வியாழன், 30 ஜூலை, 2015

manthiram pilli and chUniyam

பில்லி  சூன்யம் என்பவற்றை நம்பாதவர்கள்  பலர்.

நம்பி நாடிச் செல்வோரும் உளர்,

ஆசிரியர் மறைமலை யடிகள் தம்  மனித வசியம் அல்லது மனக்கவர்ச்சி என்ற நூலில் இவற்றை நன்கு விளக்கியுள்ளார்/

இணையத்தில் இந்த நூல் கிட்டுமா என்று தெரியவில்லை.  நீங்கள் தேடிப் பார்க்கலாம் .

விவேகாநந்தரும்   இதை நன்கு விரித்துரை செய்துள்ளார்.  மந்திரம் என்பது கருத்து அலைகளை ஏற்படுத்தித்  தான் விரும்பிய விளைவுகளை நிலை நிறுத்துதல் என்பது போல் அவர் விளக்குகிறார். காந்தி முதலிய பெருமான்கள்  அல்லது மகான்கள் இதனை நன்கு பயன்படுத்தியுள்ளனர்,  காந்தியடிகள்  இறைமேன்மை தங்கிய  குரு  யோகானந்த அடிகளிடம் இறை நேயத் தொடக்கம் ( தீட்சை)  பெற்றவர்.


இந்தக் கட்டுரையைப் படித்துப் பாருங்கள்.

Hexes and Curses - How do they work

By Nita Hickok (c)2005

www.astralhealer.com/news/50/85/books.htm

இதில் உண்மை இருக்குமா என்பதை உங்ககளுக்கு நீங்கள்தாம் முடிவு செய்து கொள்ள   வேண்டும் .



Notes:
--------------------------------------------------------------------------------
தீட்டுதல் - தீட்சை (தீட்+ சை) என்பன ஆய்வுக்குரியன.

தீட்சையிடுகையில்  நெற்றியில் தீட்டப்படும்.   initiation.

மொச்சை ( மொத்தமாக அல்லது) சற்று பெரிதாக உள்ள பயறு வகை.

மொ  >  மொத்தம்.  மொ  > மொச்சை. (சை: விகுதி). குடி + சை  = குடிசை,  இங்கு வலி மிகவில்லை.

You may compare the parallel formation of words.

திங்கள், 27 ஜூலை, 2015

அறிவியற் பேரறிஞர் அப்துல் கலாம் condolences

அறிவியற்  பேரறிஞர்  அப்துல் கலாம்  இந்தியா   ஷில்லோங்க்கில்   காலமானார் .  ஆழ்ந்த இரங்கல்.

அறிவியற் சாதனை  அன்புகெழு  உள்ளம்
புரிவியலால் வென்றோன் புவியை ----- கருவில்
திருவமைந்த தீந்தமிழன் தேன்போல் தெளிந்த
பொருவிலாப் பேச்சினனைப் போற்று.

புரிவியல் -  practice as opposed to theory,
பொருவிலா -  ஒப்பிலா


இராமே  சுவரம்   இராமபற்  றாரோ
டுறாமக்  களையும்   ஒருபரிசால்  உய்க்க ,
கலாமைக் கொடுத்த  கலைசேர்    புரட்சி
நிலாவானும் தந்ததற்  கொப்பு .

இராம பற்றாரோடு :   இராம பக்தரோடு.
இராமப் பக்தர் என்று எழுதார் ஆதலின்  இராமப் பற்றார் என்று  அமைக்கவில்லை . வழக்கு நோக்கியது 
உறா  மக்களையும் :  இராமரைப்  பின்பற்றா மக்களையும் .
உய்க்க :  முன் செலுத்த 
கொடுத்த :  ஆண்டவன்  அல்லது  இராமேசுவரம்  தந்த 
நிலா வானும் :  வானம் நிலாவினை 

வானம்  நிலவைப் பரிசாகத் தந்ததுபோல,  இராமேசுவரம் என்ற  இப்புகழ் பெற்ற தலம்  இராம பற்றர்களுக்கும்  அல்லாதாருக்கும் சேர்த்து  ஒன்றாக  ஒரு பரிசைத் தந்தது.. யாவரையும்  உய்க்க  அது தந்த பரிசு  " கலாம்"  என்னும்  மாமேதையாம். என்றபடி.


கனிவுமனம்  இனியமுகம் பனிகுளிர்ந்த நகையே
துணிவுபெறும் தொனியில்வரும் நனிசிறந்த குரலே
பணியிலுறும் அணியினொடு  கணிதவறாப் புரிவே
இனியுலகில் நினைவில்பிற  நனவில்வரல் உறுமோ

துணிவு பெறும் -  கேட்போர் துணிச்சல் பெறும்படியக .
நனி =  நல்ல.
நகையே -  சிரிப்பே
பணியிலுறும்  அணி  -  வேலையில்  ஈடுபடும்  அவர்தம்  குழுவினர்.
கணிதவறா -   கணிப்பில்  தவறாத  (. துணைக்கோளம் ,  ஏவுகணை  முதலியன செய்து  மேல் எழுப்ப, கணக்கு  நன்கு  போடவேண்டும்.  தவறக்கூடாது.  இதில் கலாம்  வல்லவர். )
புரிவே -  செயல் புரிதலே.
இனியுலகில் நினைவில் :   இனி அவர் நம் நினைவிலேயே  வாழ்பவர்.
பிற  -  மற்றபடி.
நனவில் வரல் உறுமோ -  உண்மை வாழ்வில் மீண்டு வந்து தோன்றுதல் கூடுமோ  என்றவாறு.


















