வெள்ளி, 12 ஆகஸ்ட், 2016

நடிகையர் வாழ்வெலாம்.....

நல்ல  பொருள்வரவு  நாளும்நோக்   காடியில்
சொல்லவும் ஒண்ணாத் துருவல்  பொதுப்பூ 
நடிகையர் வாழ்வெலாம் நாடுரிய நாடின் 
குடித்தனிமை கூறுதற்  கில் .

அரும்பொருள் :

நோக்காடி  - scanning device or scope.
துருவல் - intrusions
பொதுப்பூ -  பலரும் சொந்தமென்று நினைக்கும் பூ.
நாடுரிய - நாட்டுக்கு உரியவை
குடித்தனிமை  -   privacy as citizens
நாடின்  -  ஆராயும் பொது .
கூறுதற்கு  -  சொல்வதற்கு . 

அபூர்வம்

அபூர்வம் என்ற சொல்லைக் கவனிப்போம்.  இது எந்த மொழிச்சொல்லாக
இருந்தால் என்ன? நாம்  அன்றாடம் வழங்குகிறோம்.

புகு என்ற சொல்லைப் பேச்சு மொழியில் பூர் என்றுதான் சொல்கின்றனர்.
நலல கம்பிக் கதவு; திருடன் பூர முடியாது என்பது காதில் விழுகிறது.
சீட்டு இல்லாவிட்டால் என்ன, பூரலாம் நமக்கு ஆள் இருக்கிறது என்பதும் பேசப்படுகிறது.

புகு> பூர் > பூந்த,  பூந்து

எங்கேயோ பூந்து எங்கேயோ வந்துவிட்டானே......

நாம் எண்ணிப் பார்க்கமுடியாத  முன் காலத்தில் பூந்தது   'பழையது'.  அதனால்
புர் > பூர்  என்பதற்கு  பழைய என்ற  பொருள் ஏற்பட்டது .தொடக்க நாள் பழையது ஆகவே பூர்விகம்  என்ற சொல்லும்  அமைந்தது.

போன நாளிலேயே  இருந்த ஒன்று ' பூர்வம்' உள்ளது.   எப்போதாவது தோன்றுவதே  அபூர்வமானது.    அ  என்ற முன்னொட்டுக்கு  அன்மை  என்பது   பொருளாம்

பகுதி  என்பது  பாதி என்று திரிதல் காண்க .  பகு  > பா /    அதுபோல்  புகு
பூ  எனத்  திரிந்தது   சொன்னூலுக்கு இணங்கியதே  ஆகும் .

The paragraphing and spacing error is inherent in this post which  could not be ameliorated. 

உச்சி என்ற சொல்.



உ என்று  வரும் சுட்டு  முன்னிருப்பதைக் குறிப்பது.

உ > உன்.
உ >  உம். இது உன் என்பதன் பன்மை

உ > உய்.   முன்  செல்,  மேல் எழு என்று பொருள்.
உ >உய் >  உய்தல்.

அர் என்ற வினையாக்க விகுதி இணைத்து:

உய் >  உயர்.  உயர்தல். உயர்ச்சி.

உய் > உய்த்தி > உத்தி    இதிலிருந்து யுத்தி > யுக்தி கிடைத்தது.

தமிழ்த் திரிபுகள் பல உள்ளடக்கியது நாம் வடமொழி என்று கூறும் மொழி.
வடமொழி என்பது ஒரு மொழிப்பெயர் அன்று.  அது திசையைப் பொறுத்துச்
 சுட்டப்பட்ட ஒரு சொற்றொகுதி.  இது பின் சமஸ்கிருதம் என்ற பெயரால்
அமைவுற்றது.

வட சொற் கிளவி  என்று தொல்காப்பியர்  குறித்தது   வடபுலத்துப்   புழங்கிய சொற்றோகுதியை.  அது  அவர்காலத்தில் ஒரு மொழி ஆகிவிடவில்லை. வட சொல் என்பது ஆலமரத்தடியில் ஓதுகையின்போது  வழங்கிய சொற்றோகுதியையாகவும்  இருக்கலாம் . இது திரு வி க வின்  கருத்து. வடம்  என்றால் பல பொருள் உள .

உச்சி  என்ற சொல்.

உய் > உய்தல் > உய்த்தல்.(பிறவினை).

உய் > உய்ச்சி >  உச்சி. (மேல் உள்ள பகுதி.)

உய் > உய்ச்சம் > உச்சம்.

யகர ஒற்றின் பின்  வரும் கசட தபற வல்லொற்றுகள் ஒழியும் என்று
பலமுறை பாடிச் சொல்லியுள்ளோம்.

வாயால் பாடம் சொல்பவன் வாய்த்தி.  அப்புறம் வாத்தி. பின்  வாத்தியார்..

உப அத்தியாயி என்ற உபாத்தியாயர் வேறு. குழப்புதல் வேண்டா.

காய்ச்சல் என்பது  காச்ச(ல் )  என்று யகர ஒற்றுக் கெட்டு  பேச்சு மொழியில் வருமேனும்  இன்னும் எழுத்தில் நிலை பெற்றிட வில்லை.  மேய்ச்சல்  முதலியவும்  அப்படியே .