செவ்வாய், 3 மே, 2016

தீபாவளியையும் இந்திய இசையையும் விரும்பும் முதல்வர்

சரவாக்  முதலமைச்சர்  அடனான்  இந்தியர்கள் பால்  பெரிதும் அன்பு கொண்டு ஒழுகுதலைத்  தம் நெடு நாளைய வழிமுறையாகக் கொண்டிருப்பவர் என்று அறிகிறோம். இவர் தீபாவளி  நாளில் இந்தியர்களைக்  கண்டு அளவளாவுதலுடன்  இந்திய இசையிலும் ஈடுபாடு உடையவர்.

ஏறத் தாழப்  பத்தாயிரம் இந்தியர்களே சரவாக்கில் உள்ளனர். ஆகவே சிறிய குமுகாயம்  (  சமுதாயம் ) தான் . இவர்களில்  இரண்டாயிரவர் தலைநகர்  கூச்சிங்கிலேயே  வாழ்கின்றனர்.

முதலமைச்சருக்கும் அவண்  வதியும்  இந்தியர்களுக்கும்  சரவாக்கியருக்கும் நம் வாழ்த்துக்கள் உரியனவாகுக .





அகமும் புறமும் - எல்லைகள்.



ஓர் ஆண்மகனும் பெண்மகளும் ஒத்த அன்பினால் செல்லாது
 மாறுபட்டு  நிகழ்வன அனைத்தும் பெருந்திணை  என்னும் திணையின்பால் கொள்ளப்பட்டன .  எடுத்துகாட்டாக மனைவியை நீங்கி இன்னொருத்திபின் சென்று அவள்பால் உள்ள காதலை ஒருவன் கூறுவதாக ஒரு பாடல் வருமானால் அது பெருந்திணை ஆகும்.  அதாவது எல்லை மீறிய காம ஒழுக்கம்.   பண்டைத் தமிழர் பண்பாட்டில்  இவை போற்றப்படவில்லை.

இன்னோர் எடுத்துக்காட்டு:   ஓர் ஆணும் பெண்ணும் ஒருவரை ஒருவர் விரும்புகின்றனர்.   அந்த ஆடவன் அடக்கத்துடன் நிற்க
பெண் முந்திக்கொண்டு  நீ என்னை   உடன் கொண்டுசென்று என்னுடன்  கூடியிரு என்று  கேட்பாளாயின் அதுவும் பெருந்திணை  ஆகும்.   வேட்கை முந்துறுத்தல் என்னும்  துறை  இது.   இஃது  மாறுபாடான நிகழ்வு ஆகும்.

"கையொளிர் வேலவன்1 கடவக் காமம்
மொய் 1வளைத் தோளி  முந்துற மொழிந்தன்று."


என்பது புறப்பொருளின் கொளு.

கடவுதல் = தூண்டுதல்.

இத்தகைய  மாறுபாடான ஒழுக்கங்கள் புறப்பொருளில்  அடக்கப்பட்டன.  தூய ஒழுக்கங்களே அகப்பொருளில் ஏற்கப்பட்டன.

1 :   errors rectified


திங்கள், 2 மே, 2016

வம்மின் (சொல்வடிவம் ) > வம்மிசம்


இச்சொல் எங்ஙனம்  அமைந்தது  என்பதை  இங்கு விளக்கி இருந்தோம்

வம்மின் (சொல்வடிவம் )  >   வம்மிசம்

http://sivamaalaa.blogspot.sg/2014/07/blog-post_30.html



வருமின் என்பது வம்மின் என்றும் வரும். --  என்றால் வருக என்று பொருள்.

" நாள் முறை தபுத்தீர் வம்மின் ஈங்கு என "

என்ற புறநானூற்று வரியில் ( பெருந்தலைச் சாத்தனார்  - பாடல் 294) இதைக் காணலாம் .

வ + மிசை + அம்  =  வம்மிசம்

தலைமுறைகள் மென்மேலும் வந்துகொண்டிருப்பதே வம்மிசம் .

மிசை - மேல்.

இதில் ஐகாரம் கெட்டது .

இது ஒரு நாட்டுப் புற வழக்குச் சொல்.

கிழவியர் திட்டுப்போது " உன் வம்மிசம் கருவற்றுப் போக " என்று அலறுவர்.

வா என்ற பகுதி  வ என்று திரியும்.

வா  >  வந்தான் ;  

வா>  வருக. (அதாவது  வாருக  அன்று )

வா > வரு . அல்லது  வரு> வா .

வா  முதலா  வரு முதலா என்பது இருக்கட்டும்.