வியாழன், 16 செப்டம்பர், 2021

Covid 16.09.21 Singapore

16.09.21 புள்ளிவிவரங்கள் இனிமேல் 17.09.2021ல்  வெளிவரும்.


[Sent by Gov[Gov.sg அனுப்பிய தகவல் - செப்டம்பர் 16]


செப்டம்பர் 15, நண்பகல் 12 மணி நிலவரப்படி, கொவிட்-19 நோய்தொற்றால் 822 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில், கடுமையாக நோய்வாய்ப்பட்ட 76 பேருக்குப் பிராணவாயு தேவைப்படுகிறது; 9 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் உள்ளனர்.


கடந்த 28 நாட்களில், கிருமித்தொற்றால் பாதிக்கப்பட்டோரில், தடுப்பூசியைப் போட்டுக்கொள்ளாத 5.7 விழுக்காட்டினர் கடுமையாக நோய்வாய்ப்பட்டனர் அல்லது உயிரிழந்தனர்; முழுமையாகத் தடுப்பூசியைப் போட்டுக்கொண்ட 1.1 விழுக்காட்டினர், அவ்வாறு பாதிக்கப்பட்டனர்.

 

செப்டம்பர் 14 நிலவரப்படி, நம் மக்கள்தொகையில், 81 விழுக்காட்டினர் முழுமையாகத் தடுப்பூசி போட்டுக்கொண்டுள்ளனர்*; 84 விழுக்காட்டினர் ஒரு தடுப்பூசியைப் போட்டுக்கொண்டுள்ளனர்.


செப்டம்பர் 15 நிலவரப்படி, சிங்கப்பூரில் புதிதாக 807 பேருக்குக் கிருமித்தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


go.gov.sg/moh150921sg – 14 Sep]


As of 13 Sep 2021, 12pm, 774 COVID-19 cases are warded in hospital. There are 57 cases of serious illness requiring oxygen supplementation and 8 in the ICU. 


Over the last 28 days, among the infected persons, the percentage of unvaccinated who became severely ill or died is 5.4%, while that for the fully vaccinated is 1.0%.


As of 12 Sep, 81% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least one dose. 


As of 13 Sep, there are 607 new cases in Singapore. 


go.gov.sg/moh130921



[Sent by Gov.sg – 13 Sep]


As of 12 Sep 2021, 12pm, 780 COVID-19 cases are warded in hospital. There are 54 cases of serious illness requiring oxygen supplementation and 7 in the ICU. 


Over the last 28 days, among the infected persons, the percentage of unvaccinated who became severely ill or died is 5.2%, while that for the fully vaccinated is 1.0%.


As of 11 Sep 2021, 81% of our population has completed their full regimen/received 2 doses of vaccines, and 84% has received at least one dose. 


As of 12 Sep, there are 520 new cases in Singapore. 


go.gov.sg/moh120921

புதன், 15 செப்டம்பர், 2021

Splitting of Etymology page.

வணக்கம் 

நமது சொல்லாய்வுப் பட்டியலை  இரண்டு பாகங்களாகப் பிரிக்கத் திட்டமிட்டு இருக்கின்றோம்.  இதற்குக் காரணம்,  இப்போது உள்ள பக்கம்  இயங்க மறுக்கிறது:  இதில் அதிகமான சொற்கள் பட்டியலில் இருப்பதால் புதிய பதிவுகளை  ஏற்றுக்கொள்ள இந்தப் பட்டியல் பக்கத்தினால் இயலவில்லை. பட்டியல் மிக்க நீட்டமாக உள்ளது.   Pages are not responsive.  

நேயர்கள் "அ" முதல் "த"  எழுத்துவரை முதல் பட்டியலிலும்,  ந-விலிருந்து  னகரம் வரை இரண்டாவது பட்டியலிலும் தேடவேண்டிவரும். இந்த வசதிக்குறைவுக்கு மன்னிக்கவும்.

