புதன், 19 அக்டோபர், 2011

எலிப்பாவம்

எலிப்பாவம்

(நகைச்சுவைக் கவிதை)


எலிக்கு உண்ண எதுவும் கிடைக்காதபடி எல்லாம் பத்திரப்படுத்தி வைப்பதாக நண்பர் ஒருவர் எழுதினார். அவருக்கு எழுதிய நகைச்சுவைக் கவிதை

எலிப்பாவம் பொல்லாத பாவம் முகமே
சுளிக்காமல் ஊண் ஊட்டு வீர்

தினமும் வரும் எலி தின்னாமல் போனால்
குணமில்லை கூடிவாழ் வார்க்கு.

கூடிவாழ் வார்க்கு.- for the family

வெள்ளி, 14 அக்டோபர், 2011

மங்கும்நன் மாலையே வா.

பாலை வனம்காண் பகலோன் எமன்நட்போ?
காலை எழுச்சியே காய்கிறதே ! -- நூலாடை
இங்கே பயனில்லை; இன்பகல் துன்பமலை
மங்கும்நன் மாலையே வா.

மணற்குன்று (தொடர்ச்சி)

மணற்குன்று (தொடர்ச்சி)

சென்றிமைகள் சேர்ந்திணைய சீறிப் புயல்மணல்
குன்றமைய வீசிடும் கூடாது -- நின்றிடவும்;
அவ்விடம் நீங்க அசைந்தோடக் காலெங்கே?
எவ்விடமும் தூசுமணல் ஏகு!