திங்கள், 30 ஏப்ரல், 2018

பிரசாதத்தில் பல்லி.....

கோயிலில் பத்தகோடிகட்குத் தரப்பட்ட  அருளுணவில் பல்லி கிடந்து அதை உண்ட பலர் நோய்வாய்ப்பட்டனர்,  இச்செய்தியை கவிதையாய்த் தருகின்றன இப்பாடல்கள்,  கவனம் தேவை என்பதே யாம் சொல்வது.  எப்படி இதைச் செய்யப்போகின்றனர் என்பது தெரியவில்லை. பல்லிகள் எங்கும் இருப்பவை.


பல்லி விழுந்தால் பரமன் அருட்சோறு
சொல்ல அழவருமோர் சூழ்நலக் கேடாக்கும்;
நல்லதைச் செய்கின்ற நாட்டமே கோயிலிற்
புல்லிதாய்ப் போச்சே புகல்.

வாந்தி தலைவலி வாய்கோணி வீழ்ந்தனர்,
ஏந்தி இவர்களைப்போய் இட்டனரே நோய்மனையில்;
ஓந்தி சிறுபல்லி வீழ்ந்தாலும் ஊண்கெடுமே;
தேர்ந்தமேற் பார்வையே தேடு.

குறிப்பு:   இத்தகைய பல்லிகள்  விடம்  அல்ல என்று
அறிந்தோர் கூறுகின்றனர். உலகில் ஒரே வகைப்
பல்லி தான் விடமுள்ளதாம். அது அமெரிக்காவில்
ஓர் ஆற்றுப் பக்கம் உள்ளதாம். இதில் விழுந்த
பல்லி  சும்மா பூச்சிகளைப்  பிடித்துத் தின்னும்
பல்லியாம் . இருந்தாலும் இறந்தது,  நாறிப்போன
 எதுவும் உணவில் கலந்தால்  உணவு நஞ்சாகும்.
இந்தச் செய்தியை அப்படித்தான் எடுத்துக்கொள்ள
வேண்டியுள்ளது. 


More at:

food poisoning: 73 hospitalised after taking 'prasadam' in Tamil Nadu ...

73 Hospitalised In Tamil Nadu, Claim "Lizard" Found In Temple's

Lizardfoundin`prasadam' -ANDHRA PRADESH TheHindu

The spotting of a lizard in a packet of 'prasadam' caused panic among the 
pilgrims at Venkateswara Swamy temple at Dwaraka Tirumala in West 
Godavari district on Sunday. A pilgrim, Prabhu from Eluru, w.
The Hindu : Lizard in prasadam, four taken ill


குடிப்பெயர்கள்

பல நாடுகளில் மக்களுக்குக் குலமும் கோத்திரமும் உள்ளன. இல்லையென்றால்தான் அது ஒரு வியப்புக்குரியதாகத் தெரியும்.  காரணத்தைக் கேளுங்கள். மிகமிகப் பழங்காலத்தில் மனிதர்கள் காட்டிலும் மலைகளிலும் திரிந்து துன்புற்ற அந்தத் துன்ப நாட்களில் இரவு நேரத்தில் ஒரு குடும்பத்தினர் ஒரு மரத்திலோ ஒரு குகையிலோ தங்கினர்.  மரத்திலேற முடியாத நொண்டிகளாய் இருந்தால் மரத்தடியில் கிடப்பர். கரடி புலி முதலியவை வரும், பாம்பு பூரான் முதலியவை தீண்டுமென்று அஞ்சிக்கொண்டேதான் வாழ்ந்தனர்.  ஒரு குடும்பத்துக்கு எப்போதும் ஒரு மரம் தங்குமிடமாகிவிட்டால் தெரியாதவர்களை அந்த மரத்தில் வந்து தங்க ஒப்பார். இந்த நிலையிலிருந்துதான் குலம் கோத்திரம் முதலிய வளர்ந்தன. ஒரு மரத்துக்குரியவர்கள் எதாவது ஒரு பெயரை வைத்துக்கொண்டு  உரிமை கொண்டாடிக் கொண்டிருந்தனர்.  அவர்களுக்குத் தெரிந்தவர்கள்  பக்கத்து மரங்களில் தங்கினர்.  அவர்களின் குலத்திற்கு  ஏதாவது ஒரு பெயர் இருந்திருக்கும்.  அந்தக் குலத்தின் தலைவனுக்கு முடி மிகுந்த நீட்டமாய் இருந்திருந்தால்  "  நெட்டுமுடி" என்றோ வேறு எப்படியோ ஒரு பெயர் இருக்கும். அவனைச் சேர்ந்த எல்லோருக்கும் நெட்டுமுடி என்றே குலப்பெயர் இருந்திருக்கும்.  அவர்களில் சிலருக்கு கட்டைமுடி இருந்தாலும் அதைப்பற்றி யாரும் கவலைப்படமாட்டார்கள்.

