செவ்வாய், 13 மே, 2025

சாசுவதம் அல்லது சாஸ்வதம் என்ற சொல். தொடர்வரு கடைப்பிடிகள்

 ஒன்று எதுவாயினும் என்றுமுள்ள தென்று சொல்ல இயல்வதானால் அது மனிதன் இறந்த பின்னும் இருக்கும் மனிதர்களால் பின்பற்றி வரத் தக்கதாகவும்  உண்மையில் பின்பற்றப்படுவதாகவும் இருக்கவேண்டும்.  என்றும் பற்றப் படுவது என்பதற்குச்  சமஸ்கிருதம்  அல்லது சங்கத மொழியில்  "சாசுவதம்" என்று சொல்வர். இதைத் தொடர்வரு கடைப்பிடிகள் என்று இங்கு சொல்கிறோம்.

சா -  இறந்த பின்னும்;

சுவ --  சுயமாக அல்லது தானே தொடர்வருகையாய்

து -  மாற்றமின்றித் தொடர்வது  ஆகிய;

அம்  -  அமைப்பு 

இவ்வாறு விளக்க,  சாசுவதம் என்பது நன்கு புரிந்துணர்வைத் தரும் கடைப்பிடிப்பு என்பதைச் சரியாக விளக்கமுடிகிறது.

சொ >  சு >  சுய  அல்லது சுவ.  இந்தச்சொல் வரும் சொல்லுக்கு ஏற்ப,  சுய என்றோ சுவ என்றோ வரும்.  சுவாதீனம் என்ற சொல்லில் சுவ என்பதே வந்தது.  ஏற்ற வடிவம் தேர்ந்துகொண்டு சொல்லை அமைக்கவேண்டும்.

சொ - சொந்தமாகவே, வ - வந்து கொண்டிருப்பது. இது "சொவ" > சுவ> சுய. சொவ என்பது சொய என்றுமாகும். இது உடம்படுமெய் மாற்றம். இதில் தமிழ் - சம்ஸ்கிருதம் ஒன்றுபாட்டை  உணர்க.

இதையும் படித்தறிந்து ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்:

சம்பிரதாயம்  https://sivamaalaa.blogspot.com/2023/07/blog-post_75.html

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


FOR YOUR KIND  ATTENTION


If you enter compose mode please do not make changes.

You may share this post with others through any social media. Copyright is waived for this post for sharing among friends and students.

நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 

இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.


ஞாயிறு, 11 மே, 2025

துரு குறு அடிச்சொற்கள்ள்ரு

 துருவுதல் என்ற வி னையின் அடி ச் சொல் துரு என்பதாகும். இந்த வினையில் வு என்ற வினையாக்க விகுதி வோலைக்கப்பட, மீதம் இருப்பது துரு என்பதே. இது துளைத்து வெளிவருதலைக் கு ரிக்கும் . 

மலாய் மொழியில் ஏ றத் தாழ இதுவே பொருள். ஆன அம்மொழியில்  ஸ் என்ற இறுதி சேர்ந்து கொள்கிறது.   துரு ஸ் என்ற தொடர்ந்து முன் செல்லுதலைக் குறி க்கிறத

இதுவே போல் அமைந்ததுதான்  குறு  >குறுஸ் >கு ரு ஸ் என்பதும். உடல் கு றுகுவ தைக் காட்டும் . ஸ் என்ப தை விகு தி யாய்க்  கொள்க.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின் 

பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.




சனி, 10 மே, 2025

தொந்தரவு முடிந்து நிம்மதி - சொல்லமைப்பு

 தொந்தரவு என்பது ஒரு திரிபுச் சொல். சிலவேளைகளில் எது உங்களைத் தொந்தரவு செய்கிறது என்று வெளிப்படையாகத் தெரிவதில்லை. முன் சென்மத்தில் அல்லது பிறவியில் நடைபெற்று முடிந்த தீவினைப் பயன்கள் மீண்டு வந்து தொந்தரவு செய்வதாக இருக்கலாம். எதனால் தொந்தரவு என்று கடுமையாகச் சிந்திப்பதானால் ஏதும் பயன் விளைந்துவிடாது.  காரணம் கருத்தில் கோளாறு என்பதன்று, எதனாலென்றாலும் வருவது வந்துகொண்டுதான் இருக்கும். இனி அடுத்த சென்மத்தில் இவ்வாறு நிகழாமல் பார்த்துக்கொள்ள முனையலாமே தவிர பண்டைப் பயன்களை மாற்றி அமைக்கும் திறன் குறைவுதான். காலத்தைப் பின்னோக்கித் தள்ள இயல்வதில்லை. நீங்கள் எதை நம்புகிறீர்கள் என்பதைப் பொறுத்து எதுவும் விளைவதில்லை. நீங்கள் எதை நம்பினாலும் நம்பாவிட்டாலும்  நடப்பவை நடக்கும்.


தொல் என்றால் பழையவை. தரவு என்றால் தருதல், அதனால் மீண்டும் வருதல், அல்லது அலையடித்தல்.  தொ+ தரவு >  தொந்தரவு.

நிம்மதி என்பது,  நில் > நி,  நின்று போவது. மன்னுதல் என்பது நிலைகொள்ளுதல்.  மன்னுவதால் நின்று போனவை மீண்டும் தொடங்காமல் இருத்தல்.  திரும்பாமை என்பதற்கு தி என்று போட்டால்  நிம்மதி என்ற சொல் வந்துவிடும். இந்தச் சொல்லும் வாக்கியங்களி லிருந்து குறுகி அமைந்த சொல். நின்று போனவை மன்னுதலும் மறுபடி திரும்பாமையுமும் ஆகும்.

வாக்கியங்களிலிருந்து குறுக்கி அமைக்கப்பட்ட சொல் நிம்மதி,  நில் என்பதில் லகர ஒற்று மறைந்து நி என்று நின்றால் அது கடைக்குறை என்று இலக்கணம் சொல்லும். இதனுடன் மன்னுதல், திரும்பாமை முதலியன வந்து  நிம்மதி என்ற சொல் ஆகிறது.

சொற்கள் பல மனிதன் உருவாக்கியவை. அந்த அறிவினை மனிதனுக்குக் கடவுள் கொடுத்துவிட்ட காரணத்தால் கடவுள் பின்னணியில் இருந்துள்ளார்.  அவனன்றி அணுவும் அசையாது என்பதால் அவ்வாறு எடுத்துக்கொள்வதற்குக் காரணம் உள்ளது. நீர் எதை நம்புவதாலும் நம்பாமையினாலும் எதுவும் உலகில் மாறிவிடாது. 

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்

உங்கள் அன்பான கவனத்திற்கு


YOUR ATTENTION PLEASE


If you enter compose mode please do not make changes.


You may share this post with others through any social media. Copyright is waived for this post.. 


நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம். 


இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை  அளிக்கப்படுகிறது.