வெள்ளி, 31 ஜூலை, 2009

munnu > man முன்னுதல் > மன்

மன்னுயிர் என்ற சொல்வழக்கு தமிழ் நூல்களில் பரவாலாக உள்ள ஒன்றாகும். இது humanity என்று பொருடரும் என்றாலும விலங்குகளையும் குறிக்கும். பொதுவாக உலகத்துயிர்கள் என்றும் பொருள் தரும்.

திருக்குறளில் பல இடங்களில் வந்துள்ளது, மணிமேகலையில்:

மன்னுயிர் முதல்வன் மகர வேலையன்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங்கம்பளத்து ..... தவத்திறம் பூண்டு தருமம் கேட்ட காதை:29 : 15-17

இச்சொல்லாட்சியைக் காணலாம்.




வியாழன், 30 ஜூலை, 2009

சுகாதாரம் - தமிழா?

இது தமிழன்று என்று தமிழாசிரியர் கூறுவர்.

உடல் உயிர்வாழ்க்கைக்கு உகந்த நிலையே சுகம்.

உக >உகத்தல்
உக >உகப்பு.

உக > சுக > சுக+அம் = சுகம்.

உ > சு திரிபுக்கு எடுத்துக்காட்டு:

உலவு > சுலவு (வினைச்சொல)

இதுபோலவே உக > சுக என்பதும்.

ஆதாரம் என்பது செல்வம் தந்து போற்றுதல். ஆ முன்காலத்தில் செல்வம்.

ஆ தருதல் - ஆதாரம்,

பிற்காலத்தில் அது பிறவகைத் தரவுகளையும் குறித்தது.

இங்ஙனம் சுகம், சுகாதாரம் என்ற சொற்கள் தமிழ் மூலமுடையனவாகலாம்.
====================================================================
உயிர் முதலாகிய சொற்கள், அவ்வுயிர் சகர மெய் பெற்றுத் திரிதல் இயல்பு.
அடுதல் = சுடுதல், சமைத்தல்.

அடு+இ =( அட்டி) > (ச்+அட்டி) > சட்டி.
ஏமம் > சேமம்.
ஏண் > சேண்.
அமையம் > சமையம்,
அமைதல் > சமைதல்.

சில திரிபுகளில் நுண்பொருள் வேறுபட்டு, தொடர்புடைய வேறு பொருள் தரும்.

திங்கள், 27 ஜூலை, 2009

Sweet stuff ( கரும்பு முதலியவை)

கரும்பு பற்றிச் சங்க இலக்கியத்தில் காணப்படும் குறிப்புகளை உணர்வுகள் களத்தில் ஓர் இடுகையில் எழுதியுள்ளேன்.

கரும்பு ஆலைகளும் அப்போது தமிழ் நாட்டிலிருந்தமை தெளிவு.

திருக்குறளும் கரும்பைப் பற்றி இப்படிக் குறிப்பிட்டுள்ளது:

சொல்லப் பயன்படுவர் சான்றோர் கரும்புபோல்
கொல்லப் பயன்படும் கீழ்.

மணிமேகலையிலும்:
காய்க்குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக்கொடி வல்லியும் கரும்பும்் நடுமின்!
என வரும் ( 1: 46-47 : விழாவறை காதை)

சர்க்கரை, வெல்லம், சீனி, கருப்பட்டி. கற்கண்டு, பனங்கற்கண்டு, எனத் தமிழில் பல சொற்களிருப்பது தமிழின் சொல்வளத்தைக் காட்டுவதாகும்.