குகைகளில் வாழ்ந்தோருள்ளும் இப்படியே குலங்கள் தோன்றின.  குலம் என்றால் சேர்ந்து வாழ்தல்.  குல்> குலை;  குல் > குலம்.  குலை: வாழைகுலை; திராட்சைக் குலை. எல்லோரும் பச்சை இறைச்சி, பழங்கள் தின்று வாழ்ந்ததால் உயர்வு தாழ்வு ஒன்றும் இல்லை.  எல்லோரும் இரைதேடி உண்ணும் குருவிகளே.

அதிபர் கென்னடி என்பவர் அமரிக்காவின் புகழ்ப்பெற்ற அதிபர்.  கென்னடி என்பது அவர் குடும்பப் பெயர். இந்தப் பெயரின் பொருளைச் சிலர் தேடிக் கண்டுபிடித்தனர்.  "கென்னடி " என்றால் அசிங்கத் தலை என்று பொருள்படுவதைக் கண்டு வியந்தனர்.  ஜான் கென்னடி, ரோபர்ட் கென்னடி , எட்வர்ட் கென்னடி என்று இவர்களையெல்லாம் நினைவு கூரும்போது, அசிங்கத்தலை என்று யாரும் எண்ணுவதில்லை. நாளடைவில் சொல்லின் பொருள் மறைந்து அது வெறும் குறியீடாகவே பயன்பட்டது. மேலும் இப்போது பேசும் ஆங்கிலத்தில் கென்னடி என்ற சொல்லுக்கு அத்தகைய பொருள் ஏதும் இல்லை. அதனாலும் அது வழங்க வசதியாகிவிட்டது.  கேமரூன் என்ற பெயருக்குக் கோணல்மூக்கு என்று பொருள். இதைக் குடிப்பெயராக உள்ள இந்நாள் பெரியவருக்கு மூக்கு அழகாக உள்ளது.  ஆகவே அது வெறும் பெயர்தான்.  கோனலி என்ற குடிப்பெயர்க்கு வலியவன் என்று பொருளாம். இப்போது யாருக்கும் அந்தப் பெயரின் பொருள் தெரியாது.  ஏதேனும் ஒரு வரலாற்று நூலைப் பார்த்து என்ன பொருள் என்று யாரும் தேடுவதில்லை.

யாம் சந்தித்த ஒரு தமிழரின் குடும்பப் பெயர் " பம்பையர்" என்று பெயராம். கிணற்றிலிருந்து தண்ணீர் எடுக்கப் "பம்பு" வைத்திருந்த காரணமா?   பாம்பு வைத்திருந்ததால் பாம்பையர் என்று இருந்து பின் பம்பையர் என்று குறுகிவிட்டதா,  ஐயப்பன் கோவில் அருகில் உள்ள பம்பை நதிப் பக்கத்திலிருந்தவர்களா....... என்னவென்று அவர்களுக்கே புரியவில்லை.
ஒன்றும் புரியாத பெயரானால்தான், அதில் ஏதோ புரியாதது இருக்கிறதென்று எல்லோரும் போற்றும்படி நேர்கிறது. இல்லாவிட்டால் கோணல்மூக்கு என்ற பொருள்கூறும் பெயர் குதூகலம் தர வாய்ப்பில்லை.

