செவ்வாய், 17 அக்டோபர், 2017

கரிகால் பெருவளத்தானை வெண்ணிக்குயத்தியார் பாடிய து. புறப்புண் நாணுதல்.



பண்டைத் தமிழருக்குப் போருக்குப் போய் முதுகில் புண்படக் கூடாது,  முதுகுப் புண் என்றால் வடக்கு நோக்கி அமர்ந்து உண்ணாமல் உயிர்விடவேண்டும் அதுவே அதற்குப் பரிகாரம்.  புறமுதுகிட்டு ஓடுகிறவர்களே  முதுகுப் புண்படுவர். என்று கருதப்பட்டது.  ஓடாமல் நின்று போரிட்டு முதுகில் காயுமடைந்தவருக்கு (தம் வீரத்தை மெய்ப்பிக்க ))வழியில்லை. அவருக்கு மரணவாசல் (சாக்கதவு) ஒன்றே வழிதிறந்து நிற்கும்.

அற்றைப் பெருமக்களின் பொதுவான கருத்து இவ்வாறிருக்க, இதற்கு மாறாக ஒரு கருத்தை எடுத்துச் சொல்லும் புலவருக்கு மிகுந்த திராணி இருக்கவேண்டும். அத்தகு நுண்ணிய கருத்துடைத் திண்ணிய புலவர்தாம் வெண்ணிக்குயத்தியார் என்னும் பெருந்தமிழ் மலை. போரில் இணையற்ற வெற்றி அடைந்து ஓய்ந்து நுகர்ந்துகொண்டிருந்த மாமன்னன் கரிகாலன்.  --அவன் முன்னே வெண்ணிக்குயத்தியார் சென்றார். “உன்னினும் தோற்ற சேரனே நல்லவன்; புகழுக்குரியோன்” என்று துணிவுடன் கூறினார்.

நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களியியல் யானைக் கரிகால் வளவ!!
சென்று அமர்க்கடந்த நின் ஆற்றல் தோன்ற
வென்றோய் நின்னினும் நல்லன் அன்றே!
கலிகொள் யாணர் வெண்ணிப் பறந்தலை
மிகப்புகழ் உலகம் எய்தி
புறப்புண் நாணி வடக்கிருந்தோனே.
புறம் பாடல் 66.

நளி  -  நடு.. 
இருமுந்நீர் =  பெருங்கடல்.
நாவாய் – கப்பல்.
வளிதொழில் ஆண்ட -  கடல்மேலும் ஆட்சி செலுத்திய.
உரவோன் – மேலோன்.
மருக -  மருகனே;  வழிவந்தோனே.
களியியல் – மதம்பிடித்த.
கரிகால் வளவ -  கரிகால வளவனே;
அமர் -  போர்.
கடந்த – வென்ற.
அன்றே -  அல்லனோ.
கலிகொள் – செழிப்புடைய. 
யாணர் – அழகுடையவர் 
( மலிந்த ); யாண் -  அழகு.



வெண்ணிப் பறந்தலை – வெண்ணி என்னும் போர்க்களம்.
புறப்புண் – முதுகுப் புண்.  விழுப்புண் அல்லாதது.

அமர் என்பது சமர் என்றும் திரிந்து வழங்கும்.

இப்பாடல் வாகைத்திணை. அரச்வாகைத் துறை.  வாகைத் திணைக்குரிய பூ வாகைப்பூ.  இத்திணையில் அரசனின் இயல்பு எடுத்துக்கூறிப் பாடுதலே அரசவாகைத்துறை.

.

திங்கள், 16 அக்டோபர், 2017

STAGNANT DIRTY WATER IN TN PUBLIC HELP REQD




அழுக்கிருந்த இடத்திலெல்லாம் தேங்கி நின்ற
அதில்கொசுவை வளர்த்துவந்த டெங்கிக் காய்ச்சல்!
கிழக்கினிலிந்  தியக்குழும்பின் காலம் தொட்டுக்
கெடுவின்றி இருந்தநீரிற் பிறந்த தாமோ?.....
வழக்கமுற  வந்துவிட்ட கொசுவின் நீரை
வாரி இறைத் தால் நாற்றம் என்ப தாலே
தொழிற்கென்று தோன்றிவிட்ட தோழன் கூட
தோண்டிவீசி  னால்மயங்கித் துவண்டு வீழ்வான்.

