொல்லும் வேறு என்ற பொருளுடையதே.


வி + கு + ஆரம் என்றாலும்வேறுபாட்டில் பொருந்துவது என்பதே. இங்கு வந்த
கு என்பது அப்போது சொல்லாக்க இடைநிலை ஆகும்.


மிகுதி > விகுதி என்றாலும்வி + (கு) + தி விகுதி,   வி +( கு ) + ஆரம் = விகாரம் என்றாலும் ,   மிகு + ஆரம் = மிகாரம் > விகாரம் என்றாலும் ஒன்றுக்கு மேற்பட்ட வழிகளில் வேறுபாடு என்பதே பொருள்முடிபாகும். இங்குச் சொல்லாக்க இடைநிலைகளைப் பிறைக்கோடுகளுள் இட்டுள்ளேம்.


மி என்ற அடிச்சொல்லும்   வி என்ற ( விண் முதலிய சொற்களைப் பிறப்பித்த ) அடிச்சொல்லும் மி > வி என்ற திரிபு வசதியும்  மேல் என்ற அடிச்சொற்பொருளும்  விகாரம் என்பது தமிழே என்பதை உறுதிசெய்கின்றன.
மி- (மிசை) = மேல்வி (விண் ) = மேல்.அடிச்சொற்கள் : மி வி.


வேறு என்ற  சொல் மேலை மொழிகட்கும் பரவியதுஅது  வேரி   (vary ) என்ற ஆங்கிலச் சொல்லில் தெரிகிறதன்றோ?  Also consider: prevaricate,  meaning speak or act evasively.  (Actually means speaking of something different instead of going to the point raised ).  pre-vari-cate. You may have other examples.


வேறு  வேற்று வேத்து > வேத்தியாசம்  >   வித்தியாசம்  என்பதை இன்னொருகால் விளக்குவோம். வே வி.  Please see closeness in meaning: வே(ண்டு) :  வி(ழை).  வே - வி.    இதைப் பின் விளக்குவோம், எழுதி முடிக்கவேண்டியிருப்பதால்.


வேதம் என்பதற்குத் தரப்படும் சொல்லமைப்பையும் காண்க:   வித் > வேதம்வி >வே.


எனவே வேத்தியாசம் - வித்தியாசம் என்று யாம் காட்டியதில் வியப்படைவீரோ?


விகாரம் என்பதில் வி என்றாலே  வேறுபாடுதான்.   பிற விளக்கங்கள் அதன் திரிபயணம் விளக்குபவையே ஆகும்.


பதி + அம் = பதம்பொருள் பதிந்தது; பொதிந்தது.


அறிவோம்; மகிழ்வோம்.

திருத்தம் பின்.