வெள்ளி, 30 செப்டம்பர், 2016

முப்பது தாண்டுமுன்னே


http://sivamaalaa.blogspot.com/2016/09/blog-post_2.html

தொடர்ந்து படியுங்கள்:


முப்பது தாண்டுமுன்னே முழுத்தொப்பை வெளியேள்ள‌
அப்பனுக் கப்பன்போலே அசைந்தாடி நடப்பதென்னே!
கப்பலும் ஆடாதன்றோ இப்படிக் கடலின்மீதே!
செப்பினோம் ஐயேநீரே  சேமமே காத்துக்கொள்வீர்.

அளவின்றி உண்ணோம் யாங்கள்

அளவின்றி உண்ணோம் யாங்கள்;
அடிசிலைச்  சமன்செய் துண்போம்;
களவில்லை நெஞ்சில் ஊணைக்
கருதியே வாழ்வ தில்லை;
இளைஞர்கள்  இதைச்சொன்  னாலும்
இவருடல்  எடையால் வீங்கி
அளிகமும் நலமும்  தேய்தல்
அனைவரும் அறிந்த தொன்றாம் .

பருத்தலோ பயனே இல்லை
பருகிடும்  இன்பம்  நீங்க
ஒருத்தரும் விழைவ தில்லை;
உண்மையும் இதுவே தானோ?
திருத்தம் மேற்கொள்வீர் இன்றே
தின்பதில் கொழுப்பு  சீனி
நிறுத்தியே காணின் யாக்கை
நீங்குமோ நலம்சேர்  வாழ்வே 






வீங்கு  வீக்கு !    

புதன், 28 செப்டம்பர், 2016

ற்று > த்து திரிபுகள்

ஆய அற்றம் > ஆய அத்தம் > ஆயத்தம்.
வெறு வேட்டு > வெற்று வேட்டு > வெத்துவேட்டு.

ற்று > த்து திரிபுகள் எண்ணிறந்தன. இவற்றை முன்பு எழுதியுள்ளோம்.
இவை மீண்டும் மீண்டும் எழுந்து காட்சி தருபவை.

சிற்றம்பலம் > சித்தம்பரம் > சிதம்பரம். இப்போது ஊர்ப்பெயர்.

ற்ற > த்த திரிபு.
ல > ர திரிபு.  plentiful in Tamil and other languages. includes SEA languages.