ஞாயிறு, 24 ஜனவரி, 2016

அம்மாவாசையும் அயல்சேவையும்

அம் என்றால் அழகு. இந்த அடிச் சொல்லுக்கும் அம்மா என்ற தாய் குறிக்கின்ற சொல்லுக்கும்கூட ஒரு தொடர்பு இருக்கின்றது. நாம் தொட்டிலில் கிடக்கும்போது முதன்முதல் நாம் கண்ட அழகு அம்மாதான். அம்மை அழகு.

மா என்பது கரிய நிறம் குறிக்கும் சொல். சற்றுக் குறைந்த கறுப்பினை மா நிறம் என்பதுண்டு. மா>  மால். கரிய மால் உந்தியில் வந்தோன் என்று ஔவையாரின் பாடலொன்றில் வரும் தொடரை நினைவு கூர்க. திருமால் கரியோன், கறுப்புசாமி எனவும் படுவார்.

வாய் என்றால் இடம் என்று பொருள்.  இதில் ஓர் ஐ விகுதி சேர்த்தால் வாயை என்று வரும்.  யகரம் சகரமாக உரிய இடங்களில் வருதலை என் பழைய இடுகைகளில் கண்டு மகிழலாம்.  மறதி என்றால் ஒன்றிரண்டு காட்டலாம்,  வாயில்> வாசல்.  நேயம் >  நேசம், தேயம் > தேசம்.  தோயை > தோசை.  நீருடன் கலந்த அல்லது தோய்ந்த மாவினால்  சுடப்படுவது.  ஆகவே வாயை என்பது வாசை ஆகிவிடும். இதிலேதும் வியப்பில்லை/

இப்போது அமாவாசை என்ற சொல் காண்போம்.

அழகிய கருமை கலந்த இடமாகிவிடுகிறது  அம்மாவாசை தினத்தன்று
நம் ஆகாயம், ஆகாயமே ஆகாசமன்றோ?

அமாவாசையின் போது  அம் மா வாயை நம் வானம். அம் = அழகிய;  மா = கருப்பான;   வாய்  =  இடம்;  ஐ =  விகுதி .

இது பின் திரிந்தது.  அம்மாவாசை >  அமாவாசை. மகரம் கெட்ட இடைக்குறை.

அம்மாவாசை தமிழ் வா(ய் )த்தியார்களுக்குப்1 பிடிக்காது,  அம்மா+ஆசை யா? சீ  அமாவாசை என்று எழுது என்று திருத்த,  அமாவாசை ஆகி, பின் அயல்சேவையும் செய்யத்தொடங்கிகிவிட்ட சொல்லை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சிதானே  ( 1, வாய்த்தியார்  வாய்ப்பாடம் சொல்லிக் கொடுப்பார் ,  உப அத்தியாயி  வேறு. என்னே குழப்பம் கற்பிப்போருக்கு ).

தைப்பூசத்தில் மகிழ்வு பொங்குக.

will edit

சனி, 23 ஜனவரி, 2016

"உபயம்"

கோயில்களில் பயின்று வழங்கும் "உபயம்"  என்ற சொல்லினை இப்போது  காண்போம்.

கம்ப இராமாயணத்தில் உபயம், என்ற சொல் ". உவைய முறும் உலகின் "(கம்பரா. நிகும். 156). என்று வந்துள்ளதாக அறிஞர் கருதுவர் . உவையம் என்பதே உபயம் என்றாயிற்று என்பது கருத்து.
அ , இ  உ  என்ற முச்சுட்டுகளில்  உ  என்பது  முன்னிற்றல்  குறிப்பது.

உபயம் என்பது ஒரு வரியையும் குறிப்பதால்,  உபயம்  முன் வைக்கப்படும்  கோயிலுக்கான தொகையைக்   குறித்தது என்பது சரியான கருத்து ஆகும் .

உ >  உவ .
உவ >   உவன்.     ஒ.நோ :  அ > அவன் .
உவ > உவச்சன் =  (முன் நின்று ஓதுபவன் ).
உவ > உவை .
உவை > உவையம் > உபயம்.

முன் நிற்புக்   கருத்துடைய  சுட்டடிச் சொற்கள் இவை.

உவ என்பதில்  வ்  வகர உடம்படு மெய் என்பதுமொன்று. எனின்  உவச்சன் என்பது  உ ​+ அச்சன் =  உவச்சன்  எனல்வேண்டும்,   இங்கு அச்சன் -  தந்தை என்று  கொள்க,  ஓதுவாரைத் தந்தை எனல் பொருத்தமே.   ஐ > ஐயர் எனல்போல.

பயம் என்பது பயன் எனினும் அஃது சரியானதே.  திறம் >  திறன்  என்பதில்  மகர ஒற்று  னகர ஒற்றாயிற்று ,  உ+ பயம் =  உபயம் ,   சொல்லமைப்புகளில்  உப்பயம் என்று வாராமல் உபயம் என்றே இயல்பாக வருதல் முறையே. அன்றி உப்பயம்  உபயம் என  இடைக்குறைந்து வருதலும் எடுத்துக் காட்டலாம். பொருள்  :  கோயிற்   பயனுக்கு முன் வைத்த தொகை என்பதே
இங்கும் பொருள்.

Notes:

Payattal can also mean yielding a certain result,  Vizumiyatu payattal.   is an example.  u+payam thus can mean to yield beforehand,  that is,  setting aside from your yield from fields a portion for tax payment for the king.


வியாழன், 21 ஜனவரி, 2016

கணினிச் சொற்கள்

இப்போது பயன்பாட்டிலுள்ள் கணினி /இனையம் தொடர்பான சொற்கள் சில:

குறுவட்டு =  CD Player
தரவிறக்கம் = download
முகப்புப் பக்கம் = desk top
குறும்படம் -  icon
சொடுக்கு =  click.