செய்தி விளக்கம்:

தமிழ் நாட்டுப் பள்ளம் படுகுழிகளில் தேங்கிக் 
கிடக்கும் நீரையெல்லாம் வெளியேற்றினாலே 
டெங்கியை ஒழிக்கமுடியும் என்ற முடிவிற்குத்
தமிழ் நாடு அரசு வந்துவிட்டதாகத் தெரிகிறது.
அதற்கு மக்களின் ஒத்துழைப்புத்
 தேவையாகிவிட்டது என்^கிறது.......
முதல்வர் கூறியதாக வந்த தாளிகைச் செய்தி.

இதிலிருந்து பிறந்த கவி இது.

இப்படிப் பல கவிகள் எழுதினாலும் 
ஒன்றிரண்டையே வெளியிட்டுள்ளோம்.  
இது வேறு நாட்டில் நடப்பது.
நமக்குள்ளது "கலாசாரத் " தொடர்பே.  
இவற்றைத் திறந்த உள்ளத்துடன் படித்து
 இன்புறவும். ஏற்கவியலாப் போது
எடுத்துவிடுகிறோம் -  தெரிவித்தால்.

அல்லது வெறும் செய்தியாகப் பார்க்கவும்.....

"உலகெங்கும்" என்று வரும்போது,  பல 
நாடுகளிலும் சிற்சில இடங்களில் இப்படி 
இருக்கலாம்.  சில நாடுகளில் இவைபோல்வன 
குறைவு. தமிழ் நாட்டில் கொஞ்சம் அதிகமாக
இருக்கலாம்.  அல்லது பிற நாடுகளிலுள்ளவை 
நமக்கு எட்டாமலும் இருக்கலாம். மக்கள் குப்பை 
போடாமலும்  அழுக்கைப் பொது இடங்களில் 
வீசாமலும்  இருக்கவேண்டும்.  பள்ளம் 
படுகுழிகளை மூடிவிட, 
மக்கள் அரசுக்கு உதவவேண்டும்.

எல்லோரும் நோயின்றி வாழவேண்டும்.

 





ஞாயிறு, 15 அக்டோபர், 2017

தீப ஒளித் திருநாள் ( தீபாவளி).

தீப  ஒளித்  திருநாள் ( தீபாவளி).



காட்டினில் கற்கள் உரசி ---- அது
கனலோ டெரிந்தது கண்டாளோர் அரசி;
வீட்டினில் தீயதைக் கொணர்ந்தே ---- ஒரு
தீபமாய் ஏற்றினள்  அன்பனும் இணைந்தே,.

இருட்டினில் வாழ்ந்தவன் மாந்தன் ---- சூழ்
கருப்பினைக் கண்டு வெறுபினில் ஆழ்ந்து;
விரட்டினன் தீபத்தின் அளியால்---- விழுமிய
வேகத்தை ஆக்கினன் போகமாம்  ஒளியால்

தீப  ஒளித்திரு வினையே  ---- கண்டு
தினங்கூத் தாடினும் தேவுறு  ஓர்நாள்;
ஈவ துடன்மனத் தன்பில்  ----  இல்லத்
திருக்கும் உணவனைத் தும்கலந்துண்போம்.

தீப ஒளித்திரு  நாளின் ---- மேன்மை
தேர்ந்து தெளிந்திட்ட முன்னவர் எல்லாம்
ஆவ தனைத்துமிந் நாளில் ---- என்று
அமைத்துச் சிறப்பை இணைத்திணைத் துள்ளார்.

பழையதில் புத்தாக்கம் செய்தார் ---- நாம்
பயனுடைத் தீபத்தின் மேன்மையை எய்த
விழைவதை எந்நோக்கம் என்று ---- எண்ணி
விரிக்காது தீபத்தின் ஒளிகாண்க வென்று,