வெள்ளி, 22 ஜூன், 2012


      santharppam.


          (தருணம், வருணம் என்பவற்றின் சொல்லாய்வுகளை
http://bishyamala.wordpress.com/  (BI's SPACE) சென்று கண்டுமகிழ்க.)
type and click: http://bishyamala.wordpress.com/2012/06/17/varunam-tharunam-etymology/
We shall continue with our enquiry into tharuNam etc., We now look into a related word.

இதை சம்+தர்ப்பம் என்று பிரிப்போம்.

சம் என்ற முன்னொட்டு இருக்கட்டும்.

தர்ப்பம் என்பது உண்மையில் தருப்பம் என்பதன் திரிபே. தரு>தருதல்; தரு > தருப்பு> தருப்பம் > தர்ப்பம்.

அதாவது: தரு +பு + அம்.

இப்போது, தருணம் என்பதில் உள்ள  "தருதல்"  கருத்துடன் ஒப்பு நோக்கவேண்டும். தொடர்பு புரியும்.

மாற்றுவிளக்கங்கள் ஒருபால் நிற்கட்டும்.


===============================================================

Notes:

1. "சன்" என்பதற்கு,  சங்கதத்தில் பல பொருட்சாயல்கள்:
"san" --  to gain for another , procure , bestow , give , distribute RV. ; to be successful , be granted or fulfilled or to wish to acquire or obtain ; to wish to procure or bestow RV. AV.

2  சம் என்ற முன்னொட்டு:
            "sam"--  prefix: with , together with , along with , together , altogether (used as a preposition or prefix to verbs and verbal derivatives , like in Gk. Lat. {con} , and expressing `" conjunction "' , `" union "' , `" thoroughness "' , `" intensity "' , `" completeness "' e.g.{saMyuj} , `" to join together "' ; {saM-dhA} , `" to place together "' ;{saM-dhi} , `" placing together "' ; {saM-tap} , `" to consume utterly by burning "' ; {sam-uccheda} , `" destroying altogether , complete destruction, note: " for many glorious waters surrounded Agni "' ; it is sometimes prefixed to nouns in the sense of 2. {sama} , `" same "' ; cf. %{samartha}) RV. &c. &c.

We shall look into this later. No hurry.       

புதன், 20 ஜூன், 2012

சர்மா


      sharma, sarma, sama

சர்மா

இது ஒரு பட்டப்பெயராய் வழங்கிவருகிறது. ஷர்மா, சர்மா, ஸர்மா, சர்மன் என்று பல்வேறு வடிவங்களில் அறியப்படும் இப்பெயர், எங்ஙனம் தோன்றியதென்பதில் சிக்கல் நீடிக்கின்றது.

மகிழ்ச்சி என்று பொருள்தரும் ஒரு சமஸ்கிருதச் சொல்லில் இருந்து தோன்றியதாகக் கூறப்படினும், இஃது முடிவான கருத்தென்று கூறிவிட இயலவில்லை.

இது இப்போது பெரும்பாலும் ஸ, ஷ என்ற முதலெழுத்தைக் கொண்ட சொல்லாக எண்ணப்பட்டாலும் இது முற்காலத்தில் "ச" என்றே தொடங்கியது என்று எண்ணத்தோன்றுகிறது.

சர்மண்வத் என்பது ஒரு ஆற்றின்பெயராய் இருத்தலின், இவ் ஆறு ஓடும் பகுதிகளில் வாழ்ந்தவர்கள் என்று அடையாளம் கூற அமைந்த பெயரென்று கருதவும் இடமுண்டு.

சர்மன் என்பது தோலைக்குறிப்பது. நல்ல தோல் நிறமுடைய கூட்டத்தினர் என்றும் பொருள்பட்டிருக்கலாம்.

சர்மவத் என்பது தோலை அணிந்துகொண்டோர் என்றும் பொருள்தரும். போர்மறவரையும் குறிக்கலாம்.

சர்மா என்பது தமிழ்ச்சொல் என்று கூறவியலவில்லை. சமஸ்கிருதத்தில் ஆற்றங்கரை வாசி என்றோ போர்மறவர் என்றோ குறிக்க எழுந்த பெயராகலாம்.

ச, ஷ, ஸ திரிபுகள் இயல்பானவை.       

Interchangeability of certain Tamil words


        னகர ஒற்றில் முடியும் பல சொற்கள், மகர ஒற்றோடும் முடியும்.

இதற்குதாரணம்:

குணன் - குணம்.#
அறன் - அறம்
திறன் - திறம்

இன்னும் மணம் - மணன் என்றும் அமையும்.

இப்படி முடிதல் வேறு மொழிகளிலும் உள்ளது. சீன மொழியில், குவான் இன் என்பது குவான் இம் என்றாதல் போல.

நிலம் - நிலன்.
புறம் - புறன்.

குறிப்பு:

# நடுவணதென்னும் ஆட்சியுங் குணனும் காரணமாகப் பெற்ற பெயர்.-- நச்.உரை. தொல், அகத்திணையியல் 2.

இஃது முன்னம் ஒருக்கால் யான் கூறியதுதான், ஆயின் சற்று விரித்துரைத்தேன்.