திங்கள், 29 பிப்ரவரி, 2016

ஐ and high

நீர்  (தண்ணீர், வெந்நீர்  என்பவை) தமிழில்போல் சங்கத மொழியிலும் உள்ளது.  சமஸ்கிருதத்தில் 1/3 பகுதி திராவிடச் சொற்கள்.   ஏறத்தாழ  1/3  மேலை மொழிகளுடன் தொடர்பு காணக்கூடியவை.  இறுதி 1/3  எங்கிருந்து  வந்தன என்று தெரியாதவை என்றார் டாக்டர் லகோவரி. தெரியவில்லை என்பவற்றில் பல தமிழில் காணக்கூடியவை.  நாமும்பல  சொற்களை எடுத்துக்காட்டியுள்ளோம். தமிழினின்று போந்தவை என்றால் அவற்றுக்கு மதிப்புக் குன்றுமென்பதால்,  ஒப்புக்கொள்ள வெட்கப்படுவான் வெள்ளைக்காரன்.

சமம்+மதி >  சம + மதி >  சம்+மதி = சம்மதி.  இதை இப்படிக் காட்டாமல் சம் என்பதை முன்னொட்டு என்றும் மதி என்பது வினைச்சொல் என்றும்  கூறுவான்  சங்கத ஆசிரியன்.

சம் எங்கிருந்து கிட்டியதென்றால், தமதென்பார்.

அமை> சமை > சம்  என்பது தெளிவித்துள்ளோம்.

ஒரு சீனனிடம் போய் சமஸ்கிருதப் பாட்டைப் பாடினாலும் தமிழ்பாட்டுப் பாடினாலும்  எல்லாம் ஒருமாதிரியாய் இருப்பதாகச்
சொல்கிறான்.   ஆகவே  மொழி நூல் அறிஞர் சட்டர்ஜி , ச‌மஸ்கிருத  ஒலிமுறை திராவிட மொழிகளின் அமைப்பைத் தழுவியது என்று உண்மையைச் சொல்லவேண்டியதாயிற்று.

சமஸ்கிருதம் தென்மொழி சார்ந்ததே. தமிழ் உள்ளிட்ட முன்னிருந்த‌
பாகதங்களிலிருந்து சொற்களைப் பெற்று இனிதாக அமைக்கப்பட்டதே
சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் வளர்க்கத் தமிழ் மன்னர்கள் பலர் கடினமாக உழைத்துள்ளனர்.  தமிழ்ப் புலவர்களும்தாம்.  வேதம் பாடியோரில் பல தமிழர் இருந்தனர்.  தமிழ்ச்சொற்களை ஆண்டுள்ளனர். தென்கிழக்காசியா எங்கும் அதைப் பரப்பினான் ராஜ ராஜ சோழன்.

ஆரியன் என்று யாரும் வந்ததற்கு ஆதாரம் இல்லை. ஆர்ய என்பது தமிழ்ச்சொல் என்று ஆதாரம் காட்டியுள்ளார் தேவ நேயப் பாவாணர்.
ஆர்தல்,  அறிவு என்பன தமிழ்ச் சொற்கள்.  அரிவ் என்று அது அரபியிலும் சென்று வழங்கியது உண்மை.

Garden of Eden என்னும்  எழில் தோட்டம் தமிழ் நாட்டில் இருந்ததென்று சில அரபு  நூல்கள் சொல்வதாக ஓர் இஸ்லாமிய அறிஞர் எழுதியுள்ளார்.

சமஸ்கிருதத்திலிருந்து பல சொற்களை  மேலை மொழிகள்  மேற்கொண்டன.  தமிழிலிருந்து நேரடியாகவும் மேற்கொண்டன.

ஐ என்பது தமிழில் மேன்மை குறிப்பது.  ஐயன், தமையன்.
ஹை என்ற மேன்மை குறிக்கும் சொல் ஏன் ஒலியொத்து வருகிறது.

ஏர்   -  arable  என்ன தொடர்பு ?

ஆராயலாமே!

will  edit. enjoy the post first.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,!

மேலகம் என்ற சொல் இத்போது பெரிதும் வழங்குவதில்லை. இதற்குப் பதிலாக மோட்சம் என்ற சொல்லே பேச்சு வழக்கில் உள்ளது . எட்டாம் துக்கம், பதினாறாம் நாள் என்றெல்லாம் வருங் காலங்களில் மோட்சம் என்ற சொல் காதில் வந்து சேர்கிறது.

