திங்கள், 7 செப்டம்பர், 2020

ஆக்கிரமிப்பு - கிரமித்தல் முதலிய

 இன்று ஆக்கிரமிப்பு என்பதை அறிவோம் - சுருக்கமாக.

கிரமித்தல் என்பது ஒர் பிறழ்பிரிப்புச் சொல் என்பதை யாம்

முன்னர் வெளியிட்டுள்ளேம்.

இதனைப் பழைய இடுகைகளிற் காண்க.

ஆக்கு + இரு + அம் + இ + பு =  ஆக்கிரமிப்பு ஆகும்.

தமக்கு ஆக்கம் நேருமாறு ஓரிடத்தில் இருந்துகொண்டு

நிலைமையை அமைத்துக்கொளுதலே ஆக்கிரமிப்பு.

ஆக்கு  இரு :  ஆக்கம் இருக்குமாறு

அம் -  அமைந்து

இ - இது வினையாக்க விகுதி. 

உது -  முன்னது;  + இ ( வினையாக்க விகுதி).

உது + இ = உதி > உதித்தல். முன் தோன்றுதல். இஃது

எடுத்துக்காட்டு.

இதில் உள்ளது எளிமையான கருத்து.

வலிந்துகவர்வு என்றும் இதைக் கூறலாம். வலிமை

காட்டுதற்கு நிலம்/பொருள் இவற்றுக்கு உரியோன் 

இடத்தில் இல்லாதவிடத்தும் ஆக்கிரமிப்பு

நிகழலாம். உரியோன் பின்பு வந்து அறியினும்

வலிந்துபற்றுதலின் பாற் படுவதே.


மெய்ப்பு பின்பு



சனி, 5 செப்டம்பர், 2020

ஆரோகணம் ( இசைத்துறைச் சொல்)

ஆரோகணம் என்ற இசைத்துறைச் சொல்லை இன்று சுருக்கமாக ஆய்ந்துகொள்வோம்.

[மிக்க நீண்ட எழுத்துப் படைப்புகளை இந்த முடிநுண்மி நோய்க்காலத்தில் வாசிப்பது யாருக்கும் சற்று, துன்பம் தருவதாக அமைந்துவிடும். மனிதருக்குப் பல கவலைகள். அவற்றை யெல்லாம் ஒரேயடியாக மாற்றி மேல்வருதல் யார்க்கும் எளிதன்று. ஒவ்வொரு நாளும் ஒவ்வொன்றாகத் தீர்த்துக்கொள்ளலாம். முடியக் கூடிய  முயற்சிகளை நாம் மேற்கொள்ளுதல் தவறன்று. காலம் கனிந்துவருங்கால் சிரம்ம தரும் தடைகளையும் நாம் நீக்கிக்கொள்ளலாம். இதுவும் ஒரு நல்ல வழியாகும்.

உருவத்தால் நீண்ட உயர்மரங்க ளெல்லாம்

பருவத்தால் அன்றிப் பழா

என்றார் நம் ஒளவைப் பாட்டி. ]

ஆர்தல் என்றால் நிறைதல், நிறைவு என்றும் பொருள்,

பொருந்துதல் என்பதும் பொருளாகும்.

பிற அர்த்தங்களும் உள்ளன. அருத்தம் - அர்த்தம் என்பது சொல்லுக்கு ஊட்டப்பெறும் பொருள். அருத்துதல் எனில் ஊட்டுதல், பிறவினைச் சொல். அர்

என்பது ஒலி என்றும் பொருள்படும். அர்த்தம் என்பது

ஒலி எழுப்புதலால் அறியப்படும் பொருள் என்றும்

விளக்கலாம். அரற்றுதல் ( அர் அடிச்சொல்) - ஒலி

செய்தல். அர் > அரவம் என்பது ஒலி. அரக்கல் - ஒலி எழுமாறு தேய்த்தல், பின் அது தேய்த்தல் என்று

பொருள் குறுகியது. அரட்டுதல் - ஒலி எழுப்பிப் பயமுறுத்தல். அராகம் என்பதும் ஒலி குறித்ததே. கலிப்பாவின் உறுப்புகளில் ஒன்று.


அர் - அரவம் - ஆரவம் இவை ஒலியே. இங்கு

அர் எனற்பாலது ஆர் என்று திரிந்ததும் அறிக. ஆரவாரம் என்பது ஆர் இருமுறை வந்த சொல்.

ஆர் + ஆர் + அம் > ஆர ஆர அம் > ஆரவாரம். இதில் வகரம் உடம்படுமெய். இது ஒலிக்கிளர்ச்சி குறிக்கும் சொல்.இடை இடை வந்த இரு அகரங்களும் அங்கு என்று சுட்டாக வந்ததுடன் உடம்படுத்தும் வேலையையும் செய்து சொல்லாக்கத்துக்கு உதவியது.


