செவ்வாய், 12 மே, 2015

pErikkAy pear



converted to Tamil fonts

----------------------------------------------------------------------------------------------------------------

நாம் விரும்பி உண்ணும் பழங்களில் பேரி என்பதுமொன்று. 

பேரி  என்பது  இனிமையான  பழம்.  any of several tree and shrub species of genus Pyrus /ˈprəs/, in thefamily Rosaceae,

 சென்னை வட்டாரத்தில் உள்ளோர், இதனை  bEri என்று ஒலிப்பதாகத் தெரிகிறது. மலேசியாவில் இதனைப் பேரி  என்றுதான் சொல்வோம். அப்படிச் சொல்லாதவர்கள், இதனைப் pear  (பே ர் ) என்றே ஆங்கிலத்தில் சொல்லிவிடுகிறார்கள். Beari என்று யாரும் சொல்வதில்லை.

ஆங்கிலச் சொல், பேர்  pear  என்றே வருவதால்  தமிழிலும்  பேரி என்பதே நாம் சொல்வது. பேர்  pear என்ற சொல்லுக்கும்  இது நேரானதாகத் தெரிகின்றது. இதன் சொல்லமைப்பைக் கவனிப்போம்.  இதைப்பற்றிக் கூறப்படுவது:

The English word “pear” is probably from Common West Germanic pera, probably a
loanword of Vulgar Latin pira, the plural of pairum, akin to Greek ἄπιος apios (from
Mycenaean ápisos),[2] which is of Semitic origin (Aramaic/Syriac "pirâ", meaning
"fruit", from the verb "pra", meaning "to beget, multiply, bear fruit"). --- Wikipaedia.


சமஸ்கிருத மொழியில், இதற்குச்  சுவையான பழம் என்று பொருள்படும் "அம்ருதபல" ( the fruit of Trichosanthes D. Roxb , ) என்பதும் "ருசிப்பல" (  the fruit of Momordica Monadelpha L.) என்பதும் பெயர்களாய் உள்ளன.  May refer to different kinds of fruits considered as pears.  இதனை அங்கு "அம்ருதாஹ்வ" (amRtAhva ) என்று சுட்டலாம் என்று தெரிகிறது.   வேறு வகைகளிற் குறிப்பிடலாம் எனினும், பிற சொற்களுக்கு வேறு பொருள்களும் உள்ளனவாயின் குழப்பம் நேரலாம்..

இந்தச் சுவை மிகு  பழந்தரும் மரத்திற்குச் "சீனரஜபுத்ர"   (சமஸ்கிருதம்)  என்ற பெயரும் இருக்கின்றது. இது ஒரு காரணப்பெயர்.  பேரிக்    காய்  அல்லது பழம் தரு மரம்  இப்பெயரால்  கூறப்படுதல்  இது சீனாவைத்  தாயகமாய்க் கொண்டதென்பதைக் காட்டுவதாகும். இப்பழம் பற்றிய  வரலாறும் சீனாவையே  தாயகம் என்கிறது.

பேரியில் பலவகை உண்டு.  பேரி போன்ற வேறு பழங்களும் உண்டு,  "சர்க்கரைப்பேரி" என்பதும் ஒரு வகை.  சர்க்கரைப்பேரி  தமிழ்ப் பெயர்.

பேரி என்பது தமிழ்ச் சொல் என்று கருதவேண்டி உள்ளது. பேரி என்பதன் மூலச்சொல் ப்ர get என்ற அரமாயிக் மொழிச்சொல் என்பர்   பெறு  get என்ற தமிழோடு ஒத்திருப்பதால்,  பேரி  என்பது தமிழுடன் தொடர்புடைய சொல்லே என்று கொள்ள வேண்டும்

Notes:


பெஅர் என்ற ஆங்கிலச்சொல் ஏனை இந்தோ ஐரோப்பியத்தின் வழியாக அரமாயிக் மொழியிலிருந்து வந்தது என்பது மேலே கூறப்பட்டது. அரமாயிக் என்பது இயேசு நாதர் காலத்தில் இசுரேல் நாட்டிலும்  வழங்கிய மொழியாகும்.  சமத்கிருதத்துக்கு எழுத்தில்லாத காலத்தில், அரமாயிக் மொழியையே பழைய "இந்தியாவின்"  மேல் பகுதிகளில்  எதையும் எழுதி வைத்துக்கொள்ளப் பயன்படுத்தினர் என்பர் மேலை வரலாற்று ஆசிரியர்கள்.

