செவ்வாய், 7 ஏப்ரல், 2015

வாசனின் வாச மங்கை a story

வாசன்  ஓர் கடின உழைப்பாளி.  இந்தியாவிலிருந்து  மலாயாவுக்கு ஜப்பான் போர்  தொடங்குமுன் வந்தவர். போர் முடிந்தபின் தன் சொந்தச் சிற்றூருக்குச் சென்று பார்த்தவருக்குப் பேரதிர்ச்சிதான் காத்திருந்தது. தான் அன்புடன் அணைத்து மகிழ்ந்த மனைவி இன்னொருவருடன் குடும்பம் பண்ணிக்கொண்டு இரண்டு பிள்ளைகளையும் பெற்றுக்கொண்டு மகிழ்வுடன் வழ்ந்துகொண்டிருந்தாள்

"நீ  மலாயாவில் ( இப்போது மலேசியா) குண்டுபட்டு இறந்துவிட்டதாகக் கேள்விப் பட்டுத்தான் அவன்  மறு புருசனை எடுத்துக்கொண்டாள். யாருடைய தவறும் இல்லை"  என்று ஊர்ப் பெரியவர்கள் சொல்லவே,  ஒரு தென்னை மரத்தடியில் இருந்து தனியே அழுதுவிட்டு,  அடுத்த கப்பலிலேயே ஏறி சிங்கப்பூர் வந்து சேர்ந்தார்.

நண்பர்கள் பரிந்துரையின் பேரில் நல்லவேளையாக அவருக்கு வெள்ளைக்காரனின் போர்க்கப்பல்களில் குழாய்கள் சீர்ப்படுத்தும் ஒரு வேலை கிடைத்தது. கொஞ்சம்  நல்ல சம்பளமும் கிடைத்தது.  கல்யாணமும் வேண்டாம் கத்திரிக்காயும் வேண்டாம் என்றிருந்த்தவர்,  அங்கு இருந்த மணிமேகலை சாப்பாட்டுக் கடையில் நல்ல இலைச் சாப்பாடு சாப்பிடுவதும்
பாய்போட்டு நன்றாக உறங்குவதும் வேலைக்குப்போவதுமாக இருந்தார்.

"இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?" என்றொரு கண்ணதாசன் பாட்டு வானொலியில் வருவதுண்டு.  அந்தப் பாட்டு வானொலியில் யார்செவியிலும் ஏறாத அந்தக்காலத்திலேயே வாசனின் நண்பர்கள் வாசனிடம் வந்து உரையாடும் போதெல்லாம் "இப்படியே இருந்துவிட்டால்  எப்படி இருக்கும் எதிர்காலம்?"  என்று துளை துளை என்று துளைக்கத் தொடங்கிவிட்டார்கள். யாரும் மகிழ்ச்சியாகக்  காலங்கழித்தால்  விடமாட்டார்களே!
வாசனும்  அதற்கெல்லாம் அசைந்து கொடுக்காதவராய் " இந்தப் பொம்பிளைகளே எனக்கு உதவாது.  தனியாகவே இருந்து செத்துப் போகிறேன் " என்று பதிலடி கொடுத்துக்கொண்டிருந்தார்.  விட்டுவிடுவார்களா ?
ஒரு நாள் அவரை ஒருவாறு மடக்கிப் பிடித்து  அந்தக் காலத்து "ஆஸ்டின்" வண்டிக்குள் போட்டு  மலாயாவில்   பாலோ என்னும் இடத்திற்குக் கொண்டு போனார்கள்.  
ஒரு பெண்ணைக் காட்டினார்கள்.  சிவந்த மேனி,  பலாப்பழம் நிறத்து உதடுகள் ,இவருக்கு ஏற்ற நல்ல  உயரம்,  பிறை போலும் நெற்றியில் வாள் போன்ற கண்கள், முத்துப்பல்  வரிசை .........யாரும் வேண்டாம் என்று ஒதுக்க முடியாத வாட்டசாட்டம்...
என்ன கட்டிக்கொள் ... என்றார்கள் நண்பர்கள்.  பெண்ணின் தகப்பனார், தாயார் உடன்பிறப்புகள் எல்லாம் வாசன் எப்படி வாய்மலர்ந்து எல்லோரையும் மகிழ்விப்பார் என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள்......பெண்ணுக்கும் வாசனைப் பிடிக்கத்தான் செய்தது.  சரி சொல்லமாட்டாரா என்று உள்ளே அறையில் கொஞ்சம் சரிந்தே படுத்துக்கொண்டிருந்தாள் பெண் .  அவருக்குக் காப்பி கலக்கிக் கொடுத்த போதே அவரை நன்றாகக் கவனித்துக்கொண்டாள்.

இரண்டாம்  பாகத்தில் தொடர்கிறது......

will edit as necessary later.


