சனி, 4 மே, 2024

பிருட்டபாகம் என்னும் உடலின் பாகம் - சொல்.

 பிறகிட்ட  -  இதை புரக்கட்டு, பெரக்கட்டு என்று நாவு பலவாறு பலுக்கும்.

பிருட்ட பாகம்.  இது மரூஉச் சொல்.  கி என்ற எழுத்து மறைந்து விட்டது  இட்ட ( இடு > இட்ட ) பாகம் என்பது உட்ட பாகம் ஆயிற்று.பிர்+ உட்ட > பிருட்ட!  பின் இது பூசை மொழியில் இடம்பெற்று,  பிரிஷ்ட, பிருஷ்ட என்று மகிழ்வாய் மெருகு இட்டுக்கொண்டு வழங்கிவருகிறது.  ற + இ சேர்ந்து ரு ஆனது இதன் ஈர்ப்பு ஆகிவிட்டது.

மொழி எவ்வாறு அழகுள்ளதாக இலங்குகிறது என்றால், இன்னொரு திரிபு பாருங்கள்:

அவையின் இடு(க்)கை >சவையின் இடுக்கை >  சவனி(டு)க்கை > சவனிக்கை.   இது மேடைக்கு இடப்படும் திரைச்சீலையைக் குறிக்கிறது. திரை விலகியபின் ஒருவன் வந்துபாடுவான். மக்கள் மகிழ்ச்சி அடைவர்.  அகரம் சகரமாகும். கடின ஒலிகள் ( டு போல)  தானே நீங்கிவிடும். கேட்பவன் கவனக்குறைவால் சொல்லில் மாற்றம்.

(ஞானயோகம்) மேவும் அவர் என்பது, பாகவதர் பாடுகையில் மே-பூங்கவ என்பதுபோல் ஒலிக்கிறது. படுதா போடும் வேலைக்காரனுக்கு நேரமில்லை. அதனால் அவனுக்கு சவனிக்கை என்று காதில் விழுந்து அவ்வாறே எடுத்துக்கொள்கிறான். இதில் மொழிக்கு ஒரு புதுச்சொல் கிடைத்துவிட்டதே.

பாவினால் மக்களைக் கவர்ந்தார்.  பா கவ(ர்ந்)தார் > பாக வதார்>  பாகவதர்.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

மற்றொரு வகையிலும் இச்சொல் விளக்கமுறும். இங்குக் காண்க: https://sivamaalaa.blogspot.com/2021/07/blog-post_21.html.  இருபிறப்பி ஆகும்.


தொழிலில் ஒற்றுமை

 உங்களின் வேலையை  நீங்களே செய்வதில்

உங்களுக் கோர்பெயர் நல்லது வந்திடில்

உங்கள் மனமே  நிறைவினில் நிற்கும்  

உங்களுக் காகும் உடல்நலம் ஓங்கும்,


விரைந்து முடிக்கவே  வேண்டுவ தாயின்

வேண்டிய  நற்றுணை கொள்வதும் கூடும்.

சிறந்தது  கைத்திறம் உள்ளார்  உதவிடச்

சிறப்புடன் வேலை முடித்திட வேண்டும்


புன்னகை பூத்து முரண்பா டகற்றி,

புகழுற யாவரும் ஒற்றுமை போற்றி,


மன்னர்கள் நாமென நன்மகிழ் வெய்த,

முன்னரே ஆக்கமே நண்ணுதல் காக்கவே..


(இப்பாடல் வெண்தளை பயின்று வருமாறு செப்போலோசையில் எழுதப்படுகிறது,  அடுத்த வரியில் வெள்ளோசை தழுவப்படவில்லை.)


நல்லது - நல்ல பெயரைக் குறிக்கும். மற்ற நன்மையும் அடங்கும்,

ஓர் பெயர் - ஒரு பெயர். கவிதையில் ஒரு என்று எழுதவேண்டியதில்லை

இலக்கணம் விலக்கு அளிக்கிறது,

சிறந்தது கைத்திறம் =  கைத்திறம் என்பது சிறந்தது,  அது கொண்டு

நற்றுணை - நல்ல துணை.

எய்த -  அடைய.

நன்ணுதல் -  அடைதல்

முன்னரே - இது முன்னரே காக்க என்று இணைக்க.