காந்தி என்ற பெயர் அழகான ஒலி நயம் உடைய பெயரென்றாலும், அதன் பொருள் வாசனை விற்பவர்கள் என்ற பொருளுடையதாம். ஒலியில் உள்ள உயர்வு பொருளில் இருப்பதில்லை.   நேரு என்ற பெயர் ஆற்றுக்கு அருகில் வாழ்ந்தவர்கள் என்று  பொருள்தருமாம்.  ஆகவே   நேரு என்பதற்கும் நீர் என்பதற்கும் உள்ள நெருக்கம் புரிகிறது.. ஆறு என்பது நீரோடும்வழியைக் குறிக்கிறது. பொருளால்  அதுவே நேரு என்பது.    நீர்> நீரு.> நேரு.  காசுமீரில் இவர்கள் ஆற்றுப்பக்கத்து வாணர்களாய் இருந்தனராம்.  இங்கு வருமுன் அவர்களின் குடும்பப் பெயர் வேறு என்று தெரிகிறது.  சிலர் கவுல் என்று நினைக்கின்றனர். மிர்சா என்ற முஸ்லீம் குடிப்பெயர்  "அமீர் ஷா" என்பதன் திரிபாம்.  இது கடற்படைத் தலைவர் என்று பொருள்படும் என்பர்.  நல்ல பதவியைக் காட்டும் பெயர்தான். அட்மிரல் என்ற ஆங்கிலச் சொல் அமீர் என்பதிலிருந்து பெறப்பட்ட தாகும்.  காலிங்கராயர் என்ற குடிப்பெயரும் கலிங்க அரசாட்சியில் பங்கு பற்றியோர் என்ற  பொருளைத் தருகிறது.

வால் என்ற சொல் தூய்மை என்ற பொருளுடையது.  மிகி - மிகுந்தோர்.  எனவே வால்மிகி என்பது பொருளின்படி ஓர் முனிவர் என்று பொருள்தரவேண்டும்.  மேலும் முதற் பெருங்கவி அவராதலின்  நல்ல பொருளையே அது தமிழில் தருகிறது. அவர் இராமாயணம் பாடியதற்கு ஏற்ற பெயராகிறது.  அது பின் சாதிப்பெயராய் ஆயிற்றா அல்லது முன்பே அப்பெயரில் அம்மக்கள் இருந்தனரா என்று தெரியாது.  பாணினி பாணன் ஆதலின் அவனும் எடுத்த எடுப்பில் கவிபாடும் ஆற்றல் உள்ளவன் என்றே தெரிகிறது.  இலக்கணம் இயற்றுமளவிற்குப் பேரறிவு படைத்தவன் அக்கவி.

பரஞ்சோதி என்பது இயற்பெயராய்த் தெரிகிறது.   சுவ என்பதி சிவ, சிவப்பு, செகப்பு, செம்மை, என்றும் பொருள்தரும்.  சிவப்பு என்பதைச் சுவப்பு என்று கூறுதல் உண்டு, சொக்கன் என்பது சிவனின் பெயர். சோபித்தல் என்பது ஒளிதருதல். தொடர்புகொண்ட சுவதி என்ற சொல்லே பின்னர் சோதி* என்றானது.  சோனல், சோனாலி என்ற பெயர்களையும் காண்க. பரஞ்சோதி என்றால் இறையொளி. பரஞ்சோதி என்பது இனிய பெயர். ஆனால் குடிப்பெயர் அன்று என்று தெரிகிறது.

