புதன், 24 ஏப்ரல், 2024

வாசுகி - பெயர், மற்றும் பாம்பு என்றால் என்ன?

 வாசுகி என்பது ஒரு பாம்பின் பெயராகவே  நம் நூல்கள் கூறுகின்றன.  இது கிழக்குத் திசையில் இந்தப் பூமியைத் தாங்கிக்கொண்டுள்ளது என்று இந்நூல்களின்படி நாம்  அறிகிறோம்.

இதுபோன்ற சொற்கள், நம் காலத்திற்கும் முன்னரும்,  இவை கூறப்பட்டு  நமக்குக் கிடைத்துள்ள நூல்களின் காலத்திற்கு முன்னும் இருந்த நூல்களிலிருந்து மொழிபெயர்ப்புச் செய்யப்பட்டு நம்மை வந்து எட்டியுள்ளன.  அம் மிக்கப் பழைய நூல்களில் இருந்த சொற்களைப் பெயர்த்தெழுதியவர்கள் அச் சொற்களை அவர்களிடம் அப்போதிருந்த பதங்களைக் கொண்டே சொல்லவேண்டியதைப் புனைந்திருக்க வேண்டும்.  பாம்பு என்ற வுடன் இப்போது பக்கத்திலுள்ள காட்டில் இழைந்து திரியும் பாம்பு வகையைக் குறிப்பதாகக் கொள்ளுதல் பொருந்தாமல்  முடியும்.

எழில்மலை என்ற ஒரு மலைப்பெயரை  எலிமலை என்று மொழிபெயர்த்தனராம்.  அப்புறம் அந்த நாட்டுவேந்தனையும் மூஞ்சூறு இனத்தவன் என்று கூறிவிட்டனர்.  இதுபோன்ற தவறுகள் பெயர்த்தெழுதுவதிலும் அதை வாயித்து உணர்ந்து கொள்வதிலும் ஏற்படாமல் காத்துக்கொள்ளவேண்டும். நாமும் இங்கு முயல்வோம்.

பூமியைத் தாங்கிக்கொண் டிருக்கும் பாம்பு  என்பது புறப்பாகம் என்று பொருள்படவேண்டும்.

பாகம் : இது இடைக்குறைந்து,  பாகம்> பாம்  ஆகும்.

புறம்  என்பது, ஓரெழுத்தால் குறிக்கப்பட்டது,  பு  - புறம் அல்லது வெளி,

ஆகவே புறப்பாகம் என்பது சரியாகவருகிறது.

பாகம் புறம்,  பாம் + பு >  பாம்பு  ஆகிறது,  ஒரு நெடும்பாகம் என்பது பெறப்படுகிறது,

வாய் +  உ + கு + இ என்பவை வாயுகி  ஆகும் வாய் - இருக்கும் இடத்தில் முன் வந்து  சேர்ந்து இருப்பது என்று சரியாக வருகிறது,  இதிலுள்ள யகரம்  சகரம் ஆகும் என்பது திரிபு விதி.   ஆகவே வாயுகி என்பது வாசுகி ஆயிற்று.

வாய் என்ற  பழந்தமிழ்ச் சொல்லுக்கு இருக்கும் இடம் என்று பொருள்.

இதை இப்போது பறந்துபோய் பார்க்க முடியாவிட்டாலும் எதுவும் முரணானது இல்லை என்று அறிக.

அது ஒரு நீண்ட தட்டாக இருக்கலாம். பூமியில் மேலோட்டில் பல தட்டுகள் உள்ளன.

வாசுகி என்றால் ஒரு பாம் பு. நீங்கள் கண்ட பாம்பு  அன்று.  பாம் பு - பாகம் புறத்தது.  புறத்தே உள்ள பாகம்.

பாகம் என்பது பாம் என்று இடைக்குறைந்தது.

பாம் கு> பாங்கு, இதிலும் பாகம் பாம் என்றே ஆகிக் கு விகுதி பெற்றது.

வணக்கம்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்

திருத்தம்: 24042024 1248

ஞாயிறு, 21 ஏப்ரல், 2024

The name Ranjan, Ranjani

 ரஞ்சன், ரஞ்சனி என்ற பெயர்கள் பலருக்கு உள்ளன,

நிறைந்தவன் >  நிறைஞ்சவன்.  இங்கு த என்பது ச என்று மாறிவிட்டது.   இது பேச்சுமொழித் திரிபு.

நிறைஞ்சவன் >  நிறைஞ்சன்.> நிரஞ்சன்.  

2ம் சொல்லில் றை - ர ஆனது  முதலாவது ஐகாரக் குறுக்கம், அடுத்து  த- ச திரிபு.  தனி>சனி போல.

நிரஞ்சன் >  ரஞ்சன்.  நிரஞ்சனி > ரஞ்சனி.   ( இது முதற்குறைப்போலி,  நிகரம் கெட்டது ).  ரகரம் முதலாகாது என்ற தொல்காப்பிய முனிவரின் விதியை மீறிய திரிபு.

உதாரணம்:  நிரம்ப >  ரொம்ப.

நீர் அங்கன் > நீரங்கன் > ரங்கன் ( கடவுட் பெயர்).

நீரின் அமிசம் ( அம்சம்) ஆன தேவன்.)

வேறு எழுத்துக்களிலும் வரும்:

உரு ஒட்டி >  உரொட்டி >  ரொட்டி.  ( ஓர் உருவாகச் செய்து சூடேற்றிய இருப்புத் தட்டில் ஒட்டி ஒட்டிச் சமைத்துச் [ சுட்டு ]எடுப்பது ).

ஒரு குழிவுள்ள இரும்புச் சட்டியில்  பிசைந்த மாவை நிறைத்து,  சூட்டில் ஒட்டி எடுப்பது )

நிறை ஒட்டி > நிரொட்டி > ரொட்டி  எனினுமாம்,

ரொட்டி என்பதை  லொத்தி என்பது சீனர்களின் பேச்சுத் திரிபு.  லோ தீ என்று பொருள்கூற அவர்களுக்கு வசதி ஆகிவிடுகிறது.  ல - ர திரிபும் உள்ளது.

மூலச்சொல் திரிந்தால்  றகர வருக்கம் ரகர வருக்கமாகித் தன் வன்மையை இழந்துவிடும்.


அறிக மகிழ்க.

மெய்ப்பு: பின்.


சனி, 20 ஏப்ரல், 2024

சாமியைக் கும்பிடுதல் தமிழர் பண்பாடு

 இங்குச் சில ஆய்வுரைகளை நீங்கள் அடைந்தறியும் பொருட்டு கீழே குறிப்பிடுகிறோம்.  சொடுக்கி வாசித்து அறிக. நீங்களே தாங்களாகவே தேடிக் கண்டுபிடிப்பது கடினம்.  ஆகையால் இது இங்கு பதிவுபெறுகிறது.

1. https://sivamaalaa.blogspot.com/2019/02/blog-post.html

சாமி என்பது எப்படி அமைந்த சொல்.

2. https://sivamaalaa.blogspot.com/2019/12/blog-post_9.html

சாமி  இன்னொரு பொருள்

https://sivamaalaa.blogspot.com/2017/06/go-to-heaven-now.html

சொர்க்கத்தைத் தாக்கிய  அறிவாளிகள் சிலர்

அறிக மகிழ்க

மெய்ப்பு பின்னர்