ஆரோகணம் என்ற சொல்லில் ஆர் என்பது ஒலியையும் குறிக்க, நிறைவு பொருத்தம் என்பவும் குறித்தது. ஓ என்பது ஓங்குதல் எழுதல் என்பது குறித்தது. ஓங்கு என்பதில் ஓ என்பது பகுதி. கு என்பது வினையாக்க விகுதி. +கு = ஓங்கு ஆனது. கணம் என்பது இடம். கண் = இடம். இதன் கண், அதன் கண் என்ற வழக்குகள் அறிக. மனத்துக்கண் என்றால் மனத்தில். மனத்துக்கண் மாசிலன் ஆதல் என்ற தொடர் நோக்குக. ஓ என்பது ஓசையும் ஆகும்.

ஆரோகணம் என்றால் பொருந்துமாறும் நிறைவாகும் படியும் உரிய இடத்து ஓசை எழுதல் என்று முடிக்க.

ஆர் = ஓசை; நிறைவு.

= ஓசை, ஓங்குதல் (மேலெழல்).

கண் - இடம்.

அம் - அமைதல் குறிக்கும் விகுதி.


இவ்வாறு சொல்லில் உள்ளுறுப்புகளைப் பொருத்தி

அமைத்த நம் முன்னோர் தீரபுத்தி உடையோர் ஆவர்.

தீரம் என்பது தீர்த்து நிறுத்தும் ஆற்றல். புத்தி என்பது

புதிய சிந்தனையில் உண்டான அறிவு ஆகும். புது + = புத்தி,

 

குறிப்பு:


அறுத்தம் > அர்த்தம் - சொற்பொருளை வரையறுத்தல்

எனினும் ஆகும். எவ்வாறு நோக்கினும் இச்சொல்

தமிழே ஆம்.


 

 

 

 

 

Edits paragraphing etc lost in this post. This will

be redone later.  Proof reading will be done later.

 

 


செவ்வாய், 1 செப்டம்பர், 2020

படித்தல், வாசித்தல், படி - பஜி வினைகள்

 படித்தல் என்ற சொல், இக்காலத்தில் இராகம் 

ஏதுமில்லாமல் வாசிப்பதையே குறிக்கிறது.  ஆனால்

 பதினெட்டு - பத்தொன்பதாம் நூற்றாண்டுகளில்

 வாழ்ந்த மக்களுக்கு இது இருபொருள் தரும்

சொல்லாய் இருந்தது என்பதை நாம் மறந்துவிட

லாகாது. எந்த மொழியிலும் ஒரு சொல்லுக்கு 

ஒரு பொருளே இருந்தது என்று நாம் நம்புவோ

மானால், நமக்கு மொழியறிவு குறைவென்று நாமே 

முடிவுகட்டிக்கொள்ளவேண்டியதுதான். ஒரு 

காலத்தில் ஒரு பொருளிருந்திருக்கலாம்; 

 இன்னொரு காலத்தில் இன்னொரு பொருள் 

இருந்திருக்கலாம்;  இருபொருளும் ஒப்ப 

வழங்கினாலும் அவற்றுள் ஒன்று முன்னணி 

பெற்றுமிருந்திருக்கக் கூடும்.

எனவே சொல்லும் பொருளும் அவ்வளவு 

எளிதானவை என்று கூறிவிடமுடியாது.


எழுத்துக்களின்மேல் கண் அல்லது கண்ணின்

பார்வை படுகின்றது.  தொடர்ந்து பார்வை பட்டு 

நாம் வாசிக்கவே பார்வையானது படிகின்றது;  

ஆக, இவ்வாறு படிதலையே படிக்கின்றோம் என்று 

நாம் சொல்கின்றோம் என்பதை நாம் உணர

வேண்டும்.  ஆகவே  படுதல் > படிதல் > படித்தல்

என்பவற்றை நாம் இதன்மூலம் நல்லபடியாக 

உணர்ந்து கொள்கின்றோம்.


படிக்கும்போது வெளியில் ஒலி எழுப்பாமல்

 படிப்பது ஒருவகை; இதை மனத்துக்குள்ளே 

வாசித்தல் என்பர். இன்னொரு வகையான 

படித்தலில் ஒலிசெய்து பிறர்கேட்கும் வண்ணம் 

படிப்போம். இதைத்தான் முன்னாட்களில் 

வாசித்தல் என்று சொன்னார்கள். வாசித்தலாவது

 வாயிலிருந்து ஒலியெழப் படித்தல்.

