திங்கள், 27 நவம்பர், 2023

உச்சரித்தல் என்ற சொல் அமைப்பு.

இங்கு இது புதுவதாய்  ஆராய்வோம்.

உது  என்பது சுட்டடிச் சொல்.  உகரமுதலானது.

உது என்றால் முன்னிருப்பது, முன் கொணர்வது என்று பொருள்.

உது  >  உத்து.

இங்கு தகரம்  இரட்டித்தது.   அதாவது து என்பது த்து என்று அழுந்தி வெளிவந்தது.   அது என்பது அத்து என்று தோன்றிச் சிலவிடத்துச் சாரியையாவும் வருதல் போலும்.

உத்து: பொருள் "முன் கொணர்ந்தது."

உத்து > உச்சு.  இது தகர சகரத் திரிபு அமைதல்.

இனி  அரு என்றால் அருகில் இருப்பது   

அரு  + இ :  >  அரி.    அருகில் இடுதல், வைத்தல். 

உச்சு + அரு + இ  >  உச்சரி >  உச்சரித்தல் ( வினைச்சொல்_-)

முன் கொணர்ந்து  அருகிலாக்குதல். defining for you.

நாவின் மூலம் முன் கொண்டுவந்து அருகிலமைத்தல்.

முன் இதன் ( அரு + இ) பொருண்மையை ஆய்வறிஞர் சிலர் கண்டுகொள்ளாமல் விலகிச் சென்றுவிட்டதால்  இது  விளக்கமுறா தொழியலானது. இதனை இங்கு உளப்படுத்தியுள்ளோம். இது கணக்கில் விடுபாடு போலவே. 

Pro-nounce என்பதில் உள்ள முன்னொட்டும் இப்பொருளதே என்பது மகிழ்விக்கிறது.

உ - முன்மைப் பொருள்.

அரு இ - அண்மைப் பொருள்.

இரட்டைப் பொருத்தம் ஆகிவிட்டது.

அறிக மகிழ்க.

மெய்ப்பு பின்.

லதா தமிழ்

 இலையைத் தருவது கொடி.

இலை  >  ல.

தரு(வது)  >   தா.

ல+ தா >  லதா.  என்றால்  இலையைத் தரும் கொடி.

தமிழ் மூலம் மெய்ப்பிக்கப்பட்டது.

பேச்சு :

இலை -  எல - ல (என்று பலுக்குவர்.)

தரு  -  வினைப்பகுதி.  தா  என்பது ஏவல்வினை

பலுக்குதல் - உச்சரித்தல்.


அறிக மகிழ்க

மெய்ப்பு:  பின்.

கணபதியை வணங்கி வரப் பொறுத்தருள்க

ஐஞ்சீர் விருத்தம்





இந்தப் படத்தில் அம்மன் இயல்பாக உள்ளார்



 நீயே  பணிந்தேன்  சிரித்தாய் இன்றேன் கவலைமுகம்,

தாயே எளியேன் எதுவும் செய்தேன் ஏலாததோ

வாயே  திறக்கத் துணிவே இல்லேன் நாலுதிசை

ஆயும்  கணங்கள்  பதிகால் வீழ்வேன்  பின்சரணே.


பணிந்தேன்,  நீ சிரித்தாய் ---  முன்னர் பணிந்தக்கால் நீ சிரித்தாய்.

இன்றேன்  கவலைமுகம்  -  இன்றைக்கு ஏன் கவலை தோய்ந்த முகத்துடன்

இருக்கின்றாய்;

வாயே  -  உன்னை வாழ்த்துவதற்கு வாய்.

திறக்கத் துணிவே இல்லேன் -   பயன்படுத்தவும் துணிச்சல் இல்லாதவன் ஆனேன்;

நாலுதிசை ஆயும் கணங்கள் பதி -  நான் கு திசையும் ஆட்சிசெய்யும் கணங்களின் அதிபதி,  

கால் வீழ்வேன் -  அடிகளைப் பணிவேன்,  

பின் சரணே -  பின் தாயாகிய உன்னிடம் சரண் புகுவேன்


இது துர்க்கை அம்மனை நோக்கிப் பாடிய பாட்டு.