செவ்வாய், 9 டிசம்பர், 2025

யுத்தம் என்ற சொல்லில் தமிழ்ச் சொல்லாக்கப் பண்பு.

 யுத்தம் என்ற சொல் தொன்று தொட்டுத் தமிழில் வழங்கிவந்துள்ளது.  இது சங்க இலக்கியத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும்,  தமிழ் மூலத்தை உடைய சொல்லே

ஒருவனை அடிப்பதென்றால்  அவனுக்கு அடுத்து நில்லாமல் அவனை அடிக்க இயலாது.  இக்காலத்தில் 11000 கல்தொலைவுக்கு அப்பாலிருந்தும் ஓர் ஊரை அடித்துத் தூளாக்கலாம் என்று சொல்கிறோம்.  இத்தகைய கருத்துக்களும் அதற்கான ஆயுதங்களும் பண்டை இருக்கவில்லை. அடுத்துச் சென்றுதான் கையாலடித்து வலியை உண்டாக்குவது சொல் உண்டான காலத்தில் இருந்தது. ஆகவே தமிழை ஆயுங்கால் இதனைக் கருத்தில் கொள்ளவேண்டும். 

ஒருவனுடன் சண்டை செய்வதென்றாலும் அண்மிச் சென்றுதான் பெரும்பாலும் சண்டை இட்டார்கள்.  வில்லால்  தாக்குவதானாலும்,  ஓரளவுக்கு அண்மையில் இருக்கவே வேண்டும்.   சண்டை என்ற சொல்,  அண் என்ற அடிச்ச்சொல்லினின்று வருகிறது.  அண்> சண்> சண்டு> சண்டை என்று இச்சொல்  அமையும்.   அடி என்ற சொல்லில் இருக்கும் அடு> அடி என்பதிலுள்ள கருத்தே இங்கும் உள்ளது.  

இனி யுத்தம் என்ற சொல்லைப் பார்ப்போம்.  உத்தம் என்பதே இதன் முன் வடிவம் ஆகும்.  உ என்பது முன்னுறல் காட்டும் தமிழ்ச் சுட்டெழுத்து.  இது உன், உம் என்ற பதிற்சொல் திரிபுகளுடன் தொடர்புடையதாகும்.  தமிழை நன் கு கற்றிருந்தால் இது வாத்தியார் சொல்லிக்கொடுக்காமலே புரியக்கூடியது ஆகும். அகர  வருக்கங்கள் சகர வருக்கங்களாகும்,  இதுவும் அண்டை> சண்டை என்பது போலவேதான்.   எப்போதும் காட்டும் எளிதான உதாரணம்  அமணர் > சமணர் என்பது.  ஊகம் > யூகம் > வியூகம் என்பவும் காண்பீர்.  ஆனை > யானை என்பதில்,  அகர வருக்கங்கள் யகர வருக்கங்கள் ஆதல் கண்டுகொள்க.  முன்னுறலாகிய உத்தம் என்பதிலிருந்து யுத்தம் என்று திரிந்து  முன்னுறலையே சொல் காட்டுகிறது. முன்னுறல் என்பதும் அடுத்துச் செல்லுதலின் வேறன்று.

யாம் காண்பது இங்கு யாதெனின்,  அடுத்துறல் என்ற கருத்திலேதான் இச்சொற்கள் அமைந்துள்ளன.   உத்தம் என்பது தமிழ் மூலம் தான்.  சமஸ்கிருதத்திலும் இச்சொல் உள்ளது.  இரண்டும் சகோதர மொழிகள்.  எனவே,  இவை சொல்லாக்கத்தில் உள்ள பொதுப்பண்பை ஒட்டி அமைந்த சொற்களாகும்.

சமஸ்கிருதம் ஆரிய மொழி என்றால்  அது வெள்ளைக்காரன் மொழியன்று.  அறிவுடையோர்,  இறைபோற்றுவோர் ஆனவர்கள் பயன்படுத்தி வந்த மொழி. தமிழும் பல இறைப்பற்று இலக்கியங்கள் உள்ள மொழிதான். மணிமேகலை என்ற புத்தமத இலக்கியம் தமிழில்தான் உள்ளது.  அதன் இறுதி நான்கு காதைகளில் பல்வேறு சமயக் கருத்துகள் சொல்லப்படுகின்றன.  இதில் கூறப்படும் சில கருத்துகள் மகாயன புத்தம் கூறும் பாலியிலும் சீனத்திலும் இல்லை என்று கூறப்படுகிறது. மணிமேகலையின் ஆசிரியர் கூலவாணிகன் சாத்தனார், தமிழ் சமஸ்கிருதம் இரண்டிலும் வல்லுநர்.  புத்தமத நூல் தெளிவினர்.   

பிற்கால வெள்ளையர் முயன்று சமஸ்கிருத  ஒளியில்  தாங்கள் மின்னிட நினைத்தனர்.  

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்னர்.

பகிர்வுரிமை உடையது.


சனி, 6 டிசம்பர், 2025

பதாகை என்பது.

 பதாகை என்னும் சொல்லை அறிவோம்.

பதாகை என்னும் சொல்லின் அடிப்படை வினைச்சொல்  பதிதல் என்பது. பதி + ஆகு+ ஐ > பதாகை.  