காக்கவே -  காத்துக்கொள்க.


வியாழன், 2 மே, 2024

தினாத்யயா - சமஸ்கிருதச் சொல். பொருள்.

தினம் என்ற சொல்,  தீ என்ற தமிழிலிருந்து வருகிறது.  தீ என்பதோ தேய் என்பதிலிருந்து வருகிறது. சில பொருட்கள் தேய்வதனால் வெப்பம் மிக்குவந்து தீ உண்டாகிவிடுகிறது.

தினம் என்பது தமிழ்ச்சொல் என்று சில தமிழாசிரியர்கள் கூறியுள்ளனர்.

முதலில் தமிழர்கள் தமிழும் சமத்கிருதமும் இருகண்கள் என்றும் ஒன்றுக்கொன்று இணையானவை என்று சொன்னார்கள். வெள்ளைக்காரன் அது எங்கள் கண்டத்திலிருந்து உங்கள் கண்டத்துக்கு வந்த மொழி என்று கட்டுரைத்தபின்,  அவர்கள் கடன் வாங்கியதைத் தெரிவிக்காமல், நீங்கள் எல்லாம் கடன் வாங்கிவிட்டீர்கள் என்று சொல்லிவிட்டான். அந்நாளிலிருந்து தமிழறிஞர்கள் மனமிகக் கவன்று,  அது சமஸ்கிருதம், இது சமஸ்கிருதம் என்று பிரித்து. ஆய்வுகளில் ஈடுபட்டுக்கொண்டிருந்தனர். வால்மிகி என்ற தமிழ்ப்புலவன் தான் முதலில் சமஸ்கிருதத்தில் நூலெழுதியவன்.  அவன்பாடிய இராமரும் நீலவண்ணத்தவர்தான். வெள்ளையன் அல்லன்.

வான்மிகி என்ற புலவர் சங்கத்திலும் சென்று பாடியுள்ளார்.

சமஸ்கிருதம் என்பது நம் உள்ளூர் பூசை மொழி. 

நிற்க, தினம் என்பது நாள் என்று பொருள்படுதலால்,  தினாத்யா  என்ற சொல்லைப் பார்ப்போம்.  தினம் அற்றுப்போவது தான்  தினாத்யா அல்லது தினாத்யாய. அற்றுப்போவது என்றால் முடிந்துபோவது.  அறவே இல்லாமல் போவது அன்று.  (அல்ல).  தினம் அற்றுப் போவதால் இரவு வந்துவிடும்.  அற்று -  இன்று அத்துப்போனால்  நாளைச் சூரியன் முளைக்கும்.  அப்போது   வரும். பூமி சுற்றுவதும் நீங்கள் அறிந்ததே.[ Dinātyaya]

தினேஸ்வரன் என்ற பெயரும் பலரும் விரும்பும் பெயர். தினத்துக்கு ஈஸ்வரன் என்றால் சூரியன். இறைவன் > இஷ்வர் ( ஈஷ்வர்)> ஈஸ்வர் மீண்டும் அன் பெற்று ஈஸ்வரன் ஆகும்.  சூரியன் தெய்வமாக வணங்கப்படுவது. சூடு கொடுப்பவன் ஆதலால் சூடியன்: சூரியன் ஆனான்.

தினாதி என்பது தின ஆதி,  காலைப்பொழுது, இப்போது இவ்வாறு பல சொற்கள் உள்ளன. இந்த மாதிரிச் சொற்களின் மூலம் சமஸ்கிருதமும் பல பெற்று சொற்செழுமை அடைந்தது. 

தின அன்று அகம் என்பவற்றைக் கொண்டு  தின அந்து அக >  தினாந்தக என்ற சொல் உண்டானது. மாலை வந்து மருவும் நேரத்தைக் இது குறித்தது.

அன்று அல்ல என்பதுமாகும், அன் து < >அந்து

தேய் > தீ > தினம்போல,  தேய் என்பதிலிருந்தே டே  ( நாள் ) என்பதை ஐரோப்பியர்கள் உண்டாக்கிக்கொண்டனர்.

தீ இன் அம் > தி ன் அம் > தினம்,.

அறிக மகிழ்க

மெய்ப்பு பின