புதன், 2 ஏப்ரல், 2014

முதலியார் என்ற சொல்லமைபு

முதலியார்  என்ற சொல் எங்ஙனம்  உருவாயிற்று என்று கண்டுபிடிக்க முயன்ற அறிஞருள்    கத்தோலிக்க ஃபிரஞ்சு   இறைக்குரு  ஆபி டூபாவும் ஒருவர்.  முதல் என்ற  சொல்லினின்று இப் பட்டப்பெயர் ஏற்பட்டதென்பது அவர் முடிவு.  அதையே அவர் தம் நூலில் எழுதினார். அதைப் படித்த நம் அறிஞர்களும்  அதையே சொல்லிவந்தனர்.  முதல் போட்டு கடை முதலியன வைத்து வியாபாரம் செய்தவர்கள் என்பது டூபாவின் முடிவு.

அப்போதைய நிலையைக்  கருத்தில் கொண்டு  செய்யப்பட்ட கண்டுபிடிப்பு அதுவாகும் .

ஆனால்  கல்வெட்டுக்களில்  அது படைமுதலி என்றிருந்தது  பின் அறியப்பட்டது.  படையின் முதல்வரிசையில் அவர்கள் சென்றனர் ஆதலின் படை முதலிகள் ஆயினர். நாளடைவில் படை என்ற தலைச்சொல் உதிர்ந்த நிலையில் முதலி என்றும்  முதலியார் என்றும் அமைந்தது.  எனவே   பழந்தமிழர் போர் நடவடிக்கைகளில் ஏற்பட்ட சொல் இதுவாம். Thus it was a  name of a military rank. (தலையெழுத்து உதிர்ந்துபோன தமிழ்ச் சொற்கள் பலவாம் )

இந்த பட்டப் பெயர் வேறு மொழியினரிடத்தும்   சென்று புகுந்துள்ளது.

செங்குந்தம் என்பது தடி.  செங்குத்தாகப் பிடித்துச் சென்றதனால் இதைச் தூக்கிச் சென்ற முன்வரிசை அணியினர் செங்குந்தர் ஆனார்கள். அவர்கள் செங்குந்த முதலிகள்  என்றறியப்பட்டனர்.  செங்குந்தம்  -  lance.  Compare today's army or other force rank "Lance Corporal". இப்போது இவர்கள் பெரும்பாலும் நெசவாளர்கள்

notes

அகம்படியர் -  internal palace workers or officials.  இதை டூபா சரியாகச் சொல்லியிருக்கிறார். 
Abbe Dubois  French missionary in India, b. in 1765 at St. Remèze (Ardèche); d. in Paris, 17 Feb., 1848. The Abbé Dubois was a director of the Seminary of the Foreign Missions, a member of the Royal Societies of Great Britain and Paris, and of the Literary Society of Madras.

செவ்வாய், 1 ஏப்ரல், 2014

நிதானம்

நிதானம்  என்ற  சொல்  மக்களிடையே பெரிதும் பயின்று வழங்குவதாகும்.
இதை வேறு சொல்லலால் குறிக்கலாமென்று "அமைதி "  அல்லது அமைதி காத்தல் என்ற சொல்லால் /     தொடரால் குறிப்பிடலாமென்றாலும் இவை நிதானம் என்பதற்குச்  சமனாக நிற்பனவா என்ற கேள்வி எழக்கூடும்.
நிதானம் என்பதில் அவ்வளவு  பொருண்மை உள்ளடங்கிக் கிடைக்கின்றதா  என்று ஆய்வதற்கிது  தூண்டுகின்றது;

நிதானம் எம்மொழிக்குரிய சொல் என்பதன்று நம் ஆய்வு.

முதலில் இச்சொல்லினுள் புகுந்து நோக்குவோம்.

நில்  எனபது கடைக்குறைந்து நி  என்று நிற்கின்றது.

அடுத்து வரும் சொல் "தானம் "  எனற்பாலது,
இது  தான்+ அம் என்ற    சிறு  சொற்கள் உள்ளிடப்பெற்றது.

பிறர்  துள்ளினாலும் துடித்தாலும்  ஓடினாலும்  ஆடினாலும் பேரொலி கிளப்பினாலும் இன்னும் உள்ள நிலையைக் குலைக்க  ஏதேது  செய்தாலும் தான்  நின்றபடி  நிற்பது என்ற கருத்தை நி(ல்)+ தான்  என்ற சொற்கள் காட்டுகின்றன.

இப்படிச்   முறைமாற்றி இட்டுச் சொற்களைப் புனதலைப் பல இடுகைகளில்  எடுத்துக்காட்டியுள்ளேன்.

அம்  என்பதை  ஓர்   இடுகையில்  விளக்கியுள்ளேன்,  அம்  ‍ஒரு  விகுதி.   அழகு என்றும்  பொருள்.

நிதானம் =   நி(ல்)  + தான் + அம்   =     தான் + நில் + அம் =  "தான் நிற்றல்  அழகு"  அதாவது   பிறர் துள்ளினால்  துள்ளட்டும்.


இதுவே நிதானம் பிறந்த கதை.  


சுரோணிதம்

சுரோணிதம் என்ற  சொல் நம் அன்றாட வாசிப்புகளில் அடிக்கடி எதிர்கொள்ளும் சொல்லன்று. பட்டினத்தடிகளின் பாடலில் இது வருகிறது. அந்தப் பாடல் திரையில் ஒலிக்கவே, ஓரளவு புழக்கத்திற்கு வந்தாலும்,  பலரும் அறியாத சொல்தான்.


இது பெண்ணின் கருப்பையில்  தங்கி குழந்தை உருவாகப் பெண்ணின் பங்காக அமையும் ஒரு நீரைக் குறிக்கிறது..      இது எங்ஙனம்   அமைந்தது என்று காண்போம்.

சுர  + ஒண்  +  இது  + அம்  =   சுரோணிதம்

ஒண்மை  - ஒளி  அல்லது உயர்வு குறித்தது.  இது பெண்மைக்குப் பெருமை சேர்க்கும் விதமாக அமைந்துள்ளது

ஒப்பீடு:

சில்+எடு +ஐ = (சிலெடை) >  சிலேடை.  லெ  >  லே   ( நீட்சி )   சிலெடை என்பது சிலேடை என்று திரிந்தது வாயொலிக்க எளிமை .தரல்பொருட்டு அதுபோல   சுர  + ஒண்  =  சுரொண்  >  சுரோண்    ஒ  >  ஓ   (நீட்சி )    ரொ  > ரோ .

இது  அது  என்பன சொல்லாக்கத்தில் பயன்பட்டுள்ளன.  எ-டு   பரு​+ அது + அம் .
பருவதம்  என்பதுபோல.

சுரக்கும் உயர்வான நீர் அல்லது பொருள் என்று அர்த்தம்.  இது சினைமுட்டையைக்  குறிப்பதுபோலும்.  (ovum ).


இது தொடர்பான சங்கதச்  சொற்கள் வருமாறு:  ஷொடர்துநிஷா SoDazartunizA      ஸ்ரீ தர்ம  strIdharma  ஸ்ரீ தர்மிணி  strIdharmiNI  ஸ்ரீ ரஜஸ் strIrajas