வியாழன், 8 ஜூன், 2017

வேகமும் தீவிரமும்

உத்வேகம் என்ற சொல்லைப் பாருங்கள்; .

இதில் வேகம் என்பது தமிழ். உ என்பது சுட்டடி மூலச்சொல். உது: உந்து.   முன் செல்லும் வேகம்,  அதை உலகுக்கு அளித்ததும் தமிழே.

எதுவும் வெந்து சாம்பலாவதால் விரைவில் அழிந்துவிடும், எனவே
வேகுவித்தல் விரைவு குறித்தது. வேகு + அம் =  வேகம் ஆயிற்று.

நாளடைவில் இச்சொல் வேவிப்பதனால் மட்டுமின்றி எவ்வழியில் விரைவு நேரினும் அதைக் குறிக்கும் சொல்லாய் மாறியது.

தீயே விரைவுக்கு வழி என்பதைத் தீவிரம் என்ற சொல்லும் காட்ட‌
வல்லது.  இதன் முன் நிற்கும் சொல் தீ.  எந்த வாதமாக இருப்பினும்
பைய மெள்ள அணுகாமல் சுட்டுப் பொசுக்கும் வேகத்தில் செல்வதே
தீவிரம் ஆகிறது.விர் > விரை;  விர் >  விரம், விர்ரென்று போகிறான்
என்ற வருணனை விர் : விரைவு குறிப்பதே, விரைவு என்பதென்ன>
ஒரு மணிக்கூறினுள் முடிக்கத்தக்கதை ஒரு நிமிடத்தில் முடித்தால்
அதுவே விரைவுக்கு உதாரணம்,  எல்லா விரைவுகளும் காலச்சுருக்கத்தை அடிப்படையாகக் கொண்டவை,

ஆங்கிலத்தில் உள்ள எக்ஸ்டீரிமிஸம் என்ற சொல் நுனிக்குச் செல்லுதல் என்று பொருள்படுவது, ஒற்றை ப் பிறனுக்குத் தெளிவுறுத்துவதில் முழு இட அளவையும் எடுத்துக்கொள்ள வேண்டும்; ஆனால் மற்ற இடங்களினூடு செல்லாமல் நுனிக்குச்
சென்றுவிடுகின்றனர் அல்லது இறுதி நிலைக்கு ஏகிவிடுகின்றனர்
என்பது இதன் விளக்கம்,

எல்லாத் தீவிரவாதிகளும் எடுத்துக்கொண்டதை விளக்க ஒன்று காலத்தைச் சுருக்கிவிடுகிறான்; அல்லது இடத்தைச் சுருக்கிவிடுகிறான். அவன் சொல்வது சரியென்று ஏற்கும் வரை அவன் காத்திருப்பதில்லை.. அவனுக்கு அவன் கொள்கை உடனே ஏற்கப்பட‌
வேண்டும்.  இதையே இடச்சுருக்கமும் காலச்சுருக்கமும் காட்டும்
இச்சொற்கள் நமக்குத் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் வேக‌ம் மற்றும் தீவிரம் என்ர சொற்ள் விளக்கப்பட்டன, 

புதன், 7 ஜூன், 2017

உந்தி விளைப்பது தீவிர வாதமோ!

பழம்பெரு மைபல பயின்றொளிர் நாடுகள்
பல்கிய மண்ணே வல்கலை நண்ணிலம்;

சட்ட மெனபதைக் கட்டி எழுப்பி
அசத்திய நாடு மெசோபோட் டேமியம்.

அம்மு ராபி அமைத்திட் டருளிய‌
குற்றச் சட்டங்கள் எற்றெனக் கேள்நலம்.

இந்த நாடுகள் இற்றை நிலையில்
உந்தி விளைப்பது தீவிர வாதமோ.

உண்மை உணரா வண்க ணாளர்கள்
உளுத்துப் பெருகினர் உலகின் மீதில்.

ஈரான் மன்றிலும் தீவெடி கூட்டினர்;
ஆராத் துயரே அகலுள் அனைத்திலும்

பாரத எல்லையில் பதட்டம்; ஆங்கு
ஊரினர் யார்க்கும் கூருகுண் டச்சம்,

அன்பின் வழியது உயிர்நிலை மறந்தார்
துன்பில் துவண்டார் உலகும் இருண்டது;

இனி இவ் வுலகம் மீளுமோ
கனிதொலைத் தவர்க்குக் காயே உளதே.

செவ்வாய், 6 ஜூன், 2017

வாயு. வாய் என்ற‌ தமிழ்ச்சொல்

வாயு என்ற சொல்லைக் கவனிப்போம்.

பேச்சு வழக்கில் வாயு (காற்று) என்ற சொல் வருவதில்லை
என்றாலும் "வாயுபகவான்" என்று குறிக்கும்போது, வாயு 
என்ற சொல் வருகிறதுவாயு என்பது காற்று.   வாயிலிருந்து
வெளிவரும் காற்றையே தொடக்கத்தில் தமிழர் வாயு 
என்றது தெரிகிறது. இது பின் காற்று என்ற‌ பொதுப்பொருளில்
 வழங்கிற்று. எனினும் செந்தமிழாகக் கருதப்படவில்லை.

நிலவியலார் இப்போது காற்று ஓர் இடத்திலிருந்து கிளம்புவது என்று
சொல்வர். எனவே இடத்திற் பிறப்பது வாயு. வாய் என்ற‌
தமிழ்ச்சொல் இடம் என்றும் பொருள்படுவதால், வாயு என்பது 
"இடத்தில் தோன்றுவது" என்று பொருள்விரிக்க வசதிதருகிற 
சொல் ஆகும்

தமிழ் ஒரு காலத்தில் இந்தியா முழுமைக்கும் வழங்கிய மொழி என்பர் சில ஆய்வறிஞர். வாயு போலும் சொற்கள் எங்கும் வழங்குதல் காண்கையில் இஃது உண்மை என்றே அறிக. பிறமொழிகளிலும் இச்சொல் வழங்குவது தமிழின் பெருமைக்கு ஒரு சான்றாகும்.

Preview and edit not available.  We are just posting it. Read and enoy. Any errors will be
rectified later.  Sorry about this.