திங்கள், 26 நவம்பர், 2018

Malaysia Sri Mariamman Temple Riots: மாரியம்மன் ஆலயம் கலகம்

இந்தக் கலகத்தில் 18 வாகனங்கள் எரியூட்டப்பட்டன. கலகமும் நடைபெற்றுள்ளது.  இங்கு இதனை  வாசித்து அறியவும்:

http://theindependent.sg/18-vehicles-set-on-fire-in-malaysias-seafield-sri-mariamman-temple-riot/


http://theindependent.sg/18-vehicles-set-on-fire-in-malaysias-seafield-sri-mariamman-temple-riot/

அக்குள் ( கமுக்கட்டு ) அமைப்புச் சொல்.

அருகிலும் உங்கள் உடலின் உள்பக்கமாகவும்  உள்ள ஓரிடத்திற்கு ஒரு பெயரை அமைக்கவேண்டின் அதை எப்படி அமைப்பது?

கமுக்கட்டு என்பது மார்பு என்னும் முக்கியப் பகுதிக்கு அருகிலே இருக்கிறது.  எனவே அருகு என்ற  சொல்லை இட்டுக்கொள்ளவேண்டும்.

அருகு.

தோளின் உள்பக்கத்தைக் குறிக்கவருகிறோம்.  ஆகவே உள் என்பதையும் இடவேண்டும்.

அருகு + உள்.

இரண்டையும் சேர்த்தால்  " அருக்குள்" என்று வரக்கூடும்.

இங்கு அருகுள் என்று வராமல் ககரம் இரட்டித்தது.  இதுபோன்று இரட்டித்த வேறுசொற்களைப் பார்ப்போம்:

புகு + அகம் =  புக்ககம். ( மணமாகிப் பெண் புகுந்தவீடு.)  இது நீங்கள் அறிந்ததுதான்.

இதுபோலவே  அருகு என்பது அருக்கு என்று இரட்டித்தது.

எனவே அருகிலும் உள்பக்கமாகவும் இருப்பது அருக்குள்.

அருக்குள் என்பதில் ஓர் இடைக்குறை ஏற்படுகிறது.

அருக்குள் >   அக்குள்.

இதற்கு உதாரணங்கள் வேண்டின்:

சறுக்கரம் >  சக்கரம்.
வருக்கரம் > வக்கரம் > வக்கிரம்.
தடுக்கை > தக்கை.  ( தடுத்துநிற்கும் செருகுபொருள் ).
பகு + குடுக்கை = பக்குக்குடுக்கை > பக்குடுக்கை.அல்லது:  பகுகுடுக்கை(வினைத்தொகை ) > பக்குடுக்கை.

இப்போது ஒரு புதிய சொல் மொழிக்குக் கிட்டிற்று.  அதுதான் அருகு உள் என்பது அக்குள் என்றாயது ஆம்.

ஞாயிறு, 25 நவம்பர், 2018

அத்தியாயம்

முன் அத்தியாயம் என்ற சொல்லினமைப்பை விளக்கியிருந்தேம்.  கள்ளமென்பொருள் அதை நீக்கிவிட்டது. 

இப்போது அதை மறுபார்வை இடுவோம்.

ஓர் அத்தியாயம் முடிந்தால் இன்னொன்று தொடங்குகிறது.  இருப்பினும் ஒரு நூலில் அத்தியாயங்கள் இயைந்தே இருக்கின்றன.

அற்று =  முடிந்து;

இயை = இணைவது.

அம் =  விகுதி.  இவ்விகுதி வேறுமொழிகளிலும் பரவி வாழ்கிறது.

அற்றியையம்

=  அத்தியாயம்.

அற்று என்பது அத்து என்று வருவது தமிழ்ப் பேச்சில்.

எ-டு:  சிற்றம்பலம் >  சித்தம்பரம் > சிதம்பரம்.

திரிபுகள் :   ற்ற > த்த

ல > ர.   இது வழக்கமான  திரிபு.

இத்திரிபுகள் பல சொற்களில் வந்துள்ளன.