வியாழன், 23 ஜூலை, 2015

பிரிவுஇன்று ஆயின் நன்மை

அம்ம வாழி தோழி நம்மொடு
பிரிவுஇன்று  ஆயின் நன்மைமன்  தில்ல
குறும்பொறை தடை இய நெடுந்தாள் வேங்கைப்
பூவுடை அலங்குசினை புலம்பத் தாக்கிக்
கல்பொருது இரங்கும் கதழ்வீழ் அருவி
நிலங்கொள் பாம்பின் இழிதரும்
விலங்குமலை நாடனொடு கலந்த நட்பே!

இந்தக் குறுந்தொகை பாடலை(134)ப் பாடிய சிறந்த புலவர் சங்கத்துச் சான்றோராகிய    கோவேங்கைப் பெருங்கதவனார். ஆவார்.    இவர்பாடல் குறுந்தொகையில் ஒன்றே உள்ளது. பாடல் இனிமையாக உள்ளது.   இவர் பெயர் இயற்பெயராய்த் தெரியவில்லை.   பாடலில் வேங்கை என்ற சொல்லும் கத  என்ற ஈரெழுத்துக்களும்  வருகின்றன.

இங்கு வந்துள்ள "அம்ம"  என்பது விளித்தல் அல்லது  கவனத்தை ஈர்க்க அழைத்தற்  பொருட்டு.  தலைவி பேசுவது தோழியிடமாயினும் உரிய பணிவுடனேதான் அவள் பேசத்தொடங்குகிறாள்.   பேசத் தொடங்குமுன்  வாழ்த்தித் தொடங்குவது நம்மனோர் பண்டை வழக்கம் , "வாழி " என்கிறாள்.  தோழி  மூத்தவள் என்பது தெரிகிறது.  நம்மோடு என்ற சொல், தோழியையும் ஒருவகையில் உட்படுத்திச் சொல்வதுபோல் உள்ளது.    தலைவியின்  நலனில் தோழியும் அக்கறை யுடையாள் என்பது புலனாகிறது,

பிரிவு இன்று ஆயின் நன்றுமன்!:---   தலைவன் பிரிந்து போகாதவனாய் இருந்திருப்பானாகில் அது நன்றே அல்லது வேறில்லை.  தில்ல என்பது பாட்டில் இசை  நிறைவுக்காக வரும் அசை.   இது விருப்பம் குறிப்பது  என்றும் கூறுவதுண்டு.  அப்பொருள் கொள்ளின் ,  "விரும்பத் தக்கதுமாகும் " என்று  சேர்த்துக்கொள்ளலாம். தில்லை -  சிவனாருடைய விருப்பமான இருப்பிடம் என்பது காண்க. தில் > தில்ல ;  தில் > தில்லை .

குறும்பொறை -  சிறிய கற்கள்.  தடைஇய  -  தடித்த அல்லது பருத்த.  வேங்கை மரம்  நெடிய தாளினை உடையது  என்பதை, "நெடுந்தாள் வேங்கை"  என்றார்.
பூவுடை -  பூக்களையுடைய.   அலங்கு -   அசைகின்ற.   சினை -  இங்கு கொம்பு
என்று பொருள்.   புலம்பத் தாக்கி -   பூக்கள் உதிர்ந்துபோம்படியாக  அருவி நீர்
அசைத்துத் தாக்குகிறது . தலைவியின் நிலையும் இதுதானே.  அவள் மனத்துப் பூத்திருந்த இன்பப் பூக்களெல்லாம் உதிர்ந்து  விட்டனவே.

புலம்பு  -  தனிமை . (தொல் ).  புலம்புதல் :   தனிமையிற் பிதற்றுதல்.

அருவி கற்களுடன் பொருதி   (மோதி)  கீழே வேகமாய்ப் பாய்கிறது.  பேரொலி எழுப்பிக்கொண்டு!
எங்கிருந்தோ ஓடிவந்த நீர்,  அருவியாய், அந்த வேங்கைக் கொம்பைத் தாக்கிவிட்டுப் புலம்ப வைத்துவிட்டு, பாம்பு போல நெடிதாய்ச் சென்று வீழ்ந்து விட்டதே!   வலிமைசேர் வேங்கை மரம்  போல அவள்  குடும்பம் ,  அதிலொரு கொம்புதான்  அவள்.  பூத்திருந்த கொம்பு.   இனி அருவி மேலேறி வருதலில்லை. இனியும் நீர் வரத்து இருந்தாலும் கொம்புக்கு  அதிலொன்றும் இல்லை நாட்டம். பிரிவால் துன்பமாகி விட்டபின் எல்லாம் முடிந்துவிட்டது.

நிலை நில்லாத காதலனை சென்றுவீழ்  அருவிக்கே ஒப்பு வைக்கவேண்டும்.

பிரிவு இன்று :   இங்கு இன்று என்பது இல்லை  என்னும் பொருளில் வந்தது.

இல் +  து:   இன்று.   இன்றை மொழியில் ,  இன்று என்பது இல்லாதது  என்று நீட்டிச் சொல்லப்படும்.  பிற்காலத் தமிழில் இப்படிச் சொற்கள் பல நீண்டன.  இல் + து  ->  இற்று>  இன்று  என்பதில்    வல்லினம் மெல்லினம் ஆயிற்று. (மெலித்தல் விகாரம் ,)

இன் + து = இன்று  என்றும் வரும்.  இது  today என்று பொருள்தரும்.

அடிச்சொற்கள் வெவ்வேறாம்.

பாடலை நன்கு சுவைக்கவேண்டும்.

wanted to write more..  Will edit later. Enjoy this for the moment.