சனி, 31 அக்டோபர், 2015

தமிழில் கிருகம் கிரகம் இல்லை

இன்று கிரகம் என்ற சொல்லை ஆய்வு செய்வோம்.

கிரகம் என்பது நாம் நன்கறிந்த சொல் போலவே தோன்றுகிறது. நாம் ஓட்டிச் சென்ற வண்டி எங்காவது போய் மோதி, நமக்குச் செலவு கூடிப்போனால், கெட்ட கிரகம் என்கிறோம். கால நிலை சரியில்லை என்கிறோம். கணியரும் ( சோதிடகாரரும் ) அதையே தெரிவிக்கிறார். இப்போது எகிப்தில் உயிர் நீத்த உருசிய வானூர்திப் பயணிகட்கு நமது இரங்கலைத் தெரிவித்துக்கொண்டு,
ஆய்வினைத் தொடர்வோம்.

அதிலிருந்த எல்லாப் பயணிகட்குமா கிரகம் சரியில்லை? விபத்துக்கு1த் தீவிர
வாதிகள் பொறுப்பு ஏற்றுக்கொண்டாலும் அதிகாரிகள் அவர்கள் கூற்றை ஏற்கவில்லை.

கிரகம் என்றால் கோள் நிற்குமிடம் என்று பொருள். வீடு என்றும் கூறலாம். கிருகலெட்சுமி என்றால் வீட்டின் நற்செல்வி என்று சொல்வர். கிரகம் அன்று, கிருஹம் என்பர். இருக்கட்டும்.

காராகிரகம் என்ற சொல் காணுங்கள். இதன் பொருள் சிறை என்பது. கார்= கருப்பு. கிருஹம் -வீடு . ( சிறை.) the terrible dark prisons என்று பொருள் விரிப்பார். இது உண்மையில் கார்+ ஆகு+ இரு + அகம் = காராகிருகம் ஆகும். இருட்டான, இருக்கும் உள்ளிடம் என்பது பொருள். ஆகவே சிறை.

இதுபோது கிரகம் , கிருகம் . கிருஹம் என்ற மாறுபாடுகளில் கவனம் கொள்ள வேண்டாம். இம்மூன்றில் எல்லா வடிவங்களையும் ஒருபுறம் வைத்துக்கொள்ளுங்கள்.

காராகிருகத்தை காரா + கிருகம் என்று பிரித்தால், கிருகம் கிடைக்கிறது. ஆகவே, கிருகம் என்றால் வீடு என்று பொருள் கூறி, கார் ஆகு இரு அகம் என்பதை முடிபோட்டு மறைத்துவிடலாம்.

எனவே பிறழ்பிரிப்பின் மூலம் ஒரு புதிய சொல் கிடைக்கிறது,

தமிழில் கிருகம் கிரகம் இல்லை; ஆதலால் அது தமிழ் அன்று என்று முடிக்க வேண்டியது,

கொண்டாட்டமே!



------------------------------------------------------------------------------------------------
1. விழுபற்று >விழுபத்து> விபத்து.

திரிபுகள் தரு வரு, அரு & ors

வரு என்னும் பகுதி வார் என்று திரியும்.  இதை வாக்கியமாக எழுதாமல் இப்படிக் காட்டலாம்:

வரு >  வார்.

இதனை,  வாராய், வாரான் (வர மாட்டான்) முதலிய வடிவங்களில் காணலாம்.)

இதேபோல் 

தரு >  தார்.  ( தாரீர் ,  தாராய் )

இரு என்ற எண்ணுப்பெயரும் ஈர்  என்று திரியும்.


இரு >  ஈராயிரம்.   ஈருருளி .

