வியாழன், 29 ஆகஸ்ட், 2024

"lie" (லை) பொய் குறிக்கும் ஆங்கிலம்

 சாய்தல் கருத்திலிருந்து முன்வாழ்ந்த மக்கள் பல சொற்களை உண்டாக்கிப் பயன்படுத்தி உள்ளனர்.  எடுத்துக்காட்டு: சாத்தியம்,  அதாவது முடிக்கக் கூடியது என்று பொருள். இது மரம் சாய்தல் கருத்திலிருந்து வந்தது என்பதை நாம் முன்னர் இடுகைகளில் பதிவு செய்துள்ளோம். மரத்தைக் கவனத்துடன் சாய்க்க இயலாமையால் அது விழுந்து இறந்தவர் ஒருவரையாவது எமக்குத் தெரிந்திருந்தது. பெரிய மரத்தைச் சாய்க்கச் சிலராவது துணையாக வேண்டும்.  கயிறு அல்லது சங்கிலி முதலியவையும் தேவைப்படும் என்று தெரிகிறது.  ஆகவே இது காடுவாழ் மக்களிடமிருந்து நமக்கு வந்த சொல் என்று தெரிகிறது.


பூசைகளின்போது எதையும் சாய்க்க வேண்டியிருக்காது.


சாய் > சாய்த்தல்> சாய்த்தியம்,  இதில் யகர ஒற்றுக் குறைந்து,  சாத்தியம் என்றாகும்.  அதாவது,  இயல்வது என்று பொருள்.  இயல்வது என்பது இடப்பெயர்ச்சிக்குச் செய்ய முடிந்தது என்று பொருள்படும்.  இயல் என்ற சொல்லில் இ என்ற சுட்டும் அ என்ற சுட்டும் உள்ளன. ஒரு கனமுள்ள பொருளை இங்கிருந்து அங்கு கொண்டுசெல்வது.  ஆயுதம் இல்லாத பழங்காலக் கருத்து.


இங்கம்பென்ட் என்ற ஆங்கிலச் சொல்லில்கூடச் சாய்தல் கருத்து உள்ளதாக ஐரோப்பிய ஆய்வாளர்கள் கருதுகிறார்கள்.  "lie down," related to cubare "to lie" இலத்தீன் சொல்.


இது படுக்கையில் இடம்பிடிக்கும் செயலினின்று வந்த சொல். உமது படுக்கையில்தான் நீர் படுத்துறங்கலாம். மற்றவர்க்கு இடமில்லை.


lie ( falsity) என்பதற்குரிய அடிச்சொல்  இலத்தீன், கிரேக்கம் , சமஸ்கிருதம் முதலியவற்றில் இல்லை.  


இந்த மொழிகள் தமிழ்ச்சொற்களின் வாலிலிருந்து தமக்குரிய சொற்களை மேற்கொண்டன என்பது பலசொற்களிலிருந்து தெரிகிறது.  இல்லை என்ற சொல்லில் இ(ல்)கரத்தை வெட்டிவிட்டால், மீதம் லைதான்.  லை என்றால் எது இல்லையோ அதுதான் லை.


தமிழ் வால்பகுதிச் சொற்கள்  பிறமொழிகளில் உள்ளன.


லை ( இல்லை)  என்பதும் இவற்றுள் ஒன்று. இல் என்பதை விடுத்தனர்.


அறிக மகிழ்க.



மெய்ப்பு பின்னர்.




செவ்வாய், 27 ஆகஸ்ட், 2024

சமேத எனற சம்ஸ்கிருதச் சொல்

 இன்று சமேத என்ற சொல்.

சமேத என்ற சொல்லில்  சம்+ ஏத  என்ற இரு பகவுகள் உள்ளன. 

இவற்றுள் ஏத என்ற சொல்லை முதலில் காண்போம். இங்கு தமிழ் அடிச்சொற்கள் மூலமாகவே விளக்குவோம்.

எய்த என்ற தமிழ்ச்சொல்லே ஏத என்று இங்கு வந்து துணைச்சொல்லாய் நிற்கிறது. செய்தி என்னும் சொல் சேதி என்று திரிந்தது போலவே எய்த என்ற சொல்லும் தலைநீண்டு ஏத என்றாக, நாம் பொருள்கூறுவோம்.

ஆனால் இது தமிழ் அகரவரிசைகளிலும் சங்கத அகரவரிசைகளிலும் காட்டப்பெறாது போன ஒரு சொல்.

இதை இன்னொரு வகையிலும் அறியலாம். ஏதாவது அல்லது  எதுவாயினும் என்பதே அது,  எதுவாயினும் என்றால் பொருளாக அல்லது நிலையாக என்று கொள்ளவேண்டும். ஏற்புடைய எதுவாகவும் என்று பொருள்.

தமிழிலிருந்து வேறுபட்டு நிற்க, இதுபோலும் உத்திகள் தேவை. ஏன் வேறுபட வேண்டுமெனின், தமிழ் பூசைமொழிக்கு மென்மை தராது என்ற எண்ணம்தான்.

இது நிற்க.