வாய் என்பதிலிருந்து வாயித்தனர்: 

வாய் > வாயி> வாயித்தல்.  இது பின் திரிந்து

 வாசித்தல் ஆனது. ( இது  யகர சகரத் திரிபு வகை) 

 வாசித்தான் என்று தமிழன் சொல்வதை 

வாயிச்சு என்று மலையாளி சொல்வதிலிருந்து 

இதை அறியலாம். எனவே வாசித்தலில் வாயின்

பங்கு உள்ளது. இந்தச் சொல் அமைந்த காலத்தில்

 இந்த நுண்பொருள் நல்லபடி வெளிப்பட்டுச் 

சொல் வழங்கிற்று என்றாலும் நாளடைவில் 

அதிலும் மனத்துக்குள் வாசித்துக்கொள்ளுதல் 

என்ற பிரிவு எழுந்தது.  இவ்வாறு பொருள் விரி

கொள்ளுதல் மொழிக்குச் சொற்களில்  இயல்பே  ஆகும்.


சோல்ஜர் என்ற ஆங்கிலச்சொல் எழுத்தில் 

சோல்டர் என்றுதான் எழுதப்பெறும்.  எழுத்தின்படி

வாசித்தல் என்பது ஆங்கில மொழியில் இல்லை.

(குறைவு) . சிரி என்று பொருள்படும் லாஃப் என்ற 

சொல்லை எழுத்தின்படி எப்படி வாசிப்பது?  

முடியாது.  ஆங்கிலமொழிக்கு வேறுமொழியி

லிருந்து வந்த சொல்லை எழுத்துடன் கடன்பெற்று

வேற்றுமொழியில் உச்சரிப்பதுபோலவே 

ஆங்கிலத்திலும் ஒலிக்குமுறை(யும்) இருப்பதால், 

சோல்டியர் என்று எழுதிச் சோல்ஜர் என்றுதான் 

வாசிக்கவேண்டும்.


இதிலிருந்து  ட-வுக்கும் ஜ-வுக்கும் உள்ள ஓர்

ஒலியுறவை நாம் உணர்ந்துகொள்ளவேண்டும்.

ஹாப்டாய் என்று எழுதிக்கொண்டு ஹாப்ஜாய்

என்று வாசிப்பதையும் காண்க.  வேறு எடுத்துக்

காட்டுகள் பல இருந்தாலும் இங்குக் கூறியன 

உணர்ந்தாலே படி என்ற தமிழ்ச்சொல்

பஜி என்று அயலில் வருமாறு நீங்கள் உணர

நேரமாகாது. ஆமாறு உணர்ந்து,   " முருகனைப்

படிமனமே,  திருமால் மருகனைப் படிமனமே " 

என்று பாடி,  அதை அப்படியே "முருகனைப் பஜி 

மனமே, திருமால் மருகனைப் பஜி மனமே" என்று

மாற்றிப் பாடி ஆனந்தம் அடையுங்கள்.

படிதான் பஜியாயிற்று.  பஜி + அன் + ஐ = பஜனை.

படி அன் > படன் > பஜன்,  ட-ஜ திரிபு பன்மொழிக்

காட்சியுடையது.


இதைச் சில ஆண்டுகளின் முன்னமே 

சொல்லிய -எழுதிய நினைவு உண்டெனினும், 

யாம் தேடிப்பார்க்க வில்லை. இங்கு பழைய 

இடுகைகளில் நீங்கள் தேடிப் பார்த்தால் 

ஒருவேளை கிட்டுதல் கூடும்.


இரு நூற்றாண்டுகளின் முன் இருந்த தமிழர், 

பாட்டுப் படி என்றும் சொல்வர். இன்று பாட்டுப்

பாடு என்று சொல்கிறோம். படி என்ற வினையின் 

பொருள் சற்று மாறிவரல் உணரலாம். " உன்னை

 நினைச்சேன், பாட்டுப் படிச்சேன்" என்றுவரும் 

ஒரு பாடல்,  முன்வழக்கினை கொணர்ந்து மீட்டு

 மூட்டுகின்றது. ஆனால் படி , பாடு

என்பன ஒரு மூலத்தின் விளைவுகள்தாம். 

 பழங்காலத்தினர் உரைநடையையும் " இராகம்

போட்டுப் பாடியவர்கள். உரைநடை ஏதேனும் 

பாடலுக்குப் பொருள்கூறுகையில் மட்டுமே 

கைக்கொள்ளப்பட்டது. மற்றபடி தமிழென்றால்

எங்கும் எதிலும் பாட்டுத்தான்.



    பாகத்தி னாற்கவிதை பாடிப் படிக்கவோ
            பத்திநெறி யில்லைவேத
    பாராய ணப்பனுவல் மூவர்செய் பனுவலது
            பகரவோ இசையுமில்லை
    தாயுமான  அடிகள்.
அறிக மகிழ்க


மெய்ப்பு  - பின்பு