வியாழன், 11 ஆகஸ்ட், 2016

நீட்டி எழுதினால் கதை ஆகிவிடும்.....

அடி ஆசோ!  நீ காயவைத்த துணிகள் கம்பிக்கட்டுடன் சாய்ந்துவிட்டனவே! உனக்குத் தெரியவில்லையா?  வந்து கம்பிக்கட்டினை நிமிர்த்தி வை,  என்ன ஓர் ஒலியையும் காணோம்.   அப்படி ஆழ்ந்த தூக்கமா,,,,( பதிலொன்றும் இல்லை)   என்ன, வீட்டுக்காரியா பணிப்பெண்ணா....வெளியிலே எட்டிப்பார்...."  என்று ஒரு கிழவியின் குரல் சீனமொழியில் ஒலித்தது.

இவள் என்ன சாதியோ, நான் என்ன சாதி....நான் ஏன் அக்கறைப் படவேண்டும்... என்று நினைக்கவில்லை. எல்லாரும் மக்கள்தாம்.
உனக்கு இடர்   ஒன்று என்றால் நான் முடிந்தால் உதவுவேன்...என்னால் முடிந்த அளவு.

இதுதான் சிங்கப்பூர் மக்களின் அன்புநிலை. பாசவலை. ஆக்க உலை.

நான் கொஞ்ச நேரம் கழித்து வெளியிற் சென்று பார்த்த போது,  துணிக்கம்பிக்கட்டு  காற்றினால் சாய்ந்து துணிகள் தரையை முத்தமிட்டுக்கொண்டு கிடந்தன. காய்ந்துவிட்டன; அவற்றை அகற்றி
மடித்து வைத்துவிட்டேன்.

இது மலேசியாவாக இருந்து, எந்தக் கிழவியாவது கூப்பிட்டிருந்தால்,
நல்லபடி பார்த்துத்தான் கதவைத் திறக்கவேண்டும்.  வெளியில் திருடர்கள் ஒளிந்துகொண்டிருந்து, கதவைத் திறந்தவுடன் உள்ளே பாய்ந்து
என்னைக் கட்டிப்போட்டிருப்பார்கள். பெரும்பாலும் இந்தியர்களே திருடர்கள்.
வேலையில்லாமல் திருடுவோரும்  வேலையாகத் திருடுவோரும் மிகுதி,

பிலிப்பீன்ஸில் எச்சரிக்கை.

இந்தியாவின் நிலை என்ன?  சிற்றூராய் இருந்து, சாதிக்காரனாய் இருந்தால்
உதவுவான்.  நகரங்களில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்று தொலைக்காட்சிக்காரர்கள் துளைத்து எடுக்கிறார்கள். ஆகவே தெரியவில்லை.

நீட்டி எழுதினால் கதை ஆகிவிடும்.

புதன், 10 ஆகஸ்ட், 2016

இல்லத்துப் பிள்ளைமார் அல்லது ஈழவர்.

ஈழவர் என்ற பெயருடைய கூட்டத்தினருக்கு "இல்லத்துப் பிள்ளைமார்( ( கள்) என்பது மறுபெயர்.. இவர்களுக்கு நாடார் என்ற பெயரும் உண்டு என்றும் சிலர் நினைக்கின்றனர்.

இல்லம் என்பது வீடு என்னும் பொருளது. இது உண்மையில் இடம் என்றும் பொருள்படும். அப்பொருளில் அது இன்னும் தமிழில் வழங்குகிறது. கண்ணில் கருமணி இருக்கிறது என்ற வாக்கியத்தில்
இல் என்பது இடம் குறிப்பதை அறியலாம். இல் என்பதே இன் என்றும் திரியும். அதுவும் இடப்பொருளையே உள்ளடக்கி நிற்கிறது. "கண்ணின் கருமணி" என்பதில் இன் என்பது இடத்துரிமை காட்டுகிறது. கண் என்னும் இடத்திற்கு உரிய கருமணி என்று அதனை விரிக்கலாம்.

இல் என்பதே இழ் என்று மாறிற்று என்று தெரிகிறது. அப்படி மாறி ஒரு விகுதியாகி, தம்+ இழ் = தமிழ் என்றானது என்று கொள்ளலாம். அப்படியானால் தமிழ் என்ற சொல் தமது இடத்து மொழி என்று பொருள்படும்,.

தமில் என்பதே தமிழ் என்று திரிந்தது என்பது அறிஞர் கமில் சுவலபெல்
அவர்களுடைய கருத்து. இதுவே தேவனேயப் பாவாணரின் கருத்துமாகும்.

தமிழ் என்ற சொல்லுக்கு மணிக்கணக்கில் பொருள்சொல்லும் திறமை உடையவர் பெரும்புலவர் கிருபானந்த வாரியார் அடிகள். அவர் பொழிவைக் கேட்டுப் பாரதிதாசனார் பெருமகிழ்வு எய்தினார், பாராட்டினார் என்ப. ஆய்வாளர் பிறரும் பல்வேறு சொல்விளக்கங்களை முன்வைத்துள்ளனர். ஆனால் அவை முன் கூறப்பட்ட கருத்துகள். எனவே சுவலபெல் - பாவாணர் கருத்து நமக்கு இற்றை முடிபு என்று கொள்ளவேண்டும். காரணம் முன் கருத்துகள் ஏற்புடையவாகக் கருதப்படவில்லை.

