புதன், 6 செப்டம்பர், 2017

சங்கம் தமிழ்ச் சொல்லா?



தங்கு-வும் சங்கு-வும்.

இதன் பிறப்பை அறியவிரும்பினால், மிக்க எளிதாகவே அறிந்துகொள்ளலாம். தங்கு  என்பதில் இருக்கும் முதல்   “தம்” என்பதாகும்.  தன் என்பதோ தம் என்று திரிந்து பன்மை காட்டியது. தொடக்கத்தில் பன்மை யாக அமைந்தது பின் பணிவுப் பன்மையாக ( மரியாதை ) மாறியமைந்தது. எவ்வகைப் பன்மையாகினும்  பன்மையே யாகும்.

ஒன்றுடன் இன்னொன்று  சேர்ந்தாலே பன்மை. இதற்குத் “தன்”னுடன் இன்னொரு “தன்”  இணைந்து தம் ஆகவேண்டும்.  மொழிவரலாற்றின் பிற்பகுதி நிகழ்வுகளின் படி "தம்" மரியாதைப் பன்மையாக உருமாறித் தன் முழுப்பன்மைத்தன்மையை இழந்ததனால், "~கள்" விகுதி இணைக்கப்பட்டது.  தங்கள் ஆயிற்று.  ~கள் விகுதி உயர்திணையில் வந்திணைவது பண்டை வழக்கன்று.
தான் (தன் ) ஒரு வீட்டிலிருந்தால் அவ்வீட்டில் இன்னொரு தான் (தன்) வந்திணைந்து,  தம் ஆகிய நிலையிலே,  இவ்வசைவு குறிக்க “கு”  இணைக்கப்பட்டது.  கு என்பது நகர்வும் அடைவும் காட்டும் சொல்.  “சென்னைக்கு”   “மதுரைக்கு”  “பூண்டிக்கு” என்று,  பேச்சு நிகழுமிடத்தினின்று இவ்விடங்களுக்குக் செல்லுதலையும் சென்றடைதலையும் “கு” என்ற சிறு சொல் குறிக்கிறது. இப்பொருளிலேதான், தன்னுடன் இன்னொரு தன் இணையத் தம் ஆகி அவ் வியங்குதல் குறிக்க கு இணைந்து “ தங்கு”  என்ற சொல் அமைந்தது.

தகரத்தில் தொடங்கியது  சகரமாகத் திரியும். இதைப் பல இடுகைகளில் தெரிவித்துள்ளோம்.   தசை > சதை என்பது ஓர் எளிய உதாரணம்.1    சனி கிரகத்துக்கு தனி என்ற சொல்லிலிருந்து பெயர் அமைந்தது.   தனி> சனி.  சனி என்பது பிடித்தால் விடாத தனிச்சிறப்புடையது என்பர் கணியர் (சோதிடர்).  கருப்பு நிறமாதலின் காரி என்பதும் பண்டைப் பெயராகும்.    ஆக,  தனி > சனி என்பதறிக.

இப்பெற்றியினாலே  தங்கு என்பது சங்கு என்று மாறியது.   சங்கு என்பது ஒரு கூடு.  அதில் ஓர் உயிர் கூடி வாழ்கின்றது.   ஆகவே,   தம் > சம் > சங்கு ஆனாது. புலவர் கூடி அரசனுடன் வைகிய இடம் சங்கம்  ஆயிற்று.. சின்னாட்களாவது தங்கி அரசுவிருந்துண்டு பரிசில் பெற்றுச் செல்லும் கூட்டம்  சங்கம்.  புலவர் பலர்  அங்கேயே தங்கிச் செல்ல,  சிலர் நிரந்தரமாகத் தங்கினர்.    மாங்குடி மருதனார் (சங்கப்புலவர்)  போல. உலகமொடு நிலைஇய   பலர்புகழ் சிறப்பின்  புலவர்கள் அவர்களாவர்.
இற்றை நிலையில் "சங்கம்" என்ற்பாலது  தேசிய சேவை செய்துவரும் சொல்.
இது நம் பழம்பெருமையின்  இன்னும் மாறாத அறிகுறியாகும்.

வேறு சொற்களுடன் அடுத்துச் சந்திப்போம்.

----------------------------------------
1. (  உது + ஆர் + அணம்..  உது = முன் நிற்பது;  ஆர்தல் = நிறைதல் ; அணம் = ஓர் தொழிற்பெயர் விகுதி ).  

கள்ள மென்பொருள் நுழைத்த பிழைகள் திருத்தப்பட்டன..
அவை மீண்டும் வந்து இடுகையில் மாற்றங்களை விளைவிக்கலாம்.
இன்று 9.5.2018 

சில மாற்றங்கள் கள்ள மென்பொருளால் உண்டாக்கப்பட்டுள்ளன. அவற்றை திருத்தியமைத்துள்ளோம். இன்று 7.9.2018.   இன்று எம் உலாவி ஓடவில்லை யாதலால் அது பழுதுபார்க்கப்பட்டு "விண்டோஸ்" அமைப்பும் பின்மைத்திருத்தம்  restore  செய்யப்பட்டுள்ளது.

திங்கள், 4 செப்டம்பர், 2017

சாமான் ( உயிரற்ற பொருள் வகைகள் )



சாமான்  என்னும் பொருளைக் குறிக்கும் சொல் அமைந்தவிதம் காண்போம்.

