புதன், 7 மே, 2014

சுகந்தம்

எப்படித் தோன்றியது சுகந்தம் என்னும் இந்தச்சொல்?  இதை இப்போது ஆய்வு செய்வோம்.

உயிர் எழுத்து முதலில் வந்த சொல் சகர வருக்க எழுத்து முதலாகத் திரிபு அடைந்து சொல்லாகும் என்பதை பல இடுகைகளில் (ad nauseam) சொல்லி இருக்கின்றோம்.  அதை நினைவில் இருத்திக்கொள்ளுங்கள்.

இருத்திக்கொண்டு அந்த இருதி ( ரீதி) யிலேயே இதையும் நோக்குக.

உகந்த >  சுகந்த >  சுகந்தம்.

மிகவும் இனிய நிலை, சுற்றுச்சார்பு,  நுகர்வு.

சுகந்தம் என்ன அரிய சொற் படைப்பு தெரியுமா

உடலுக்கு உகந்த நிலை - சுகம்

சுகம் என்பது உடலுக்கு ஏற்றதொரு நிலையைக் குறிக்கும் .சொல் .  நல்ல தமிழில் இதை "நலம் " என்கிறோம். ஆங்கிலத்தில் உள்ள health என்பது,  heal  புண் ஆறுதல் என்பதிலிருந்து  தோன்றிய சொல் அன்றோ?   ஆறாத புண் தேறாத உடலைக் குறிப்பது.  அதாவது நலமின்மை.

சுகம் என்ற சொல் எப்படித் தோன்றியது?   உகந்த என்பதில் உள்ள "உக " என்பதன்  திரிபே சுகம் என்பது

உயிரெழுத்தில் தொடங்கிய சொற்கள் அவற்றுக்கேற்ற  சகர வருக்க எழுத்துக்களில் ஒன்றில் தொடங்கும் திரிபுகளை முன்பு   நாம் கவனித்துள்ளோம்.  அந்த அறிவினை இப்போது நாம் வரவழைத்துக் கொள்ள வேண்டும்.  நினைவு கூரவேண்டும். அல்லது அந்த இடுகைகளைப் புரட்டிப் பார்க்க வேண்டும்.

உக > உகத்தல்
உக > உகம் > சுகம்.
உக + அம் =  உ (க் +அ)  +  அம் =   உக் + அம் =   உ (க் +அ ) ம் =   உகம்.
இதை நிலைமொழி ஈற்று அகரம்  கெட்டது என்பர் இலக்கணியர். 

எனவே சுகம் என்பது உகந்த உடல் நிலை என்று பொருள் படும்.

உகத்தல் - விரும்புதல் , தேர்ந்து எடுத்தல் என்றும் பொருள்

"காக்கை உகக்கும் பிணம்" என்ற வரி நினைவில் உள்ளதா?

சுகம் > சுகா  : இது மலாய் மொழியில் .விரும்புதலையே குறித்தது.. தமிழில் உடல் நலம் குறித்தாலும், உகத்தல் என்ற சொல்லின் நேரடிப் பொருளில் மலாய் சுகா உள்ளது என்பதைக் கவனித்தல் வேண்டும். So the Malay word is closer in meaning to the original word  'uka".

sukAmamfn. Sanskrit:    having good desires


திங்கள், 5 மே, 2014

வே > வி

முன் இடுகையில் வே > வி திரிபு பற்றி கண்டோம்.  வே> வி என்று திரியும் என்பது வி > வே என்று திரியும் என்றும் பொருள்படும். மக்கள் சொற்களை பலுககுவதற்கு எது எளிதானது என்பதைப் பொறுத்தே இத்திரிபுகள் அமைகின்றன.

இனி இன்னோரு திரிபு கண்போம்.

வேண்டல்  - விண்ணப்பம் என்பவை ஏறத்தாழ ஒரே பொருளுடையவை.
வேண்டல் என்பதில்  அல்  இறுதி நிலை அல்லது விகுதியாய் நிற்கின்றது.
விண்ணப்பம் என்பதோ,   விண் என்பதுடன் "அப்பு+ அம்  " என்பனவும் உள்ளன.அப்பு  என்பது அனுப்பு என்பதன் இடைக்குறை போல் தோன்றுகிறது. அன்றி, அப்பு -  ஒட்டு என்று பொருள் கொண்டாலும் இழுக்கில்லை.

 விகுதி ஆய்வை விட வேண் > விண் என்பதே நாம் ஆயப் புகுந்தது.

வேண் என்பதில் உள்ள  பொருண்மை விண் என்பதில் இல்லை  ஆதலினால்,அப்பு (அனுப்பு ) என்ற இடை நிலை
  தேவைப்பட்டது போலும்.

வே > வி  திரிபுக்கு இது  நல்ல உதாரணம் ஆம்.