இருத்தல் என்ற வினையும்  "உள்ளிழுத்தல் " என்ற பொருளுக்கு  மாறும்போது ஈர்த்தல் என்று   திரியும்.   இரு>  ஈர் . வெளியிலிருப்பது  உள்ளில் இருக்கச் செய்தல் நிகழ்கையில்  ஈர்த்தல்  நிகழ்கிறது.  ஈர்த்தல்  என்பது ஓர்  இடை நிகழ்வு,   இரு >  ஈர்  :   இரு. an intermediate act.   தமிழ் உள்ள சொல்லையே  திரித்து இன்னொரு சொல்லை அமைக்கும் திறனுடைய மொழி  

தேவ நேயப் பாவாணர் விளக்கம்:

அரு  >  ஆர் >   ஆரி.

:ஆரிப் படுகர் :   (  மலைபடு .  161.)    ஆரி -  அருமை.
ஆரி ஆகவம் சந்தத் தளித்தபின், ( சீவக . 139.)  ஆரி - மேன்மை .
ஆரி  (  சூடாமணி )    -   அழகு
ஆரி  borrowed by Greek,  aristos   best, noble.

from: வடமொழி வரலாறு ,  பக். 24. இளவழகனார் பதிப்பு. 1

தரு வரு, அரு திரிபுகள் 
--------------------------------------------------------------------
Notes:  editor's
1, 491.109.
2 894,8115 முத்துக்குவியல், 

வியாழன், 29 அக்டோபர், 2015

3 - 5 God functions

இறைவனின் முத் தொழில் யாவை,  அவன்றன்   ஐந்தொழில்  யாவை என்பதைப் பார்ப்போம்.

படைத்தல்  காத்தல்  அழித்தல்  என்ற முத்தொழிலுடன்,  மறைத்தல், அருளல்  என்பவற்றையும் செய்வோன் இறைவனாகிய சிவம்.  ஆகவே ஐந்தொழிலாகிறது.  மறைத்தலாவது, மாயைகளை உண்டாக்கி உண்மைத் தன்மையை  ஒளித்துவிடுதல். (தெளிவாக்காதிருத்தல்)
திரோபவித்தல், ஆன்மாவை மயக்கஞ் செய்தல். திரோதானம்  என்றும் கூறுவர்.1

சிவஞான போதம் முத்தொழிலைக் குறிப்பிடுகிறது.  அம்பலவாணன் ஐந்தொழில்புரிகுவன் எனினும்  முத்தொழில்களே அவற்றுள் முன்மை பெற்று நிற்பவை..

உலகு தோன்றுதலும் ஒடுங்குதலும் இந்த முத்தொழில்களின் பயனே என்பார்,   இப்பயன் அல்லது விளைவைக் குறிக்க மூவினைமை என்ற சொல்லாட்சியை முன்வைக்கிறார்.,

அவன், அவ:ள்  அது:    உலகிலுள்ள பொருள் மூன்று.
படைத்தல், காத்தல், அழித்தல் =    மூவினை. இங்கு வினை என்றது  தொழிலை,  எனவே முத்தொழில்.
தோன்றுதல்  ஒடுங்குதல் :  மூவினைமை.  அதாவது மூவினைகளின்  பயன். அதாவது முத்தொழில்களின் நேர்விளைவு .
திதி அல்லது நிலை. அந்தம். ஆதி.
மலம்:   (தீவினை) .காரணம்.

திதி : இது ஸ்திதி எனவாகும்.

மூவினைமை :  இதில் "மை" விகுதி என்ன குறிக்கிறது?   பயன் அல்லது விளைவு குறிக்கின்றது.  மை என்பது உண்மையில் மெய் என்பதன் திரிபு என்கிறார்  டாக்டர் மூ. வரதராசனார் . ஆகவே முத்தொழில்களின் வெளிப்பாடு,  போந்த உருவம்  அல்லது பயன் . நல்வினை தீவினை என்ற வினைகள் வேறு.

===============================================
Notes:

1. also: திரோபவம் tirōpavam
n.  (Šaiva.) Function of veiling or darkening, designed to keep the souls engrossed in the experiences of the world until their karma is completely worked out Tam.Lex.