சில குடிப்பெயர்கள் நற்பொருளுடையவை.  சில அல்லவெனினும் அவற்றின் பொருள் நோக்குங்கால் அறிய இயலாமையின் அவையும் தொடர்கின்றன.

திருத்தம் பின்.
காணப்பெற்ற பிழைகள் சில, திருத்தப்பெற்றன.  28.12.2018


ஞாயிறு, 29 ஏப்ரல், 2018

கத்தியும் சத்திரியரும்.

கத்தி என்பது  ஒரு பேச்சுவழக்கில் எழுந்த சொல். இந்தச் சொல் கற்காலத்திலிருந்து தமிழில் வழங்கிவரும் சொல் என்பது  அதன் அமைப்பைப் பார்த்தால் நன்' கு புரிந்துகொள்ளலாம்.

இந்தியக் கற்காலமென்பது ஏறத்தாழ கி.மு. 1200க்கு  முந்தியது  என்பர். ( Before  Circa 1200 BCE -  1000 BCE. ).  முதலில் பொன்னைக் கண்டுபிடித்தார்களா இரும்பைக் கண்டுபிடித்தார்களா என்றால்,  பொன்னையே என்று ஊகிக்க வேண்டும். சொல்லாய்வுப் படி  இரும்பின் பெயர் "இரும் பொன் " என்பதன் திரிபு.  பொன்னை அறிந்தபின் இரும்பை அறிந்தபோது அதைப் பெரிய பொன் என்றனர் தமிழர்.  இரு (ம்) -  பெரிய. பொன் . -  சற்றுக் கலப்பான தங்கம். தூய தங்கம் சீனர்கள் பயன்படுத்துவர் .

இரும்பு ஆயுதங்களைப் பயன்படுத்த அறியுமுன் தமிழர்கள் கல்லால் ஆன ஆயுதங்களைப் பயன்படுத்தினர்.  கூரான கல்லைக் கொண்டு, தமக்கு வேண்டிய பொருள்களைப் பிளந்து துண்டுகளாக்கினார்கள்.  ஒரு பொருளைப் பகுத்துத்  துண்டாக்குவதற்குப் பயன்படுத்திய கல்லே கத்தி ஆனது.

கல் >  கல்+தி >  கல்த்தி >  கத்தி.

கத்தி பிற்காலத்து இரும்பால் செய்யப்பட்டது.  கல் என்ற சொற்பகுதி மறக்கப் பட்டது .  அது நல்லதே.

( சேலை என்ற சொல்லுக்குப் பொருள் மரப்பட்டை என்பது.  இப்போது நூலால் செய்து அணிந்தாலும் பெயர் அதுதான்.)

( சறுக்கி அருகில் செல்வது  சறுக்கரம்.  பின் உருளையால் அமைந்தாலும் அது சறுக்கரம் தான்.  அது சக்கரம் என்று திரிந்தது. )

இச்சொல்லில் இருக்கும் ல் என்ற ஒலி தி என்ற விகுதியின் வரவுக்குப்பின் ஒரு தடைபோலுமிருப்பதால் அது விலக்கப்பட்டது. இப்படித் தகர வரவால் லகர ஒற்று  மறைந்த சொற்கள் பலவாகும். (  நமது முன் இடுகைகளைப் படித்துப் பட்டியல் போட்டுக்கொள்ளலாம் ).

கல்+தி > கற்றி > கத்தி என்று காட்டினும் அதே.

வெற்றி என்ற எழுத்துமொழிச் சொல் வெத்தி என்று பேச்சில் வருவது போலுமாம்.  சிறு அம்பலம் என்பது சிற்றம்பலம் ஆகிப் பின் சித்தம்பலம் > சிதம்பரம் ஆகிவிட்ட திரிபுகளையும் அறிக.  அம்பரம் என்பதை ஈண்டு விரிக்கவில்லை.

கத்தியிலிருந்து யாமெடுத்துக்கொளவது கத்திரியர் என்ற சொல். இதுபின் சத்திரியர் என்று மாறி அயல் நூல்களுக்கும் சென்றது.

