சனி, 14 செப்டம்பர், 2024

உவச்சன் என்ற சொல்.

 இன்று உவச்சன் என்ற சொல்லை ஆய்வு செய்வோம். வேறு அன்பர்கள் யாரும் விளக்கியுள்ளனரா என்று இன்னும் தெரிந்துகொள்ளவில்லை. இதை முடித்தபின் நாளைக்குத் தேடிப்பார்ப்போம். எம் கருத்துகளை முன் வைப்பதே நம் வலைப்பதிவின் நோக்கம்.

உ என்பது சுட்டடிச் சொல்.  . இதைத் தெரிந்துகொள்ள ஒரு நிகண்டையோ அகராதியையோ நீங்கள் நாடுதல் நன்று.  உ என்பது  முன்னிருப்பது என்று பொருள்படும் பண்டைப் பழஞ்சொல்.  தமிழ்ப் பழம்புலவர்கள் இதனைச் சுட்டடிச் சொல் என்றனர்.  எளிதாக அறிய, உன் என்ற சொல்லைப் பாருங்கள். உன் முன்னிருத்தலை ( முன் இருப்போனுக்கு உரியதை) க் குறிக்கும்.  

அடுத்து இருக்கும் பகவு, ( உவச்சன்) என்ற சொல்லில்),  அச்சன் என்ற சொல். இது அய்யன் (  ஐயன்)  என்ற  சொல்லின் திரிபு.  அய்யன்> அச்சன்.  எப்படி என்றால்,  வாயில் > வாசல் என்பதில்  யகரம் சகரம் ஆனது; மற்று இ (யி) என்பதும் அ ( ச)  ஆயிற்று.   அயல் என்பதும் அசல் என்பதன் திரிபே. இன்னொன்று: பயங்க> பசங்க என்று பேச்சில் வரும்.  வயம்> வசம். தமிழில் போதுமான அளவு பற்பல நூல்களையும் வாசித்தவர்க்கு இது காண அகராதி தேவையில்லை.

அச்சன் என்பதும் அய்யன் என்பதும் ஒன்றே.  அச்சன் என்பது திரிபு.

  ஐயன் என்பது பல்பொருளது. என்றாலும் அதன் மையக் குறிப்பு, முன்னிருப்பவர், தந்தை, தமையன் எனவாம்.

உ+ அச்சன் > உவச்சன்.  இங்கு வகர உடம்படு மெய் வந்தது.

உ+ ஐயன்> (உவை(ய்)யன்) > உவைச்சன் > உவச்சன் என்று காட்டினாலும் ஒன்றுதான்.

இது கல்வெட்டிலும் கண்டுபிடிக்கப் பட்டுள்ள சொல்தான்.

உவச்சர் எனில் பூசையின்போது முன்னிருந்து ஓதி உதவுவோர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

    

வெள்ளி, 13 செப்டம்பர், 2024

மீசுரம் என்ற திரிபு

 இதில் மீசுரம் என்ற திரிபின் வருகையை அறிவோம்.

மிகு + உரு + அம் >   மீகுரம்.

இதன் சொல்லமைப்புப் பொருள் மிகப்பெரிய உருவத்தை உடையது என்பதுதான்.

இங்கு  மீகுரம் என்பது மீசுரம் என்று மாற்றமடையும்.

மி என்பது மீ என்று நீள்வதும் இயல்பான திரிபுதான்.

மிகு+ து >  மீது.  ஒ நோ:  பகு தி >  பா தி.  ( பாதி)

இது சொல்லிடையிலும் வரும்  முதலிலும் வரும்.

பிற மொழித் திரிபுகளை அவ்வந் நூல்களில் கண்டுகொள்க.

சேரலம் >  கேரளம்.

ஐரோப்பியத் திரிபுகளில் ch > k  ஒலிமாறும்

மிகு உரு அம் என்பதே  மீகுரம் > மீசுரம் ஆனது.

பொருந்தும் பொருண்மை பெற்றுலவும் இச்சொல்.  தெலுங்கில் மேலானது என்று பொருளாம்.

இதை மிசை+ உரு +அம் என்றும் விளக்கலாம். மீசரம் என்பதும் திரிபே.  உகரம் அகரமானது.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

புதன், 11 செப்டம்பர், 2024

வைரம் என்ற சொல் தமிழ்

இனி வைரம் என்ற சொல்லை ஆய்வோம்.

 வைக்கப்பட்ட இடத்தில்  அது இறுகி, தீட்டியவுடன் ஒளிதரும் அழகுடன் மிளிரும் கல்லே வைரம்.  வைரம் என்பது என்ன சொல்?

வை  -  வைக்கப்பட்ட இடத்தில்.

இறு -  இறுக்கம் அடைந்து

அம் -  அமைந்த ஒளிக்கல்.

வைக்கப்பட்ட என்றால் இருந்த என்று பொருள்.  மனிதனால் வைக்கப்பட்ட என்று பொருளன்று. இயற்கையினால் வைக்கப்பட்ட அல்லது கடவுளால் வைப்புற்ற. தற்சூழல்களால் வைக்கப்பட்ட.


ஒரு காலத்தில் ரகரமும் றகரமும் வேறுபாடின்றி வழங்கின. ஆகவே இற்றை நிலைக்கு ரு-று மாற்றம் செய்துகொண்டாலே சரியாகும். இது ஓர் ஒலிநூல் படியான மாற்றம். இதைப்  பழைய இடுகையொன்றில் விளக்கியுள்ளோம். உம் பேராசிரியருக்குத் தெரிந்தால் கேட்டுத் தெரிந்துகொள்க.

இறுக்கம் என்பதே ஆக்கமூலமானாலும் சொல்லமைந்த வுடன்  று திரிந்து ரு- ர என்றாகிவிடும்.   று என்பது வல்லினம்.  இது சொல்லுக்குள் தேவை இல்லை. கல்லுக்குள்ளும் பயன் ஒன்றும் இல்லை. இதே போல் வல்லினம் வந்து திரிந்த சொற்கள் பல.

வையிறு அம் >  வையிரம்  >  வயிரம்.

இதேபோல் திரிந்த சங்கச் சொற்களும் உண்டு.  எடு:

வை >  வை+ இன் >  வயின்.  இடம்.

பொருள்வயின் பிரிதல் -  சம்பாதிப்பதற்காகக் காதலன் பிரிந்து போதல்.

வை >   இறுக்கம் என்பதற்கு இன்னொரு சொல்: காழ், காழ்ப்பு.

காழ்த்துவிட்டது என்பதை (கால்விரலில் )   "காச்சுப்போச்சு"
 என்பர்.

வை> வையகம்

வை >  வைகுந்தம்.  (  தான் குந்தியிருக்க தேவன் வைத்துக்கொண்ட இடம்).

வை> வைகுதல்:  வசித்தல், வாழ்தல்.  ( கு வினைச்சொல்லாக்க விகுதி)

வைகு+ உண்ட:  வைகுண்ட.   ( வைத்ததனால் உள்ளதானது).  

வெட்டுண்ட, கட்டுண்ட என்ற வழக்குகளைக் காண்க.

வைகுண்டம் :  தேவன் வைகுவதற்கு உண்டான இடம்.

இச்சொல்லை வய  (via)  என்று இலத்தீன் மொழியில் மேற்கொண்டனர்.  

via > way.  English.  viaduct.

மூலம்:  வாய் என்ற சொல்.  வாய் -  இடம்.

வைரம் தமிழென்று கண்டீர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்