ஒன்று எதுவாயினும் என்றுமுள்ள தென்று சொல்ல இயல்வதானால் அது மனிதன் இறந்த பின்னும் இருக்கும் மனிதர்களால் பின்பற்றி வரத் தக்கதாகவும் உண்மையில் பின்பற்றப்படுவதாகவும் இருக்கவேண்டும். என்றும் பற்றப் படுவது என்பதற்குச் சமஸ்கிருதம் அல்லது சங்கத மொழியில் "சாசுவதம்" என்று சொல்வர். இதைத் தொடர்வரு கடைப்பிடிகள் என்று இங்கு சொல்கிறோம்.
சா - இறந்த பின்னும்;
சுவ -- சுயமாக அல்லது தானே தொடர்வருகையாய்
து - மாற்றமின்றித் தொடர்வது ஆகிய;
அம் - அமைப்பு
இவ்வாறு விளக்க, சாசுவதம் என்பது நன்கு புரிந்துணர்வைத் தரும் கடைப்பிடிப்பு என்பதைச் சரியாக விளக்கமுடிகிறது.
சொ > சு > சுய அல்லது சுவ. இந்தச்சொல் வரும் சொல்லுக்கு ஏற்ப, சுய என்றோ சுவ என்றோ வரும். சுவாதீனம் என்ற சொல்லில் சுவ என்பதே வந்தது. ஏற்ற வடிவம் தேர்ந்துகொண்டு சொல்லை அமைக்கவேண்டும்.
சொ - சொந்தமாகவே, வ - வந்து கொண்டிருப்பது. இது "சொவ" > சுவ> சுய. சொவ என்பது சொய என்றுமாகும். இது உடம்படுமெய் மாற்றம். இதில் தமிழ் - சம்ஸ்கிருதம் ஒன்றுபாட்டை உணர்க.
இதையும் படித்தறிந்து ஒப்பீடு செய்துகொள்ளுங்கள்:
சம்பிரதாயம் https://sivamaalaa.blogspot.com/2023/07/blog-post_75.html
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்னர்
உங்கள் அன்பான கவனத்திற்கு
FOR YOUR KIND ATTENTION
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post for sharing among friends and students.
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகைக்குப் பகிர்வுரிமை வழங்கப்படுகிறது.