Administrator

செவ்வாய், 14 செப்டம்பர், 2021

வினாயகற்குரிய தினத்தில் பிறந்தநாளும் வந்தது.

 


பிறந்தநாள் வாழ்த்து விநாயகர்க்கும் மற்றுமே

சிறந்தவா  சிரியர்  குமரன்பிள் ளைக்குமே

திருவார்க்குக் கிடைத்தது  மோதகம் வடைகளே

திறலார்க்குச் சர்க்கரைத்  திண்சீமை அப்பமே.

திருவார்  அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே.

பிள்ளையார் காக்கப் பிள்ளையவர் வாழ்கவே.


[ கோவிட் காரணமாக பிறந்த நாள் விழாவிற்கு ஒருவரே அழைக்கப்பட்டு,  அவரும் முதியவர் ஆனதால்,  பச்சைவெள்ளம்  பருகினார், சீனி அதிகம் அதனால் திண்ணப்பத்தைக் குமரன் பிள்ளைக்கே ஊட்டினார் .  கோவிட்காலம்  ஆனாலுமே சிறப்பாய்   முடிந்தது, ]

குறள்வெண்பா:

விழாவை ஒடுக்கியே கொண்டாடின் வாழ்வோம்

பலாப்போல் சுளைப்பயன் பெற்று.


பொருள் :  விநாயகற்கும் -- ( இது விநாயகனுக்கும் என்பதை

சுருக்கும் முறை.   0ன்+ கு  = ற்கு. ).  விநாயகர்க்கும் எனின் அது

பலர்பால் வடிவம் .

குமரன் பிள்ளை -  பிறந்த நாள் கொண்டாடியவர்.

திருவார் - திருவுடையவர்,  விநாயகர்.

திறலார் -  திறன்கள்  உடைய  பிறந்தநாள் கொண்டாடும் திரு குமரன்.

சர்க்கரைத் திண்சீமை அப்பம்:   "கேக்". இது படத்தில் உள்ளது.

திருவார் அருள்தரப் பொருள்தந்த பிள்ளையே -   இது  பூசை செய்யப் பொருள் தந்ததைத் குறிக்கிறது.  தந்தவர் பிறந்த நாள் கொண்டாடியவர்.

பச்சைவெள்ளம் -  வெறும் பச்சைத்தண்ணீர்.  தண்ணீரைப் பச்சைவெள்ளம் என்று வேடிக்கையாகக் குறிக்கின்றார் கவி. வழக்கில் வெள்ளம் என்பது நீர்ப்பெருக்கு.  ஆனால் தமிழினமொழி வழக்கு வேறுபடுகிறது.

குறள்வெண்பாவின் பொருள்:

பலாப்பழம் அப்பெயர் பெற்றது பல சுளைகள் உடைமையால், 

பல் ( பல) + ஆ = பலா.   ஆவென்பது இங்கு விகுதி. இன்னொரு காட்டு: 

தல்+ ஐ = தலை

தல் + அம் = தலம்

தல் + ஆ =  தலா.  

உல் + ஆ >  உலா.  உல் என்பது சுற்றுதல் குறிக்கும் சுட்டடிச் சொல்.

பலாப்போல் சுளைப்பயன் என்பது:  பலாப்பழம் சுளைகள் பாதுகாப்பாக  உள்ளே கட்டமைக்கப் பட்டுள்ளன.  ஒன்றுக்கு ஒன்று தடுப்புகள் உள்ளன.  வெளித்தோலும் பாதுகாப்புத் தருகிறது.    எனவே, இதன் அமைப்பு,  பழங்களுக்குப் பாதுகாப்பாகும். அதுவே பயன். கோவிட் காலத்தில் பலர் இருக்க, பலாவுக்குப் போல் பாதுகாப்பு வேண்டும்.


அறிக மகிழ்க

மீள்பார்வை செய்யப்படும்.