Sivamala
By Sivamaalaa : Poems , Commentaries to other literary works. Etymology of selected words சிவமாலாவின் கவிதைகள் கட்டுரைகள் பழஞ்செய்யுட்களுக்கான உரை விளக்கம் சொல்லாய்வுகள் இன்னும் பல WELCOME உங்கள் வருகை நல்வரவாகுக.
வெள்ளி, 16 மே, 2025
சிவமாலாவின் சிறப்பு சேமிப்பு (saving)
வியாழன், 20 மார்ச், 2025
அதிசயத்தில் சாய்வதும் சரிவதும்
இன்று அதிசயம் ஆச்சரியம் ஆகிய சொற்களின் தமிழ் மூலங்களைக் காண்போம்.
தமிழ் வீட்டினதும் அரசனினதும் மொழியாய் இருந்தபோது சமஸ்கிருதம் என்பது தொழுமொழியாய் விளங்கியது. அரசன் கட்டிய கோயில்களிலும் வீட்டுக்கும் வெளியில் நிகழ்வுறும் சாமி கும்பிடும் நிகழ்ச்சிகளிலும் சமஸ்கிருதம் வழங்கியது. முதலில் ஒலியைக் கொண்டு இறைவனை வணங்கும் முறை மக்களிடை இருந்தது. இந்த ஒலிகள் முதலில் ஏடுகளில் இல்லை. வெகுகாலம் ஏட்டுப்பதிவில் இல்லாதிருந்து ஒலிகளையும் இணைந்திருந்த தொழுமணிகளையும் (verses of vEdas ) மறக்கத் தொடங்கி, பலவற்றை இழந்தபின்பே இவற்றைப் பாதுகாக்கும் எண்ணம் ஏற்பட்டுப் பதிவிடல் தொடங்கிற்று. பதிவிடலால் ஒலிகளைச் சரிவரச் சொல்வதற்கு எந்த உதவியும் வரவில்லை. தெரியாதவர்கள் படித்து நன்கு சொல்லமுடியாமல் கெடுத்ததனால், பலர் இந்த எழுத்துமுயற்சிகளை ஆதரிக்கவில்லை. அதனால் சமஸ்கிருதத்திலும் பல பாடல்கள் அழிந்துவிட்டன. எஞ்சியதையே வேதவியாசன் பணியினால் நாம் பெற்றுள்ளோம்.
அதற்கென்று போற்றி வைத்திருப்போரை நேமிக்க வேண்டி இருந்தது. ( காப்பியக் குடிபோன்ற பிரிவினர் தோன்றி மொழிகாத்து வேண்டிய நூல்களை இயற்றினர்.)
ஒரே களத்தில் இயங்கிய காரணத்தால் சமஸ்கிருதம் தமிழ் முதலிய பல பொதுச் சொற்களைக் கொண்டிருந்தன. கடன்வாங்கிய சொற்கள் என்று குறிப்பதெல்லாம் இதை அறியாமையே ஆகும்.
அதிசயம் ஆச்சரியம் முதலிய சொற்கள் சமஸ்கிருதம் எனப்படுவன, அவற்றின் மூலச் சொற்களைக் காண்போம்.
மிக்க வியப்பான ஒன்றைக் கேள்விப் பட்டவுடன், ஒருவிதச் சாய்வு உண்டாகிறது. மனம் அந்தச் செய்தியின் பால் சாய்ந்து, சிலர் நம்புவதும் சிலர் நம்பாமையும் ஏற்படுகிறது, இது நேரன்மை ஆகும், அதாவது சாய்வு, மனச்சாய்வு.
அதி சயம் என்பதில் சாய் + அம் > சயம் என்று முதனிலை குறுகிச் சொல் அமைகிறது. மனிதன் வியப்பின் பக்கம் சாய்வு கொள்கிறான்.
ஆச்சரியம் என்ற சொல்லிலும் சாய்வுக் கருத்தே உள்ளது, சரிதல் என்பதும் சாய்வுதான். சரி + அம் > சரியம் ஆகிறது.
ஆதலின் சரிதல் ஆச்சரியம் ஆகும். அதாவது வியப்பு, சாய்தல் என்பதும் அது.
அறிக மகிழ்க
மெய்ப்பு பின்.
தொடர்புடைய பதிவுகள்:
https://sivamaalaa.blogspot.com/2015/10/chayanam.html
அனந்த சயனம்
https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html
சயனம் சயனி ஆந்தசயனம்
https://sivamaalaa.blogspot.com/2017/09/blog-post_18.html
சங்கதத்தில் தமிழ்\\
https://sivamaalaa.blogspot.sg/2015/10/chayanam.html
அனந்த சயனம்
YOUR ATTENTION PLEASE
If you enter compose mode please do not make changes.
You may share this post with others through any social media. Copyright is waived for this post..
நீங்கள் எழுதும் பயன்முறையில் நுழைந்தால், தயவுசெய்து மாற்றங்களைச் செய்ய வேண்டாம்.
இந்த இடுகையை எந்தச் சமூக ஊடகங்கள் மூலமாகவும் மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாம். இந்த இடுகைக்கான பதிப்புரிமை விலக்கு அளிக்கப்படுகிறது.