இல் என்பதே இழ் என்று திரிந்தது ஆகையினால் இழ்> ஈழ் > ஈழம் என்றும் இழ் > ஈழவர் என்றும் திரிந்தது என்று கொள்ளவேண்டும். எனவே ஈழம் எனின் வாழ்விடம் என்றும், ஈழவர் எனின் இடத்தவர் என்றுக் பொருள்படும்.
இழ் > ஈ ழ்  முதனிலைத் திரிபு .

இல் என்பதில் திரிந்த இன் என்னும் இடைச்சொல், இந்தோ ஐரோப்பிய மொழிகளிலும் பரவி வழங்குகிறது. இடப்பொருளே குறிக்கிறது. ஆங்கிலத்தில் இன் என்பது இடம் காட்டும் இடைச்சொல் ஆகிறது. (in)


இல் என்ற சொல் இகரச் சுட்டடியாகத் தோன்றியது. ஆகவே தமிழாகும்.

சுட்டடிச் சொற்கள் சீன மொழியிலும் உள. ஈ என்பது இவன், இவள் என்பதாகும். இய (ia)  என்ற மலாய்ச் சொல்லும் அதிலிருந்து திரிந்த டிய (dia)   என்பதும் இதன் வளர்ச்சியாம்.

ஆஃபிரிக்காவலிருந்து இடம்பெயர்ந்த சீனர்கள், தெற்காசியா வழியாக தென்கிழக்காசியா வந்து அதன்பின் சீனாவில் தங்கினர் என்று மாந்த வளர்ச்சி நூல் கூறுகிறது. 1

ஆகவே சுட்டடிச் சொற்கள் இம்மொழிகளில் காணப்படுதல் இயற்கையே ஆகும்.

இப்போது:

இல்லத்துப் பிள்ளைமார் = இடத்து மக்கள்.
ஈழவர் = இடத்து மக்கள்
தமிழ் (இழ்) - இடத்து மொழி.
ஈழம் = வாழ்விடம்.

என்றபொருளாகின்றன.

நீங்கள் மறுப்புரை  வழங்கலாம் .


---------------------------------------------------------------------------------------------


According to the newspaper, a research team led by Jin Li (金力) of Fudan University in Shanghai .
But Jin and his fellow researchers found that early humans belonged to different species, of which only the East African species developed into modern humans.  About 100,000 years ago, some of those humans began to leave Africa, with some people moving to China via South and Southeast Asia, Li said. (There were other contacts as well )



செவ்வாய், 9 ஆகஸ்ட், 2016

இறுதல் இறத்தல்



இறுதல் 
=======
ஒரு வினையிலிருந்து இன்னொரு வினை ( a verb formed from another verb ) தோன்றுதல், பெரும்பாலும் இலக்கணம் சொல்லிக்கொடுக்கும் ஆசிரியர்கள் வகுப்பில் அல்லது தம் பொழிவில்( lecture ) விதந்து ஓதாதது ஆகும்..

இறுதல் என்றால் முடிதல். இந்தச் சொல்லிலிருந்து இறுதி என்ற தி விகுதி பெற்ற சொல் தோன்றியிருத்தலை நோக்கி, இறு என்றால் இறுதியை அடைதல் என்று புரிந்துகொள்வது எளிதாகவிருக்கும்.

இது வினை எச்சமாக வருங்கால் இற்று என்று வடிவுகொள்ளும். உறு > உற்று என்பதுபோலும் வடிவம். இரும்புப் பாத்திரத்தின் அடி இற்றுப் போயிற்று என்பதில் இற்று ‍= இறுதியை அடைந்து போய்விட்டது என்பது
பொருளாம்,

இச்சொல் பெயரெச்சமாக நிகழுங்கால் இற்ற என்று வரும். முச்சீரால்
இற்ற அடி எனின் மூன்று சீர்களால் முடிகின்ற அடி என்ற பொருளாகும். இற்ற ‍ முடிந்த என்பது. இறந்த காலம் காட்டும் வினை எச்சம்.

இறத்தல்

இறத்தல் என்ற வினைச்சொல் இறு என்பதிலிருந்து தோன்றிற்று.

இறு > இற.

இறத்தல் என்ற வினை. இறு > இற என, இறுதியில் அகரம் பெற்று வினை ஆயிற்று.

இறத்தல் என்பது உயிர்விடுகை குறிக்கும். எ‍-- டு: அவர் இறந்துவிட்டார்.

இறத்தல் என்பது கடத்தல் என்றும் குறிக்கும்.காடிறந்த தலைவன் என்றால் காட்டைக் கடந்து சென்ற தலைவன் அல்லது காதலன் என்பதாகும்.

 இது போல அகரம் பெற்று வினையான இன்னொரு சொல் அள என்பது.
(பழங்காலத்தில்) நெல் முதலியவற்றை அள்ளிக் கொணர்ந்து அளந்தனர் அல்லது  அளக்கும்  ஏனத்தில் அள்ளிப்போட்டு  அளந்தனர் .  ஆகையினால்.  அள் என்ற  சொல்லிலிருந்து அள என்று அகரம் பெற்று வினையானது.

அளத்தல்  கதை யளத்தல் படியளத்தல் முதலியவற்றில் போதரும் கருத்துக்கள்  பின்பு  கவனிப்போம்,  

அள் >  அள்ளு  ;   அள்ளுதல்.
அள் > அள்+ அ =  அள > அளத்தல்.

"பிள்" அடியினின்று பிளத்தல் என்பதும் இதுபோல அமைந்ததுதான்,

will edit later.