பெறு (தமிழ்)  -    peRu (thamiz)  -     get, beget   :  pr (aramAyik)  get, beget, a tree getting fruit.

pr > (other IE forms meaning fruit  etc said above)  > pear.


பெறு > பெரு >  பெரு+ இ  >  பேரி.
இது முதனிலை திரிந்த தொழிற்பெயரின் வடிவமாகின்றது.

cf:  அரு > ஆரி..   இது போலும் திரிபுகளை முன் இடுகைகளிற் காண்க.

(பேரி  பற்றி  இரண்டு மணி நேரம் செலவிட்டு  ஒரு சிறிய கட்டுரை, தமிழ் எழுத்துருத் தட்டச்சு கொண்டு எழுதிக் கொண்டிருந்தேன். அது ஏறக் குறைய முடியும் கட்டத்தில் இருந்தபோது, நகர எழுத்து வருவிப்பதற்காக,  w என்பதைத் தட்டப்போய்,  எழுதியது முழுவதும் தொலைந்துவிட்டது.  அதை மீட்டெடுக்க முடியாது போகவே, நினைவில் இருந்தவற்றைக்கொண்டு, மீண்டும் இப்போது வரையலானேன்.  )

Shall review later.

ஞாயிறு, 10 மே, 2015

பிரம்மானந்தம்

ஆனந்தம் என்ற  சொல்லை முன் இடுகையொன்றில் ஆய்ந்துள்ளோமென்று  உங்களுக்குத் தெரியும்..  ஆங்கு அறிந்துகொண்டதை ஈண்டு நினைவு கூர்க

இது தமிழ் மூலங்களை உடைய சொல். இந்தியாவெங்கும் வேறு மொழிகளிலும் வழங்கிய சொல். புத்தரின் தலைமாணாக்கருக்கும் பெயராய் அமைந்து சிறப்புற்ற சொல்.  தமிழ் தலைத் திராவிட மொழியாகலின் இந்தியாவெங்கும் வழங்கிய மொழி என்பதும்  பாகதங்கள் பலவினுக்கும் சொற்கள் பல தந்துதவிய மொழி என்பதும் அறிதல் வேண்டும்.

இப்போது பிரம்மானந்தம் என்ற சொல்லை அணுகுவோம். இது உண்மையில் பெருமானந்தம்  அதாவது பெரும் ஆனந்தம் என்பதன் திரிபு ஆகும்   பெரு ஆனந்தம் என்பது தமிழ்ச் சொற்புணர்ச்சி முறைப்படி பேரானந்தம் என்று வரவேண்டும்.  அங்ஙனம் வாராதது அது தமிழின் பயன்பாட்டுக்கென்று அமைக்கப்பட்ட சொற்றிரிபு அன்றென்பது  பெற்றாம்.


இதைப் பிரம்மா+ ஆனந்தம்  என்று பிரித்து பிரம்மனின் ஆனந்தம் - ஆகவே  பெரிதான ஆனந்தம் என்பதுண்டு. பெரு + ஆனந்தம் > பெருமானந்தம் > பிரமானந்தம் என்று வந்துவிடுவதால்,  பிரம்மனின்  ஆனந்தம் ஆகவே பெரிய ஆனந்தம் என்று  சுற்றிவளைத்து வந்து சேரவேண்டியதில்லை. பரமன்+ ஆனந்தம் = பரம + ஆனந்தம் > பரமானந்தம் என்பதுமுண்டு.  பரமன் என்பது பரத்தல் >  எங்கும் பரவி நிற்றல் என்ற கருத்தில் வரும் .  அங்ஙனமாயின், அது தனி மாந்தனின் ஆனந்தம் அல்லது மகிழ்ச்சியைக் குறிக்க ஏற்புடைய சொல்லன்று. 
பரமனின் மகிழ்ச்சி என்று பொருள்பட்டுப் பொருள் வேறுபாடு அடையும். 


Brahma and prophet Abraham of the Jews.

பிரமன் அல்லது பிரம்மன் என்பது ஆப்ரகாம் என்பதன் திரிபாய் யூத இறையுணர்வாளர்  ஆபிரகாம் என்பவரைக் குறிக்கும் என்றாரும் உளர்.  ப்ர > ஆப்ர என்று திரிந்தது என்பர்..  ஆனால் ஒன்று "கடவுள்" மற்றொன்று மனிதரைக் குறிக்கும் என்பதாலும் இவர்களின் வரலாறுகளாகக் கூறப்படுவன  ஒற்றுமை இல்லாதன என்பதாலும் பொருந்துவனவாய்த் தெரிந்திலது.


will edit

புதன், 6 மே, 2015

TholkAppiyar from kAppiyakkudi an ancient Tamil sect.