ஆங்கில மொழியில் inanimalte   objects  என்றொரு சொல் உள்ளது.  இதன் பொருள் “உயிரற்ற பொருட்கள் “  என்பது .   இத்தகைய பொருட்களை  உயிரற்றபொருட்கள் என்றே குறிப்பிடலாம் என்றாலும்,  கடை, பொருட்கிடங்குகள் முதலியவற்றில் இப்படிச் சொல்வது ஏற்புடையதாகத் தெரியவில்லை. பண்டக சாலைகளில் உயிர்ப்பொருள்கள் எவையுமில்லை -  வேலைசெய்யும் மனிதன் தவிர. மக்களின் பயன்பாட்டுக்கு  ஓர் இயல்பான சொல் தேவைப்பட்டது.

பொருள் என்ற சொல், பல விரிந்த அர்த்தங்களை உடைய சொல்.  அதையே சாமான்களுக்குப் பயன்படுத்துவது பொருத்தமாகத் தெரியவில்லை.
ஆகவே ஒரு புதிய சொல் பிறப்பிக்கப்பட்ட்து.

சா   -  உயிரற்ற.
மான் -   ஒத்தது. 

மானுதல்= ஒத்தல்.  மானுதலென்பது மதிப்புடையது
என்றும் பொருள்பட்டதால் இதன்  காரணமாகவும் மான் என்ற இறுதி மிகவும் பொருந்தியது. யாரும் பிரித்துப்பார்க்காத நிலையில் சாவு, ஒத்தது என்ற  அர்த்தங்கள் தோன்றி யாரையும் வருத்தவில்லை!!

மனிதனின் மதிப்பைக் குறிக்கும் மானம் என்ற பழைய சொல்லும் மான்
என்பதனடிப் பிறந்தசொல்லே.

ஆகவே  சாமான் என்ற சொல் வழக்கில் விடப்பட்டது.
இது வேற்றுமொழிச்சொல் என்று நினைத்துக்கொண்டனர்.   அதனால்  ஏதும் நட்டமில்லை. அப்போது ஒரு சொல் வேண்டுமேதவிர
மொழிப்பிறச்சினை  (பிரச்சினை அன்று ) எழவில்லை.
படித்து மகிழ்க.

இது ஜாமான் என்று எடுத்தொலிக்கப்பட்டது பெரும்பான்மை.  சீனாவிலிருந்து நாமறிந்துகொண்ட சீனி, கேரளத்தில் ஜீனி என்றானது போல.   சீனா > சீனி.   இது சில் > சின் > சீனி ( சிறு துகள்கள்)  என்றானது என்பாரும் உளர். எவ்வாறாயினும் இது வழக்கிலுள்ள சொல்லே.

பணமில்லாதவன் பிணம் என்ற கருத்தினின்று தோன்றியது சா+ மான்+ இயம் என்பது.  இ+ அம் = இயம். இருவிகுதி ஒட்டு.  சாமானியம் - சாவினை அல்லது செத்தோரை ஒத்த தன்மை. மக்களாயின் அவர்கள் சாமானியர், ஏழைகள்.


மறுபார்வை:  18.4.2019

ஞாயிறு, 3 செப்டம்பர், 2017

விமலா



விமலா என்பது அழகான ஒரு பெண்ணின் பெயர்
இப்போது இந்தப் பெயர் உள்ளவர்கள் பலர் உள்ளனர்.
கடுமை மிக்க இலக்கணம் படித்த புலவருக்குச் சில வேளைகளில் புரியாதுதான்.

சொற்களை எடுத்து வெட்டி ஒட்டிக் கட்டி அரைத்துக் குழைத்துk கரைத்து ஊற்றவேண்டும். இலக்கணத்துக்குள்ளேயே இருந்தால் எப்படிக் கண்டுபிடிப்பது. புதுச்சொற்களை உருவாக்கி விட்டு அதை உலகின் வேறு ஏதாவது ஒரு மூலையில் உள்ள ஒரு மொழியின் பெயரைச் சொல்லி அந்த மொழியினுடையது எனல்வேண்டும்.   அவனால் கண்டுபிடிக்க முடியாது.
இப்படி அருகில் உள்ளவனைச் சுற்றிவிடுவதும் ஓர் ஆன்ந்தம்தான்.  

னாம்@ அதைக் கண்டுபிடிக்க முயன்று அல்லல் படுகிறோம்.  

விழு மலர் என்றால் விழுமிய மலர்; சிறந்த மலர்.
மலர் என்பதை மலா என்று மாற்றுக.
விழு என்பதில் ழுவை வெட்டி எறிக.
விமலா என்ற அழகிய சொல் கிடைத்துவிட்ட்து.
இப்படிப் பிற மொழியினரும் பெயர்களை அமைக்கிறார்கள்>
பெயரில் ஒரு நல்ல பொருளிருக்கவேண்டும் என்பது தமிழர் கொள்கை; இந்தியர் கொள்கையும்கூட.
நல்ல ஒலிநயம் போதும்;   கவர்ச்சி வேண்டும் என்று நினைப்போர் உலகில்
பலர்.
பெயர் அடையாளத்துக்கு இடப்படுவது.   இதில் பொருள்கண்டு என்ன செய்யப்போகிறாய் எங்கிறான் ஒருவன்.  அவனவனுக்கு அது அது சரி.

@ இது பின் திருத்தப்படும்.  எழுத்துருவாக்கி வேலை  செய்யவில்லை/