சனி, 31 மே, 2014

பூர்விகம்

ஓரிடத்தில் உள்ள ஒன்று பிறிதோரிடத்துப் போய் அடங்குமாயின் அதனைப் "புகுதல் '  என்கிறோம். பலர் இதனைப் "பூர்(தல் )  என்கிறார்கள்.

இந்த உறைக்குள் தலையணை பூரமாட்டேன் என்கிறது:" என்பர்.

ஒன்று ஓரிடத்தில் பூர்வதுதான் (புகுவதுதான்)  அதற்குத் தொடக்கம் ஆகும்.

பூர் > பூர் +வ் ​ + இகம் > பூர்விகம்.
பூர் + வ்  +அம்  =  பூர்வம். (தொடக்கம்.)

பூர் என்பது புகு என்பதன் திரிபாதலின், பூர்வம் என்பது புகவம் என்று இருக்கவேண்டும்.  அப்படி இல்லை; அதுவும் ஒன்றும் நட்டமில்லை.

இது பேச்சு வழக்குத் திரிபுச் சொல்லாகும்.  இகம் ஒரு விகுதி.
  

virus

Some virus program is preventing new posts.  This will be looked into and rectified.

nAtham

நாதம் பலவாறு எழுகிறதென்பது இன்றைய மனிதனுக்குச் சொல்லாமலே புரிந்துகொள்ளக்கூடியதாய் உள்ளது. ஆனால் ஆதி மனிதன் இதனை இவ்வாறு அறிந்திருக்கவில்லை. அவனுக்கு முதன்முதலாய் உணரத் தக்கதாய் நின்றது ஒரு நாதம் தான்.  அது நாவிலிருந்து எழும் ஒலியாகிய நாதம்.

நா  ‍ நாவினை அடிப்படையாக ;  து : உடையது;  அம் ‍  விகுதி.
நா+  து ‍‍+ அம் =  நாதம் ஆயிற்று.

பின் அறிவும் திறனும் அடைந்த மனிதன்,  நாதமானது எங்கும் நிறைந்து உளது என்பதைனை அறிந்துகொண்டான்.

ஏபிசிடி படித்துத்தான் வித்துவானாகி இருக்கவேண்டும். குகைவாழ் முந்தியல் காலத்திலேயே அனைத்தையும் அறிந்துவிட்டதுபோன்ற பாவனையில் கூறப்படும் சொல்லமைப்புகள் வரலாற்று நடைக்கு ஒவ்வாதவை.  

ஆ ற்றின் ஒழுக்கிலும்  நாதம் உள்ளதே!  அதிலும் வேத ஒலி கேட்கிறதே!  ஆற்றொலியை ஆதி மனிதன் கேட்டிருப்பான் எனினும் இத்தகு உணர்வு  அவன் பெற்றது பின்புதான்.