விருதுக்கொடி,  பெருங்கொடி, தேர்க்கொடி முதலியனவையும் இப்பெயர் பெறும். எழுத்துகள் எழுதப்பெற்றுக் கொடியாய் வைக்கப்படுவதும் இவ்வாறு சுட்டப்பெறுகிறது. 

நாட்டியத்தில் கையினால் காட்டபெறும் ஒருவகை அபிநயமும் பதாகை என்பர், எனவே இதைப் பல்பொருள் ஒருசொல் என்னலாம்.

பதி + ஆகு + ஐ >  பதாகை.   பதி என்பதன் இகரம் விடுபாடு கண்டது, ( கெட்டது). பின், பத் + ஆகு + ஐ > பதாகை ஆயிற்று.  த்+ஆ> தா ஆகிவிடும்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்

பகிர்வுரிமை



திங்கள், 1 டிசம்பர், 2025

கோபம் என்ற தமிழ்ச்சொல்.

 இன்று கோவம் என்ற தமிழ்ச்சொல்லை அறிந்தின்புறுகிறோம்.

ஒரு நல்ல நிகழ்வு நடந்துவிட்டால், நம் மனம் மலர்கிறது.  மனமென்பது ஒரு மலருக்கு ஒப்புமையாகும் ஓர் உறுப்பு.  இது இருதயம் அல்லது இதயமாகுமென்று சொல்வர்.  ஆனால் இதை அறிவியலார் ஒத்துக்கொள்வதில்லை. எண்ணங்கள் மூளையிலிருந்தே உண்டாவதாகச் சொல்வர். கோபம் என்பது  மனம் குவிதல் அடிப்படையில் உண்டான சொல்லே.  அறிவியல் கருத்துக்கு ஒப்ப அமையவில்லை.

குவிதல், வினை.

குவி > கோவி >  கோவித்தல்,  ககர ஒற்றின்மேல் உகரம் ஏறியது,  ஓகாரமாக மாறும் திரிபு.

இவற்றைக் கவனத்தில் கொள்க.

ஊ-  ஊது,   ஓ> ஓது.  காற்றினால் எழும் ஒலிகள்.

ஊடு >  ஓடு.  ஓடுவது காற்றினூடு விலக்கிக்கொண்டு ஓடுவதானன்றோ.

பேச்சில் உகரம் ஒகரமாக ஒலிப்பதுண்டு.    உக்காரு - ஒக்காரு என்று பேசுவது கவனித்துள்ளோம்.

உச்சரி என்பது , உ- உச்சு  ( முன்வருதல்,  ஒலி முனவருதல்;  அரு+ இ>  அருகில், இவண் என்னும் கருத்துகள்,   அரு இ >  அரி.  அருகில் இங்குவருதல். உச்சு என்பதில் முன்வரவு முதலெழுத்திலும் ஈற்றிலும் வந்து  அழுத்தம் தருகிறது. உச்சி என்ற சொல்லிலும் உகரம் முன்வரவையும் இகரம் அண்மையையும் தெரிவிக்கிறது. நிற்கையில் முன்னிருப்பது உச்சி.

குவி என்பதில் குறுக்கத்தைக் குறிப்பது குகரம்.  இகரம் இங்கென்னும் பொருளது.  குறுகி இங்குத் தெரிகிறது குவிதல் என்னும் நிகழ்வு.

கோவம் என்ற முதல் வடிவம், கோபம் ஆவது வகர பகரப்  போலி  அல்லது திரிபு.  வகு> பகு என்பதைப்  போல்.

சமஸ்கிருதம்.

சமஸ்கிருதம் இந்திய மொழியே ஆதலால்,  தமிழுக்குச் சொல்வது சமஸ்கிருதத்துக்கும் ஒப்பதே.  சமஸ்கிருதம் இந்தோ ஐரோப்பிய மொழி என்பது பிற்கால ஐரோப்பியர் ஆராய்ச்சி. சீனமொழியுடன் ஐரோப்பிய மொழிகளை உறவு கற்பிக்க முயன்று தடுமாறி இறுதியில் சமஸ்கிருதத்தை எடுத்துக்கொண்டனர். இந்தக் கற்பனை மொழியுறவு, ஐரோப்பியர் ஆசியாவுக்கும் உரியவர் என்ற கருத்தை நிலைப்படுத்தவே. இதனால் ஐரோப்பிய மொழிகள் வளம்பெற்றன.  இந்தோ ஐரோப்பிய மூலமொழி என்பது கற்பனை.

திறவிடம் என்பது தென்னிந்தியாவின் திறந்த ( கடலினை எதிர்கொண்ட்)  இடம்.  திரவிடம் என்பதன் மூலமும் திற இடம் தாம். கடல்சூழ் இடத்தை எதிர்கொண்டு வாழ்ந்த பிராமணர்  திரவிடப் பார்ப்பனர்.  றகரம் சொல்லாக்கத்தில் வந்தால் ரகரமாகிவிடும்.   திறவிடம் > திரவிடம். மூலச்சொல் தமிழ் அடிப்படை. ஆனால் தமிழுக்காக உண்டானதன்று.  இடப்பெயர்.  கடலால் சூழ்ந்து திறந்த இடம் திற இடம் > திரவிடம். 

குவி (௳னம் குவிதல்,  மலர்ச்சிக்கு எதிர்).

குவி அம் >  கோவம். குவி கோவி திரிபு.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

பகிர்வுரிமை