புதன், 18 ஜூலை, 2012

அற்புதம்


அற்புதம் என்பதோ ஓர் அற்புதமான சொல். இச்சொல்லின் அடிச்சொற்கள் யாவை என்று ஆய்வோம்.

அருமை, புதுமை என்ற சொற்கள் நீங்கள் அறிந்தவையே.

அரு + புது  + அம்.
தமிழாசிரியர்கள் இவற்றை அரும்புதுவம் என்று புணர்த்தி யிருப்பார்கள்.

இங்கேதான் சொல்லமைப்புப் புணர்ச்சி வேறுபடுகிறது.

அரு >அர்.> அற்.
புது > புத். (இங்கும் உகரம் கெட்டது).
அம் -விகுதி. அம் என்பது அழகு என்றும் பொருள்படும்.

அர்+புத்+அம் = அற்புதம்.

அரு என்பதன் மூலவடிவம் அல் என்பது. இதற்கு விளக்கம் உண்டு எனினும் பின்பு காண்போம்.

ஆகவே  அல்+புது+ அம் = அற்புதம் என்பதுமாம்  .

லகரம் ரகரமாய்த் திரியும். பகரத்தின்முன்  லகர ஒற்று றகரம்   ஆகும்           

அல் ஒரு சொல் விகுதியுமாகும்.

எனவே,  இச்சொல் அழகிய அரும்புதுமை என்ற அளவிற்குப் பொருள்விரிக்க இடம்தரும்.



இது திரித்துப் புனையப்பெற்ற சொல் என்பது சொல்லாமலே விளங்கும்.

செவ்வாய், 17 ஜூலை, 2012

நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இங்குதானே இருந்தாய்
பொங்கும் மகிழ்வுடன்!
வேறு கவனத்தில்
நூறு கோடி எண்ணங்களின்
கெடுபிடி தன்னில் தவித்துவிட்டு,
இல்லம் திரும்பி என்
செல்லமே நானுன்னை
மீண்டும் தரிசிக்க எண்ணுகையில்
எங்கோ மறைந்தனையே....
எங்குதான் சென்றாயோ
மீண்டும் நானுனைக் காண்பேனோ!
நம்பிக்கை யாவுமே வீண்தானோ!!


இன்றிரவு என் கனவிலாவது வரமாட்டாயா!

எனை நீங்கி,
முன்பின் அறியா இடத்தில்
மிளிர்வதும் உனக்கு அறமோ.
தளர்வுற்றுத் தாழ்வதென்  தரமோ!
இதுவே நான் வாங்கிவந்த வரமோ!

வெள்ளி, 13 ஜூலை, 2012

தொல்காப்பியம் பெயர்க்காரணம்.



தொல்காப்பியம் பெயர்க்காரணம்.
கடல்கோளால் தமிழர் நிலங்கள் அழிந்து, மக்கள் பலர் மாய்ந்ததுடன், தமிழ் நூல்களும் மிகப்பல அழிந்துபட்டன. அப்புறம், பாண்டிய மன்னன் வடக்கில் இருந்த பல நிலப்பகுதிகளை வென்று பிழைத்தவர்களை அங்குக் குடியேற்றினான். அவன் " நிலந்தரு திருவிற் பாண்டியன் " எனப்பட்டான். அழிந்துபோன இலக்கண நூல்களை நன்கறிந்திருந்த தொல்காப்பியனாரும் பிழைத்தவர்களில் ஒருவர். அவரை அழைத்து,  அழிந்தவற்றில் நினைவில் நின்றவற்றைக் காத்தல் பொருட்டு, ஒரு புதிய இலக்கணம் பாடும்படி கேட்டுக்கொண்டான். அதற்கிணங்க, தொல்காப்பியனாரும் தம் இலக்கண நூலை இயற்றியருளினார்.

இங்ஙனம் தொன்மை காத்தற்பொருட்டு இயற்றப்பட்டதாகலின், அது " தொல்+ காப்பு+ இயம் " = தொல்காப்பியம் எனப்பட்டது.

சிலர், காப்பியம் என்பது சமஸ்கிருதம் என்று வாதிடுவர்.தொடர்கதைப் பாடல்களை குறிக்கும் "காவ்யா" என்ற சொல்லினின்று காப்பியம் வந்ததென்பர்,

தொல்காப்பியம் என்பது ஒரு காவியம் அன்று. அது இலக்கண நூல்.  ஆதலின், காவியம் என்பதிலிருந்து காப்பியம் வந்து, பின் தொல்காப்பியமாயிற்று என்பது வீண்வாதமாகும்.

இதை நிலைநாட்டும்பொருட்டு, தொல்காப்பியர் காலத்தைக் கிபி 8ம் நூற்றாண்டு என்று கூறுவதும்  பொருந்தாதது ஆகும்.

காப்பியம் என்ற சொல்லும் ஏனை இந்தோ ஐரோப்பிய மொழிகளில் இல்லை. சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்று வெள்ளையர் கருதுவதால், காப்பியத்துக்கு இனம ஆன சொல் மேலை நாட்டில்  வழங்கினால் தவிர, அது சமஸ்கிருதமாகாது.

மேலும், காப்ய என்ற சமஸ்கிருத்ச் சொல்  "காபி என்பவனின் வழிவந்தோன்" {   a descendant of Kapi ( a person) } என்று பொருள்படும்.  காப்ய காவ்ய என்பன தொடர்பற்றவை என்பது தெளிவு,


காவ்ய என்பதை காப்ய என்று மாற்றினால் பொருள் வேறுபட்டு,  காவியத்தைக்கூடக் குறிக்காது. பின்பு எங்ஙனம் அது ஓர் இலக்கண நூலைக் குறிக்கும்?

தொல்காப்பியருக்குத் திரணமாதக்னி, அல்லது திரணமாதுக்னி என்ற பெயரும் இருந்ததாகக் கூறப்படுகிறது.   திரண என்பது உள்ளது தக்கவைத்தல், பாதுகாத்தல் என்பதாம்.  மாத  என்பது எழுதப்பட்டதைக் குறிக்கும் (composed). . அக்னி என்பது பொன்னையும் குறிக்கும்.எழுதப்பட்டவற்றை  அல்லது முன் பாடப்பட்ட இலக்கணங்களைக் காக்கும் பொன்னானவரென்று பொருள் தருகிரது. தொல்+காப்பு+இயம் என்பதும் அதே காப்பகப் பொருளைத்  தான் தருகிறது. இதனாலும், தொல்காப்பியத்தில் வரும் காப்பியம், எழுத்தில் காக்கப்பட்டதைக் குறிக்குமே யன்றி ,கதைகளைப்பற்றிய  காப்பியத்தைக் குறிக்காது.

காவ்ய என்ற சொல்லும் கவித்தல் (குவித்தல்) என்பதன் மகவு ஆகும்.



Related topics:

Please see posts dated 29 June 2012:

*  Tolkappiyam Timeline.

*  அதங்கோடு ஆசான்


Note:-

In fact all inscriptions in India were in Prakrit till the early centuries AD : " They were not in Sanskrit, the later polished language