வெள்ளி, 19 மே, 2023

மழைத்துளி ஆசிரியப்பா

 ஆசிரியப்பா


வாழ்கென வரமருள் குளிர்ந்த மழைத்துளி, 

வீழ்கென ம(ன்)னமகிழ் ஆழ்மனம்  வாழ்கநீ!

உடலில் வீழ்கென ஓடிமுன்  நிற்க,

படலும் குன்றியப்  பெயலும் நின்றது;

வானம்  நீயே வரையாது  வழங்குவை

கானம்  இசைத்தனை கடுந்தரை மோதலில்;

ஏன் நின்  றனைநீ   ஏற்றிடு  நீயே

நான்முயல்  வேனே நனிஇன்   னொருநாள்

கூன்படு நோக்கு குறைத்தே

நnன்மகிழ்ந்திடவே  நனைத்திடு  கவினே.



பொருள்:

வாழ்கென -   வாழ்க என்று

வீழ்கென -  பெய்க என்றவாறு

மனமகிழ் -  மன்ன மகிழ் ( தொகுத்தல்) -ன்  குன்றியது.

---  பொருந்தும்படி மகிழும்.

வாழ்க நீ -  மனமே நீ வாழ்க

படல்  -  உடலை மழைத்துளி தொடுதல்.

வரையாது -   குறைவின்றி

மழைத்துளி கானம் இசைத்தனை - தரையில் வீழ்தலில் ஓர் இசை

வந்த என்பது

மழையில் நனைவதும் ஒரு மகிழ்வு தரும்!

ஏற்றிடு நீயே -  ஏற்றுக்கொள்வய்  நீ

கானம் --- இசை

கூன்படு நோக்கு -  நேர்மையற்ற பார்வை அல்லது நடப்பு

நனி -  நன்றாக

நனைத்திடு -  என்மேல் பெய்திடு

கவினே -   அழகே.  இது மழையை விளித்தது

 மெய்ப்பு  -  பின்னர்:


புதன், 17 மே, 2023

கைகோர்ப்பு -- சொல்லில் தவறு என்ன?

 கைகோர்ப்பு என்று பேசுவதும் எழுதுவதும் சரியா?

தெரிந்துகொள்வோம்.

கோத்தல் என்ற சொல் "ஏடுகோத்தல்" என்ற பதத்தில் உள்ளது.  இது பழங்காலத்தில்  ஓலைச்சுவடிகளில் காய்ந்த இலைகளைப் பதப்படுத்திக் கோத்தல் அல்லது தைத்தல் என்று பொருள்படும்.  நாளேறிவிடின்,  ஓலைகள் காய்ந்து மொருகலாகி உடைந்திடும்.  இதற்கு ஒன்றும் செய்யமுடியாமையால்,  புதிய ஓலைகளைத் தயார்ப்படுத்தி,  அவற்றில் பெயர்த்தெழுதினால் நூல்கள் பாதுகாக்கப்படுதல் இயலும்.  பெயர்தெழுதுகிறவர்கள் கவனக்குறைவால் பிழைகள் செய்துவிடின் மொழிமரபு கெடுதலாக நேரிடக்கூடுமாதலின், இவ்வாறு செய்தலில்  பிழையாமை காத்தல் முற்றிலும் இயல்வதில்லை.

செயற்கரிய என்று தொடங்கும் குறளில், ஐந்தாம் சீர் "செயற்குரிய" என்று வந்திருக்க வேண்டும் என்று தமிழறிஞர் ஒருவர் கூறியுள்ளார். நூல்பெயர்தெழுதியவர்கள்  பிழைபட்டிருக்கலாம் என்று அவர் கருதுகிறார்.

கோத்தல் என்பதே வினைச்சொல் ஆதலின்,  கோர்த்தல் என்ற வினை இல்லை. கோ> கோத்தல்;  கோ>கோர்>கோர்ப்பு என்பது இல்லை. ஆதலின், கோர்ப்பு எனற்பாலது பிழையான சொல்லே ஆகும்.

ஆசாரக்கோவை என்ற நூற்பெயரில்,  கோவை என்றுதான் வரும்.  கோர்வை என்று வருதல் இல்லை.   கோ> கோவை.  வை என்பது விகுதி.

கோ> கோவணம்,   உடலை அண்மிக்கும்படியாகக் கோக்கப்படுவதாதலின், கோவணம் ஆகும்.  கட்டணம் என்பதிற்போல, அணம் ஒரு தொழிற்பெயர் விகுதி.

கோப்பு,  கோவை, கோவணம் என்றே எழுதுக.

அரைஞாண் கயிற்றில் கோப்பது ஆதலின்,  கோவணம் ஆனது.

கௌபீனம் என்பது திரிபு.

கோ + பு+  இன் + அம் >  கோபீனம்-  கௌபீனம் என்க.

அறிக மகிழ்க

மெய்ப்பு  பின்னர்

குறிப்பு:

கோ+ பின் + இன்+ அம்:   கோ -  கோக்குங்கால் ,  பின் - பின்னாலும் கோத்து,  இன்-  இன்னும் ( முன்னும் ) கோத்து,   அம்-  அமையும் சிறு துணி என்பது பொருள். வாக்கியமாக்கச் சரியாக வருகிறது.

