செவ்வாய், 19 பிப்ரவரி, 2013

cauliflower


காலிபிளவர் என்பது நாம் சமைத்துண்ணும் ஒருவகைக் காய்கறியைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்.
இது ஸ்காட்லாந்துச்சொல் " கோலே", ஜெர்மானிய "கோல் ஸ்லா" இலத்தீன் காலிஸ் முதலியவற்றுடன் தொடர்பு உள்ளதென்பர். இதன் அடிப்படைச் சொற்பொருள் கால்- கோல் (stem, stalk. stick) , பூ ஆகியவை என்பர்.

தமிழில் கால் - கோல் என்பவை நீட்சி குறிக்கும் சொற்கள். கால் > காலி எனின் " காலை உடையது" என்று பொருளுரைக்கலாம்.

இந்தக் கால்கள், காலிபிளவரில் ஒன்றுக்கு ஒன்று பிளவு பட்டு நிற்பவை. பிளவு >பிளவர். இது ப்லோரா (flora) என்ற இலத்தீன் சொல் எனப்படுகிறது. பிளவுறு என்பதும் பிளவுர்> பிளவர் என்று திரியலாம். அல்லது அர் என்பது சொல்லீறு என்று விடுத்துவிடலாம்.

பூக்களும் மொட்டு பிளந்து வருபவையே ஆகும். பிளவர் என்பதும் நன்கு ஆராயத்தக்கதாம்.

தமிழ் ஒரு மூலமொழி என்பதற்கு இதுவும் ஒரு சான்று. பல இலக்கம் சொற்களை ஆய்ந்து ஆய்ந்து இதனை விளக்கலாம்,

காலிபிளவர் என்பது தமிழென்று நிறுவுதல் நோக்கமன்று. We just want to refer to the Tamil roots of the Latin language.

விநாயகர்


vinAyakan

விநாயகர் பிற்காலத்தில் இந்து மதத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட கடவுள் என்று ஆய்வாளர்கள் கூறுவர். விநாயகன் என்ற சொல்லும் வி+ நாயகன் என்று பிரிக்கப்பட்டு, சமஸ்கிருதச் சொல் என்று சொல்லப்படும்.
இனித் தமிழிலும் இதற்குப் பொருள் கூறுவதுண்டு,

வினை + ஆயகன், அதாவது வினைகளை ஆய்ந்து அவற்றை ஒதுக்குபவன் என்பதாம். வினை என்பதில் உள்ள "ஐ" கெட்டுப் புணர்ந்ததென்பர். ஆய் = ஆய்தல். அகம் - அகன்.

ஆயகன் - ஆய்  அகன் :  இது வினைத்தொகை.

இனி வி நாயகன் என்று பிரித்துப் பொருள்  கண்டாலும்  வி  என்பது விழுமிய என்பதன் குறுக்கமே. நாயக என்பது நயத்தல் (விரும்புதல் ) என்பதனடியாகப் பிறந்த சொல்லே என்பதுண்டு . இதற்கு  விளக்கம் தேவைப்பட்டால் எழுதுவோம்.  

ஆபாசம்


ஆபாசம் "green speech or conduct "

பச்சையாக நடத்தல், பச்சையாகப் பேசுதல்.


பச்சை, பாசி, பாசம் (பாசம் பிடித்திருப்பது). பாசிலை, பச்சூன், பச்சிலை, பச்சோலை, பச்சைப்பெருமாள், பச்செனல், பாசிமணி, பாசிப்பயறு, பசுத்தல், பைங்கிளி, பசுங்கிளி, பசும்பால் (பச்சைப் பால்), பசலை -- என்று பச்சை குறிக்கும் அல்லது நிறத்தோடு தொடர்புகொண்ட சொற்கள் பல

பகரத் தொடக்கத்துச் சொல், பா என்று நீண்டும், பசு-, பை- என்று திரிந்தும் நிற்பதை மேலே கண்டுகொள்ளலாம்.

இடக்கரானவற்றைப் பேசுங்கால், அவற்றை அடக்கிப் பேசாதவன், "பச்சையாகப் பேசுகிறான்" என்பது வழக்கு.

பாசம் என்பது பச்சை குறித்தது.

இனி, பாசம் என்பது ஆபாசம் என்று ஆகாரம் பெற்று பச்சையாகப் பேசுதலை, அல்லது நடந்துகொள்ளுதலைக் குறிக்கும்.

தொல்காப்பியர் காலத்தில் வானைக் குறிக்கும் காயம் என்பது, ஆகாயம் என்றும் ஆகாசம் என்றும் திரிந்தாற்போல.

ஆகாயம் - காயம் ஆவது.

ஆபாசம் - இடக்கரடக்கல் இல்லாதது. பச்சை ஆவது.

ஆபாசம் குறிக்கும் சமஸ்கிருதச் சொற்கள், அனார்ய, அசப்த என்பன.