இந்தச் சொல்லை இன்று அறிந்துகொள்வோம்.
இது வீரத்தையும் வலிமையையும் குறிக்கும் சொல். வேறு எந்தச் சொற்களால் இதனை விளக்கினாலும் இதன் இறுதியில் நாம் இந்தப் பொருமையைத்தான் அடைகிறோம்.
மக்கள் பராக்கிரமம் என்பதை மிகப் பெரியது அல்லது பரியது என்று நினைத்தனர். பருமைக்கும் பெருமைக்கும் இடையிலுள்ள நுண்பொருளை அவர்கள் கருத்தில் கொண்டனர் என்று சொல்வதற்கில்லை. நடைமுறையில் பெருத்தலும் பருத்தலும் ஒன்றாகவே பலரால் எண்ணப்பட்டது.
இந்தச் சொல் பரு அல்லது பருத்தல் என்ற சொல்லின் அடிப்படையில் எழுந்தது. உருவில் பரியது இறுதியில் மதிப்பீட்டிலும் தன்மையும் பெரியதாய் எண்ணப்படுவது உலக மக்களிடையே காணப்படும் இயல்பாகும். இந்தச் சொல்லமைப்பில் நாம் இதை முன்மை வாய்ந்த கருத்தாக எடுத்துக்கொள்ளலாகாது. பருமையானது பெருமைக்கு ஓர் உவமையாகக் கருதப்படுதலிலும் பெரிய தவறு ஒன்றுமில்லை..
இச்சொல்லுக்குரிய வினை பருத்தல் என்பதே.
பரு+ ஆக்கு + இரு + அம்+ அம் என்ற சொற்கள் உள் நின்று பாராக்கிரமம் என்ற சொல் விளைந்தது.
பரியதாய் ஆக்கப்பட்டு இருந்து அல்லது நிலைபெற்று அமைவதான தன்மை உடையது என்பது சொல்லமைப்புப் பொருளாகிறது. அது யாது என்ற கேள்விக்கு வீரமென்ற தன்மை அல்லது வலிமை என்பது பதிலாகிறது. இவ்வாறு அமைந்ததே இச்சொல்.
வீரமானது பரவலாகப் போற்றப்படுவது என்று பொருள் கொண்டு பர என்ற வினையிலிருந்து வந்ததாகக் கொண்டாலும் அதனால் பொருளுக்கு அது எதிராக அமைந்துவிடாது. படைவீரரிடம் பரவலாகக் காணப்படும் தன்மை என்றிதற்குப் பொருள் கூறலாமென்றும் உணர்க.
வீரவுணர்ச்சி வீரனிடம் எழுந்து அல்லது ஆக்கப்பட்டு, நிலைத்துத் தங்கி ( இரு என்ற சொல்) அம் என்பதால் நன் கு அமைந்து ஆவது என்று வரையறவு செய்யலும் ஆகும்.
எளிய சொற்களைக் கொண்டு தமிழில் உண்டான சொல் இது. உடன் எழுந்த தொழுகை மொழிக்கும் உரியதாகிறது.. எல்லாம் இந்திய மொழிகளே ஆகும்.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
பகிர்வுரிமை உடையது.