காவு + பின் + அம்:  காவ்பீனம் > கௌபீனம். பின் புறம் காத்துக்கொள்ள அணியப்படுவது, ( பூச்சி முதலிய பின்னால் வந்து கடித்தால், கடித்தபின் தான் தெரியும் ஆதலால்,  பின் புறம் முதன்மை வாய்ந்த உடலிடம்  ஆனது. உடலில் நகர்கையில் தெரிந்தாலும் தடுக்க இயலும்,

இருவழிகளிலும் அமையும் சொல் இதுவாகும். இருவழிகளிலும் தமிழ்ச்சொற்கள் அடிச்சொற்களாய் இருத்தலால் இது தமிழ்ச்சொல்.  பூசாரிகள் கோவணம் கட்டிக்கொண்டு நிற்பதில்லை. ஆதலால் இது வயல் தொழிலாளர்களிடையே தோன்றியசொல்.

Anyway,  it is kOvaNam,  not kOrvaNam, that is the point .


திங்கள், 15 மே, 2023

கள்ளப்பிறர் > களப்பிரர்

 இன்று கள்ளப்பிறர் என்று நாம் கொடுத்துள்ள சொல்லையும்  களப்பிரர் என்ற சொல்லையும் ஒப்பிடுவதுடன்  தொடர்புடைய கருத்துகளில் சிந்தனையைச் செலுத்துவோம்.

களப்பிரர்  அல்லது  களப்பிறர் என்பது பொருளில் ஒன்றே  ஆகும் என்பதை உணர்ந்துகொள்ளவேண்டும்.  எப்படி என்பதைச் சிறிது விளக்குவோம்.

ஒரு பொருளினின்று இன்னொன்று பிரிகின்றது.  பிரிகின்றது என்றால் வேறாகிறது.  

பிற என்பதும் இதுவே ஆகும்.  ஒன்றிலிருந்து  ( எடுத்துக்காட்டு:  பெண் பூனையிலிருந்து )  குட்டி பிறக்கின்றது.  பிறக்கிறது என்றாலும்,   பிரிகிறது - பிறந்தது என்றாலும் கருத்து ஒன்றுதான்.  காலவேறுபாட்டை ( நிகழ் மற்றும் இறந்த காலங்களைக்) கருதவேண்டியதில்லை .

அது  பில் > பிரு ( பிர்)  >  பிரி.   வினைச்சொல்:  பிரிதல்.

பிரு என்பதிலிருந்து வரும் சொல்:  பிருட்டபாகம்,  பிரிவுடைய உடற்பாகம்.

பில் > பிறு >  பிற   -  பிறத்தல்.

மொழிமரபு போற்றும் நாம்,  பிறர் என்பதைத் தனிச்சொல்லாய் எழுதினாலும்,  களம் என்ற சொல்லுடன் வரும்போது அதைப் பிரர் என்றே எழுதுகிறோம்.  மொழிமரபின் காரணத்தினால் களப்பிறர் என்று எழுதுவதில்லையே தவிர,  புரிந்துகொள்ள அதைப் பிறர் என்று இணைத்துசொன்னாலும்  அதுவே ஆகும்.

களப்பிரர் என்ற சொல்லில் முன் உள்ள சொல் களம் என்பதாகும். கள் (என்ற விகுதி)  -  களம்   உண்மையில் ஒன்றுக்கு மேற்பட்டவர்கள் உள்ள இடம்.  அது போர்க்களமாக இருக்கலாம்,  வேலையிடமாக இருக்கலாம். பன்மை மாந்தர் கூடி நிற்றல் எனல் குறிப்பாம்.  வழக்கில் அது பலர் ஆழ்ந்து செயலாற்றும் இடம் என்றாகிறது.

கள் >  கள்ளர் -  பலராகச் சென்று பொருள் எடுத்துக்கொள்ளுதலையே அது குறித்தது. எ-டு:  ஆநிரை கொள்ளுதல்.  போரைத் தொடங்குமுன் செய்யும் முதற்செயல்.

கள் >  களம்.  பலர் செயலாற்றும் இடம்.

களம் > களவர் > கள்வர். இச்சொல்லில் மூலச்சொல்லே  (கள்)  வந்தது.

பிர் > பிரி> பிரிவு.

பிர் > பிரர்.  பொருள்:  படைப்பிரிவினர் என்பது ஆகும்.

பிரி > பிரி+ அர் > பிரர்,  இகரம் கெட்டு அர் விகுதி ஏற்றது என்று முடிக்கவேண்டும்.

இதை இன்னொரு வகையில் காட்டலாம்:

பிறர் -  மூலப் படையிலிருந்து பிரிந்து செயல்படுவோர்.  பிரர் என்பதுமது.

கள்ளப்பிறர் >  களப்பிறர் >  களப்பிரர்.

பொருளாலும் ஒன்றே என்பது உணர்த்தப்பட்டது.

கல் > கலத்தல் என்பதும் பன்மை காட்டும்.    கல் > கள் என்னும் வடிவங்களில்,  கலி> கலித்தல் என்பன பன்மையர் என்று  பொருள்படுதலும் கொள்க.   கலி -  கலியரசன். ( களப்பிர அரசன், களப்பரன் எனினுமாம்.)  எ-டு:  இதழ் -  அதழ்,  திரிபு,


அறிக மகிழ்க.

மெய்ப்பு:  பின்னர்.