கத்தி கொண்டுபோராடும் தொழிலை மேற்கொண்டோர்,  கத்திரியர்.
கத்தி + இரு + இ + அர்.   கத்திரியர்,  பின் சத்திரியர்.   இதன் முன்பொருள் கத்தியுடன் இருப்போர் என்பது.  க - ச  திரிபு .   சேரலர்  >  கேரளர்  என்பது உதாரணம் .

கத்தியுடன் இருப்பவனைக் குமுகம் ஒருகாலத்தில் உயர்வாகக் கருதவில்லை.  இந்தக் காலம் மனுவின் காலத்துக்கு முன் ஆகும்.  மேலும் இறைவனை உணர்ந்தோர் போல் இவர்கள் அமைதியான குணம் உடையவர்களாகவும் இருக்கவில்லை.  கொலை முதலியன செய்ய அவர்கள் தயங்கியதும் இல்லை. "  மண்டை ஓடுகளின் மேலே நடந்து மண்டலத்தை ஆண்டவர்கள் " என்று கவியரசு கண்ணதாசன் எழுதியது இவர்களைப் பற்றித்தான். ஆனால் சட்டத்துறை அறிஞர்கள் தம் சிந்தனைக் கட்டுரைகளில் சொல்வதுபோல் முதலில் வலக்காரத்தால் நாட்டையே அலைக்கழித்தாலும் இறுதியில் அமைதியை நிலை நாட்டி, ஆட்சியை ஏற்படுத்தி முடி சூடியபின் ஒழுங்கை நிலைநாட்டிவிட்டால் கத்திரியர் ( கத்தி வைத்திருந்தாலும் குண்டுகள் வைத்திருந்தாலும் )  அல்லது ஆயுதபாணிகள்  அரசர்களாய்
உயர்ந்துவிடுகிறார்கள் என்பதை அறியவும். (When social order sets in and peace prevails,  legitimacy returns. )

குழப்பமான காலங்களில் நீதி  சட்டம் ஒழுங்கு என்பவை நிலை நாட்டப் படுதல் பற்றி இங்கிலாந்தின் டென்னிங் பிரபுவும்  பிரபுக்கள் அவையும் தந்த நீதி  முடிபுரைகள் சிந்தனைக்  கருவூலங்கள். (Lord Denning M R in the English Court of Appeal and House of Lords on a Rhodesian case ).  ஒரு காலத்தில் கெட்டது  இன்னொரு காலத்தில் நல்லதாகிவிடும்.

அச்சமே இல்லாதவனுக்குக் கத்தி எதற்கு?  இந்த வகையில், கத்தி இருப்போர் அச்சமுள்ளோர்.   இரிதல்:  அஞ்சுதல்.  இரிபு:  அச்சம். இன்னும் பிற பொருளும் உள்ளன.

ஆகவே கத்தி + இரியர் என்பதை  கத்தியுடன் அஞ்சி நின்றோர் என்றும்  பொருள் கொள்ளவேண்டும்.

இருப்போர் அச்சமுள்ளோர்.  பணம் இருப்போர் அஞ்சுவர்.  கத்தியிருப்போர் அஞ்சுவர்.

கத்தி + இரு  அல்லது கத்தி இரி என்று எப்படிக் கொண்டாலும் பொருள் அதுதான்.  கத்தி வைத்துக்கொண்டு ஆட்சி செலுத்தியவர்கள்.

நாம் கத்தி + இரு + இ + அர்  என்பதையே இங்கு கொள்கின்றோம்.

சத்திரியர் என்ற சொல்லுக்குச்  சரியான பொருள் தமிழே தரும்.

In the end:  அச்சத்தைப் போக்கியது  ஆட்சியை ஆக்கியது கத்தி

அறிக மகிழ்க.

மெய்ப்பு  - பின்னர்.