சனி, 10 ஜனவரி, 2015

பாரம்

பாரம் 

பாரமென்பது,  சுமை அல்லது பளு, கனம் என்றெல்லாம் பொருள்படும் ஒரு சொல்.

பருத்தல் என்பது,  உருவில் பெரிதாவது என்னும் பொருள்படுவது.
பரு என்பது பார்  என்று திரியும்.  பருத்த பொருளுக்கே எடை கூடுமாதலால்,  பார் என்பது அம் விகுதி பெற்று கனம் என்று பொருள் தந்தது.

பரு> பார் >  பாரம்.

இதனை:  வரு> வார்> வாரம்,   தரு> தார்>  தாரம் என்னும் சொற்களுடன் ஒப்பிட்டு அறிந்துகொள்க.

வாரம்:  ஒன்றன்பின் ஒன்றராய் வரும் கிழமைகள்.

தாரம் : இல்லறத்தை தருபவளாகிய மனைவி.

வருதல்:  வார்   (வாராய்).  தரு:  தார் (தாராய்) என்ற திரிபுகளையும் நோக்குக.

பரு என்பது விகுதியின்றி நின்று,  தோலில் தோன்றும்  சிறு குமிழ்போலும் எழுச்சியையும் குறிக்கும். தோலில் எழுந்து பருக்கும் ஒன்று என்பது பொருள்.

இபாரத்து

இபாரத்து  என்ற சொல்லைப் பயன்படுத்தி ஒரு சிறு கவிதை எழுதினேன்.
இது சுபாஷ் ஆனந்தன்  என்ற வழக்குரைஞரின் மறைவு குறித்த பாடலில்  இடம்பெற்றிருந்தது.


http://sivamaalaa.blogspot.com/2015/01/subhas-anandan-condolences.html இச்சொல் எழுத்து பேச்சு முறைகளைக் குறிக்கும்.

இச்சொல் அமைந்தது எப்படி?

எழுத்து பேச்சு  முதலியவை மென்கலைகள்,

கல் அரிசி மூட்டை போன்று பாரம் இல்லாதவை. பருப்பொருள் அல்ல

இல்  >  இ  :  இது கடைக்குறை.  இல்லாமை குறிப்பது

பாரத்து :  பாரம் +   து,  பாரத்தை உடைமை. 

ஆகவே இபாரத்து எனில் பருப்பொருள் அல்லாதது  அல்லது பாரம் உடையதாய்   இல்லாதது.

இச்சொல் யார் அல்லது எந்தக் குழுவினர் வழங்கிய சொல் என்று தெரியவில்லை.
(
The template in this blog seems to have been altered by some external forces/  Let us see if it comes back to normal.)

வெள்ளி, 9 ஜனவரி, 2015

Def Sec Gotabaya,& Ayoma flee

Gota Flees To Maldives By Air Force Plane

January 9, 2015 | Filed under: Colombo Telegraph,News,STORIES | Posted by: COLOMBO_TELEGRAPH


Refer to editions of the above publication for full  story