திங்கள், 6 ஏப்ரல், 2015

Where did you hide yesterday



எப்போதும் சில்லென்று வீசுவாய் திரைத்துணி
எழவும்பின் விழவும் நீ இயன்றபடி செய்குவாய்.
தப்பேதும் இல்லைஎன்றன் தாவணியும் நகர்த்துவாய்
தனியேனென் றெண்ணாமல் தழுவிடுதல் புரிகுவாய்


தளிர்களையும் இலைகளையும் தலையசைத்தே அயர்த்துவாய்
தண்ணீரில் அலைகளெழத்  தாமரைக் குளம் தவழுவாய்
குளிர் நுகர நான்மகிழக்   காற்றினியாய் உலவுவை
குளிர்வேண்டி ஏங்கினேனே  நேற்றெவண் நீ ஒளிந்தனை?


சில் -  ஜில் வடவெழுத்து  நீக்கப்பெற்றது .
காற்றினியாய் -  இனிய  காற்றே 
 .

சனி, 4 ஏப்ரல், 2015

உபத்திரவம்

இனி உபத்திரவம் என்ற "சமஸ்கிருதச்" சொல்லை   ஆய்ந்தறிவோம்.

முதல் வேலையாக இது சமஸ்கிருத அகரவரிசையில் உள்ளதா என்று பார்த்தல் கடனாகும்.

எமக்குத் தெரிந்தவரை   நாம் கருதவேண்டிய "உபத்ர...."  எனல் தொடக்கத்துச் சொற்கள் இரண்டே  அகரவரிசையில்  உள்ளன.  அவை வருமாறு:-

1 உபத் ர ட் .
2 உபத்ற்ண்ய 

உபத்ரட்  என்பது  துளைத்தல் என்று பொருள்படும்.   இதிலிருந்துதான் வந்திருக்குமோ?  காலை கையை உடலை. மனத்தைத் துளைக்கின்ற விடயம் என்கிற பொருளில்  நேரடியாகக் கடன்பெறாமல், அதிலிருந்து பொருள் பெறப்பட்டு  அமைந்த சொல்லாய் இருக்குமோ?

உபத்ரண்ய என்பது பாம்பு குறித்தது.  பம்புபோல் நெளியும் விடயம் என்றபடி வந்திருக்குமோ? அப்படியானால் அது இன்னும் வந்துசேராத உபத்திரவத்தைக் குறித்திருக்குமோ?  இது பொருத்தமில்லையே!

சமஸ்கிருதத்தில் "உப" என்பதன் பொருள் இருக்கட்டும்.  தமிழைப் பொறுத்தவரை,  உவ-  என்றால்  முன்னிருப்பது.  இது உகரச் சுட்டடிச் சொல்.  ஆனால் உது,  உவன் என்பன இலக்கண நூல்களில்மட்டுமே கணப்படுவது .  வழக்கொழிந்துவிட்டது.

ஆனால் அது அவன், இவன் இது என்பன இன்னும் உள்ளன. சுட்டுக்கள் மூன்று, அவை அ, இ, உ ஆகும்.

உபத்திரவம் என்பதில் திரவம் என்பது உண்மையில் துருவுதல் என்னும் வினையிலெழுந்த துரவம் ஆகும்.  துருவு> துருவு + அம் = துரவம்  (ரு >ர  திரிபு ) ஆம்.   துருவம் என்பது அதே அடிப்பிறந்த இன்னொரு தொடர்புடைய சொல் ஆகும்.

ஆக,துருவு+அம் = துருவம்  (இதில் "வு " என்பதன் உகரம் கெட்டது .)
துருவு+ அம்  = துருவம் >  துரவம் > திரவம் . முழுச்சொல்லின் பகுதியாய் வருகையில்  துருவம் என்ற பகுதிச்சொல்  இத்திரிபுகளை அடைந்தது. 


 உவ + துருவம் =  உவத்துருவம் > உவத்திரவம்> \
 உவத்திரவம்    என்றால்  உங்கள் முன் தோன்றி உங்களைத் துளைக்கும் துன்பம்

ஏனைச் சொற்களைப்  பிரித்தல் போல்   உப + திரவம்  என்பது  பிறழ்பிரிப்பு ஆகிவிடும்.   அப்படிப் பிரித்தால்  கிடைக்கும்  பொருள்  supporting liquid என்பது. அது பொருளன்று. .

உவத்  துருவு  :இதுவே சமஸ்கிருதத்தில் உபத்ற்ட்  என்று திரிந்து நிற்கின்றது.

பேச்சு வழக்கில்  ஒவத்திரியம் என்றும் வழங்கும் 

----------------------------------------------------------------------------------------------------------------------
குறிப்பு:
ப - வ  திரிபு:  என் முன் இடுகைகள் காண்க.   உப = உவ. இந்த உப என்பது  "துணை"  என்னும் பொருள் உடையதன்று.

துருவுதல் =  துளைத்து வெளிப்படல்.

இது பேச்சு வழக்கிலிருந்து சங்கதம் சென்றது.  மிகத் திரிந்துவிட்டது.