தொல்காப்பியம் என்ற கூட்டுச் சொல்லில் இரு சொற்கள் உள்ளன.
ஒன்று தொல் என்பது. மற்றொன்று காப்பியம் என்பது.

தொல்காப்பியம் என்பது  சிலப்பதிகாரம்  மணிமேகலை போன்ற காப்பியம் அன்று. எனவே  இந்தச் சொல்  வடமொழியிலுள்ள காப்யா  என்ற சொல்லினின்று வந்ததென்பது  தவறு ஆகும். 

இது காப்பு +இயம்  என்ற சொல்லும் விகுதியும் சேர்ந்தமைந்த சொல்லாகும். இதன்  முன் நிற்கின்ற "கா" என்பது  காத்தலென்னும் வினைச்சொல்.  பு  என்னும் விகுதி பெற்றுக் காப்பு ஆகி மீண்டும் இயம் என்னும்  விகுதி பெற்றுக் காப்பியம் ஆனது.   

இதை யாம் முன்னரே எம் இடுகைகளில் சொல்லியிருந்தோம்.  சில ஆண்டுகட்கு முன்னர்! 

பிறரும் இணையக் கட்டுரைகளில் சொல்லியிருந்தனர்.

காப்யா என்ற வடசொல்லை இங்கு ஆராயவில்லை.  அது நிற்கட்டும். அதைப்பற்றியும் முன்பு எழுதியதுண்டு.  ஆங்குக் காண்க.

தொல் பழங்காலத்தில் "காப்பியக் குடி" என்றொரு குடி ( குலத்து உட்பிரிவு)   இருந்தது.  அவர்களின் தொழில், பழைய இலக்கணங்களைக் கற்று, இலக்கியங்களையும் அறிந்து, அவற்றைக் காப்பது ஆகும்.

இப்படியும் இருந்திருக்குமா என்று வியந்து கேட்போருக்கு,  நாம் வரலாற்றையும் சற்று எடுத்துக்காட்டுவோம்.  பழங்கால யூதரிடை
"scribes"   (writers) என்றொரு பிரிவினர் இருந்தனர் என்பதை நீங்கள் விவிலிய நூலிலிருந்து கண்டுகொள்ளலாம்.  அரபியர்களிடை "அல் காத்தீபு" என்ற  (people of learning)  குடிபெயருடையவர்களும் இருந்தனர். சிறிது வரலாறு படித்து இதனை உறுதிப்படுத்திக்கொண்டால் உங்களுக்கு வியப்பு ஏற்படக்  காரணங்கள்  இரா.
Also search in histories of  other ancient civilizations.

காப்பியக்குடி பற்றி  பேராசிரியர் கா . சு. பிள்ளை அவர்களும்
எழுதியுள்ளார். 

காப்பியாற்றுக் காப்பியனார் என்ற காப்பியக் குடிப் புலவரும் சங்க காலத்தில் இருந்தமை உணரவேண்டும்.

பல்காப்பியர் என்ற ஓர் இலக்கணப் புலவரும் இருந்தார். அவரின் சில நூற்பாக்கள் யாப்பருங்கலக் காரிகையில் காட்டப்பெறுகின்றன.

இது காறும் சுருங்கக் கூறியவற்றால்,தமிழரிடை காப்பியக் குடியினர் இருந்ததும் அக்குடிப் பிறந்த அறிஞரே தொல்காப்பியர் என்பதும் இனிது விளங்கும்.

In the above  we referred to scribes in  other civilisations..  In latter day India too there were.  An excerpt from Wikipaedia for you:

So there is every probability that a number of brahmana families were mixed up with members of other varnas in forming the present Kayastha and Vaidya communities of Bengal."[5]

According to the Hindu scriptures known as the Puranas, Kayasthas are descended from Chitragupta, "who was born from the body of Brahma", and is the deity responsible for recording the deeds of humanity, upholding the rule of law, and judging whether human beings go to heaven or hell upon death.[2][3]


Brahmanical religious texts refer to them as a caste of scribes, recruited in the beginning from the Brahmin, Kshatriya and Vaishya castes,

You may delve into the history of other linguistic groups besides the Bengali  and should be able to find parallel developments

தொல்காப்பியர்  காலத்தில்  மக்களிடை அகமண  முறை இருந்ததற்கான சான்றுகள் இல்லை/   

will edit later