 மேல் என்ற சொல் மோள் என்று மலையாளத்தில் வழங்குகிறது. மோள்+ சு+ அம் என்ற விகுதிகள் இணைந்தால், மோட்சம் என்ற சொல் பிறக்கிறது. சு விகுதி பரிசு என்ற சொல்லில் இருக்கிறது,  அம் விகுதி பெறு பதங்கள் பற்பலவாம்.  அறம் என்ற சொல்லில் அறு+அம் என்ற இணைப்பில் நிறு நயம் செய்யப்பட்ட  ( நிறுவி நயம் ஆக்கப்பட்ட ) வாழ்க்கை விதிகள் என்ற சொற்பொருளமைப்பில் அம் வருகிறதன்றோ!. மலையாளப் பேச்சில் தோன்றிய  மோள்,  விண்கலம் செவ்வாயில் சென்றிறங்கினாற்போல யாண்டும் பரவி, தமிழில் தழைத்து, சமத்கிருதமொழியில் உழைத்து  மேலகம் எய்தியது வரவேற்கப்படவேண்டியதே ஆகும்.

மோட்ச‌மும் மேலகமும். வாழ்க,

ஞாயிறு, 28 பிப்ரவரி, 2016

முந் நீர் - சமுத்திரம்.

சமுத்திரம்  என்ற சொல்லைச்  சில ஆண்டுகட்கு முன்னரே  ஓர்  இடுகையில் அணுக்கமாகக் கவனித்திருந்தேன்.   இது   எங்ஙனம் உருவானது என்று மீண்டும் சிந்திப்பது நல்லது.

அமை -   அமைத்தல்.

இது பின்    இன்னொரு சொல்லைப் பிறப்பித்தது.

அமைத்தல் -  சமைத்தல்.

 அகரம்  சகரமாய்த்  திரியம் .   அமண்  -   சமண் ,

அகபதி  (அகத்துப் பதிவாய் விளங்கும் இறைவன் )  -  சகபதி.

அகர வருக்கத்துப் பிற எழுத்துக்களும் இங்கனம் திரியும்.


உக > சுக > சுகம்     உகந்த நிலையே சுக நிலை..

முன் இடுகைகளில் தந்த எடுத்துக்காட்டுகள் அங்குக் காண்க.

சமைத்தல் என்பது  வேகவைத்தோ  பொரித்தோ  அல்லது  வேறு வகையிலோ சூட்டினால் உணவு உண்டாக்குதலைக் குறிக்கும் சொல்லாயிற்று.  நுண்பொருள்  வேறுபாட்டு  விரிவு  இது ஆகும்.

சமை என்ற சொல்லில் இருந்து  இந்தோ ஐரோப்பியத்துக்கு  சம் என்ற அடிச்சொல்  கிட்டியது.   சமை என்பதிலிருந்து  வினையாக்க விகுதியாகிய ஐ பிரிவுண்டு விடுமாயின்  மிச்சமிருப்பது சம் அன்றோ?

சீரகம்  சோம்பு     ஏனை   மசாலைப் பொருள்கள்  முதலிய  இட்டுக்  கறி சமைத்து  உண்டவர் தமிழர் . ஆகவே சமைத்தல் என்பதற்குப்   பல பொருள்களை ஒன்று சேர்த்துக் கூட்டுதல், என்ற  பொருள் அமைந்தது  பொருத்தமே. இப்பொருள் ஒரு பின்வரவு ஆகும்.  குழந்தை  சமைந்தது  என்ற வழக்கும் உள்ளது    சமைதல் - தன் வினை;  சமைத்தல் -  பிறவினை.

இனிச்  சமுத்திரம் என்ற சொல்லுக்கு வருவோம்.  

இது முந்நீர் என்ற  தமிழ்ச்சொல்லைப் பின்பற்றியது.    சமுத்திரம்  என்பதன் பின்பகுதி முத்திரம்  -  இது உண்மையில் முத்திறம்  ஆகும். சம் என்பது ஒன்று சேர்தல், கூடுதல்;  (>  சமை).,  திரை (கடல்)  என்பதிலிருந்து  இந்தத் திரம்  வந்திருத்தல் கூடும் என்று  கூறுவர் சிலர்,

இங்ஙனம்  புதிய சொல் ஒன்று அமைக்கப்பட்டது.

முந் நீர்  -  சமுத்திரம்.

இப்போது முந்நீர் போல  சமுத்திரமும் பொதுவாகக் கடல் குறிக்கும் ,  மூன்று கடல் கூடுவதென்பது  சொல்லமைப்புப் பொருள் .  இப்போது அது  மங்கிவிட்டது.


முந் நீர்   -   முத்திறம் /      முத்திரம்
சம்  +  முத்திரம்  -   சம்முத்திரம் >   சமுத்திரம்

இப்படிச் சொற்களைப்  படைத்தவர்கள்  சிறந்த படைப்பாளிகள் என்பதில் ஐயமில்லை. சொற்களின் படைப்பு வழிகளைக் கண்டின்புறும்  இவ்வேளையில்  அவர்களையும் பாராட்டுவோம்.