சம என்பது இன்னொரு சொல்.  சமன் என்பது தமிழிலும் பூசைமொழியிலும் ஒப்ப வழங்கும் சொல்.  இது தம்> சம் என்ற திரிபிலிருந்து எடுக்கப்படுகிறது. தம் என்பது ஒத்த தன்மையில் ஒன்றாய்க் கூடியிருத்தலை உணர்த்தும்.  தகரம் சகரமாய்த் திரியும்.

எனவே சம+எய்த  அல்லது சம+ ஏதாக என்பது சமேத என்று பூசைமொழியில் வருகிறது,  கூடியிருத்தல் என்ற நீண்ட சொல்லும் கருத்தும் இதன் மூலம் தடுக்கப்பட்டு மொழிமென்மை கிட்டுகிறது.

இப்போது வாக்கியத்தில்:

ராதா சமேதா கிருஷ்ணா.

ராதாவுடன் கூடியிருக்கும் கிருஷ்ணா.  அல்லது ஒன்றாய் நிற்கும் கிருஷ்ணா.

சமஸ்கிருதம் இங்கு இந்தியாவில் உண்டாக்கபட்ட மொழிதான். இதைத் தொடக்கத்தில் பூசைகட்குப் பயன்படுத்தினர். இது இந்தோ ஐரோப்பிய அல்லது ஆரிய மொழியன்று,  உள்நாட்டு உட்பற்றிய  (  உண்டான) மொழி.  இது உண்டான காலத்தில் ஐரோப்பியனுக்குச் சில ஒலிக்கோவைகள் இருந்திருக்கலாம். வரலாறு இல்லை.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்.

புள்ளி பெறாத சொல்லின் எழுத்தில்

புள்ளி யிருந்தால் இது மென்பொருள்

கோளாறு ஆகும். புள்ளியை ஏற்ப விலக்கிப்

படித்தறிக. மீள்வருகையின்போது திருத்திக்

கொள்வோம். நன்றி.

மட்டுறுத்தாளர்.

திங்கள், 26 ஆகஸ்ட், 2024

முகரை என்ற சொல்லின் திரிபு வடிவம்.

 முகரை என்ற சொல்லில் முதலிரண்   டெழுத்துக்களும்  திரிதற்குரியவை.  இது எவ்வாறு என்றால்  பகுதி என்ற சொல்லின் முதலிரண்டு எழுத்துக்களும்  பகு> பா என்று திரிந்து பாதி என்றாகிவிடுவது போலுமே ஆகும். முக என்பது மோ என்று திரிந்துவிடும்.  அவ்வாறு திரிந்த பின்  இந்தத் திரிபு "ரை" என்ற கடைசி எழுத்தையும் மாறியமையச் செய்கிறது. இது ஒலிநூல் படியமைந்த திரிபுதான்.  என்ன ஆகிறது என்றால் மூன்றெழுத்தாய் இருந்த போது இடையின ஒலியாய் வந்த "ரை",  இரண்டெழுத்துச் சொல்லான பின்பு தன் வலிமையை இழந்துவிடுகிறது.  இந்தத் திரிபு  ஒலிநூல் முறைப்படியான மென்மைப்பாடே ஆகும்.

தமிழ் இலக்கண நூலுடையோர் பண்டை நாட்களில் பெரும் ஒலிநூல் சாம்பறிவர்களாக (ஜாம்பவான்களாக ) இருந்திருக்கின்றனர். வல்லினம் மெல்லினம் இடையினம் என்று ஒலிகளைப் பகுத்தறிந்தனர். கவிகளில் வண்ணங்களைப் பெய்தனர். நலிபு வண்ணம், மெலிபு வண்ணம் என்று வகுத்தனர். குறில் வண்ணம் நெடில் வண்ணம் என்றும் கூறுபடுத்தினர்.  இவற்றை எல்லாம் இத்துறை போகிய வல்லோரிடம் கேட்டறிந்து கொள்க.  சந்தசை என்ற பெயரை உடைய சமஸ்கிருத மொழியும் ஒலி நூல் நெறிமுறைகளை மந்திர  ஒலிப்புகளில் மிக்க நெறியில் கடைப்பிடித்துள்ளது.

முகரை என்ற சொல் மோறை என்று திரிந்ததும் இத்தன்மைத்தே அறிந்திடுவீர்.

சாறு என்ற சொல்லினின்றே  சாராயம் என்று சொல் பிறக்கிறது. அரிசி ஊறவைத்த நீரிலிருந்தும் சாராயம் செய்துள்ளனர். ஈரெழுத்துச் சொல்லாய் சாறு என்று இருந்த சொல் மூவெழுத்தாய்ச் சாராயம் என்று மிகுந்தவுடன் றா என்ற வல்லொலி  ரா என்று இடையினமாகி விடுகிறது.  வேர் அல்லது தானியத்தை ஊறவைத்துச் சாறு எடுத்த பின்னர் அது புளிப்பில் மதுவாகி விடும்.  அப்போது அது சாராயம் ஆகிவிடும்.  சாறாயம் என்று வராமல் சாராயம் என்று தான் சொல்லின் ஒலியில் மாற்றம் விளைகிறது.  சாராயம் என்பது முகரை மோறை என்பதை நோக்க எதிர்மாற்றுத் திரிபு ஆகும். இது பின்னும் திரிந்து மோரை என்றும் வரும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்