ஞாயிறு, 3 மே, 2020

மகுடமுகி என்ற சொல்லைப் பயன்படுத்தி....

சென்ற இடுகையில்


கொரொனா துயரில் தீவிரவாதிகள் தாக்குதல் பற்றி (சொடுக்குக)
https://sivamaalaa.blogspot.com/2020/05/blog-post_6.html

 கொரனா என்ற அயற்சொல்லைப் பயன்படுத்தி வெண்பா புனைந்திருந்தோம். கொரனா என்பதற்குப் பதிலாக " மகுடமுகி" என்னும் மொழிபெயர்ப்புச் சொல்லை உள்ளுய்த்து அதே வெண்பாவைப் புனைந்து பார்க்கிறோம்.

மகுடமுகித் தொற்று மடைதிறந்த தெங்கும்
பகலிர வென்று பகவில் -----  தகவிலரால்
இத்தகு சண்டைகள் ஏற்படல் வெட்கமே
எத்துணைக் காலமிது போம்?

 பகலிர வென்று பகவில் என்று வரும் வரியில் பகவில் என்பது
கடின நடையாகத் தோன்றலாம். அது கடினமென்பதற்காக நீக்குதல்
உடன்பாடில்லாதது ஆகும்.  எனினும் இவ்வாறு எளிதாக்கலாம்:

"பகலிர வென்றுபா  ராத ----- தகவிலரால்"

இவ்வாறும் வெண்பா சிதைவுறாது வரும். 

அரும்பொருள்:

மகுடமுகி -  கொரனா தொற்றுநுண்மி  (வைரஸ்)
பகவில் ( பகவு இல் ) - பகுத்து உணராத.
தகவிலரால் -  (முன்னையப் பாடலில் நரகரால் என்ற
சொல் பயன்பாடு கண்டது.  தகவிலர் - நற்குணமில்லாரால்).

 

கொரனாத் துயரிலும் தீவிரவாதிகள் சண்டை!

ஊர்மக்களைப் பிணைக்கைதிகள் ஆக்கியது:

ஓய்வதும் இல்லையே தீவிர வாதிகளே
நாய்களே போலும் நடமாடித்----தாய்பிள்ளை
அப்பன் அணுக்கனினி  எப்பா லவரையும்
ஒப்பப் பிடித்திருத்து வார்.


அரும்பதவுரை:
ஓய்வதும் - நிறுத்துவதும்;  அணுக்கன் - உறவினன்;
எப்பாலவர் = ஆடவர் பெண்டிர் இருபாலாரையும்;
ஒப்ப - வேறுபாடின்றி;   பிடித்து இருத்துவார் - வன்மை
காட்டிப் பிணைக்கைதிகள் ஆக்கிக்கொள்வர்.


படையினர் காவலதிகாரி தியாகம்:

படைஞரும் காவலரும் பாவமுயிர் தந்து
நடைபெற்ற போரில்தம் நாட்டாரைக் காத்தே
உடைக்கும் உயரணிக்கும் ஓரேற்றம் உய்த்தார்
கிடைப்பில் தியாகம் இது.


அ-ரை
படைஞரும்  - இராணுவத்தினரும்;  காவலரும் - காவல்
துறையினரும்;  பாவம் - இரங்கத்தக்கவர்கள்;  உயிர்தந்து -
தியாகங்கள் செய்து;  உடைக்கும் - தாம் அணிந்த 
சீருடைக்கும்;  உயர் அணிக்கும் - தம் போற்றலுக்குரிய 
படையணிக்கும்;  ஓர் ஏற்றம் உய்த்தார் -  சிறப்பைத் தேடித் 
தந்தனர்;   கிடைப்பு இல் -  அரிய;  தியாகம் - ஈகம்.



தொற்றுநோய்க் காலத்திலும் சண்டையா ?

கொரனாநோய்த்  தொற்றிது குன்றாப்  பரவல்
இரவென்றும் நாளென்றும் பாரா  -----  நரகரால்
இத்தகு சண்டைகள் ஏற்படலும் வெட்கமே
எத்துணைக் காலமிது  போம்.


அ-ரை:
குன்றாப் பரவல் -  குறையாமல் பரவும் நிலை(யில்);
நாள் - பகல்;   பாரா - பாராத;   நரகரால் - தீயோரால்;
வெட்கமே -  நாணத்துக்குரியது;  போம் - நடைபெறும்?


கொரனாவுக்குத் தமிழ்ப்பெயர் " மகுடமுகி".


மடையர்கள் தொகைக்கென்ன பஞ்சம் ----- அட
மாறாத இந்நிலைமை காணாத கண்ணும்,
படைதரும் வீர்ர்தமைத் தாக்கும்----- ஒரு
பாழான தீவிர வாதத்தைக் காணின்,
விடைகண்டு வெதும்புமே நெஞ்சம் -----  தம்பி
வேறென்ன ஊறாவ தூருக்குள் என்றும்.




படையினர் ஐவர் மரணம்:  செய்தி (சொடுக்குக.)

https://www.livemint.com/news/india/army-colonel-major-among-5-others-killed-in-j-k-s-handwara-terrorist-attack-11588477923676.html 

Increase Internal Storage Of Any Android Phone | Use Sd Card as Internal...