சனி, 3 நவம்பர், 2018

காசு என்ற சொல்.

சென்ற இடுகையில் காத்தல் (கா) என்பதனடிப் பிறந்த  சில சொற்களைக் கவனித்தோம்.

காசு என்பது ஒரு விலைப்பொருளுக்கு ஒத்தீடாக வழங்குவது ஆகும். ஒரு மாட்டுக்கு ஐயாயிரம் உரூபாய் என்றால் அதுவும் நல்ல விலை என்று மனநிறைவு கொண்டு மாட்டைக் கொடுத்துவிட்டுப் பணத்தைக் கொள்வோம்.

ஐயாயிரம் வந்தவுடன்,  மாடு அதுவேயாக மாற்றப்பட்டுள்ளதால் மாட்டைக் காத்தது போலவே இந்த ஐயாயிரத்தையும் காத்து வைப்பில் இருத்துவோம்.

காத்து வைப்பதால் கா என்ற அடியினின்றே காசு என்னும் சொல்லும் உருவெடுத்தது.  சு என்பது விகுதி அல்லது இறுதிநிலை ஆகும்.

சு விகுதி பெற்ற சொல்:

ஆ -  ஆதல்.

ஆ >  ஆசு.  ( மனிதற்குப் பலவும் ஆவது பற்றுக்கோட்டினால்தான்,  ஆதலின் ஆ என்ற வினையடிச் சொல் அமைந்தது.)

தா > தாசு.  ( உழைப்பினைத் தந்து ஊதியம் பெறுபவர். அல்லது சோறு கஞ்சி முதலிய பெறுபவர் ).   இது அயலிலும் பரவி வேற்றுமொழியினது என்று எண்ணப்பட்ட சொல்).

பாவி > பவிசு    தன்னை  நலம் உள்ளவள்போல் பாவித்து நடந்துகொள்ளுதல்.
இது முதனிலை குறுகி அமைந்த தொழிற்பெயர்.  இப்படிக் குறுகி அமைந்த இன்னொரு சொல்:  தோண்டு > தொண்டை. பிற இடுகைகளில் காண்க.

இவ்வறு காசு என்பது காத்துவைக்கப்படுவது என்னும் பொருளில் அமைந்த சொல்லே.கா

pavisu from paavi

mUsu

காமியம் காமுகன் காமித்தல்

"கலகம் மூலம் காமினி மூலம் "

என் கின்றது ஒரு மலையாளச் செய்யுள். கலகங்கள் எல்லாம் காதலி மனைவி போன்றவர்களால்தாம் வருமாம்.  கணவர்களால் வரும் கலகங்கள் பற்றி மனைவிமார் யாதும்  செய்யுள் இயற்றவில்லை போலும்.

காம் காதல் என்ற சொற்கள் முன்னர் எம்மால் விளக்கப்பட்டன.

மனிதன் குகைகளில் வாழ்ந்த காலங்களிலும் காடுகளில் திரிந்த காலங்களிலும் அவன் வேட்டையில் வென்றுவந்த ஊனையும் பழங்களையும் காத்துக்கொள்ள வேண்டியிருந்தது.  கடினப்பட்டுக் கொணர்ந்த இவைதம்மைப் பிறர் முயற்சி யாதுமின்றி எடுத்துச் செல்வதை விரும்பவில்லை. பொருட்களைக் காத்தல் தொடங்கவே  தனியுடைமை தொடங்கிற்று.  அவன் கொணர்ந்தவற்றை அவனும் அவனுக்கு வேண்டியவர்களும் உண்டனர். மிச்சம் மீதாரியைப் பக்கலில் வாழ்ந்தோர்க்குக் கொடுத்திருப்பான். வைத்திருக்க இயலாதவை பல. கெட்டழிந்திடுவன ஆம். இப்படிப் பொருட்பகிர்வு அடிகோலப்பட்டது.

வைத்துப் போற்றத்தக்க வைத்து > வத்து ஆனது.  பின் அது வஸ்து என்று உருமாறி வழங்கியது. பொருட்களை மட்டுமின்றித்  தம் பெண்டிரையும் காத்தனன். அடுத்தவன் அதே பெண்ணை விரும்பிய காலை அவனும் அவளுக்குக் காவலை வழங்கினான்.  காதல் என்ற சொல் அப்படிக் காப்பதையே குறித்தது.  கா என்ற அடிச்சொல்லில் அமைந்த காம், காமம் (காம்+அம்) என்பவும் அதே காத்தலடியாக அமைந்த சொற்களே. தம் குகையினரோ வீட்டினரோ வழங்கிய காத்தல் ஆகிய காவல் விரிவுற்றுப் பிறனும் விரும்பி வந்து காக்கத் தொடங்கிய ஞான்று  அதுவே பிற ஏம் >  பிறஏமை > பிறேமை > பிரேமை ஆனது. பிற என்பது அடுத்துவந்தவனையும் ஏம் என்பது காவலையும் குறித்தது. இவன் தான் இன்று காதலன் கணவன் என்று அறியப்படுகின்றான்.   அகர வருக்கச் சொற்கள் ( அதாவது அ, ஆ, இ , ஈ என்று தொடர்வனவாகிய எழுத்துகள் அல்லது ஒலிகளை யுடைய சொற்கள் ) பின்னர் சகர வருக்கமாகின என்பதைப் பலமுறை கூறியும் கூவியும் உள்ளோம் என்பதை மறவாதீர்.  அதன்படியே  ஏ என்று  தொடங்கியவை சே என்று திரியும். திரியவே,  ஏமம் என்ற காவற் பொருட் சொல்  சேமம் என்று திரியலாயிற்று. இதுவே பிற்காலத்து  க்ஷேம என்று மெருகு பூசிக்கொண்டதென்பதை அறிவீர்.

காமினி என்றது காம் என்ற அடிச்சொல்லிலிருந்து தோன்றியது.  காம்+இன்+இ என்பதே இதிற் புனைவு.  ஒரு பொருள்மேல் ஆசை யுறுதல்  காமியம் எனப்படும்.

நமது நூல்கள் :

யாமெனும் அகங்காரம்
காமியம் வெல்க

என்று பறைசாற்றும்.  காமம் இதில் அமையுமாயின் இதுவே காமியம்.

காம்:  விழைதல்.  (  அடி )
இ   - இங்கு. சுட்டு இடைநிலை.
அம் - அமைதல், அல்லது இறுதிநிலை (விகுதி).

ஒன்றை நோக்கி மனம் அசையுறுவதே  அசை > ஆசை என்று வருவது.  ஆசை என்பது மன அசைவு என்று பொருள்படும்.

காமுகன் என்போன் காமத்தை உகந்து நிற்போன்.  உகத்தல் விரும்புதல்.
காம் + உக + அன் என்று புணர்க்க.    காமத்தையே முகமாய்க் கொண்டவன் என்று அணியியல் முறையிலும் சொல்ல இப்பதம் வழிவைத்துள்ளது.

நம் சைவ நூல்கள் காமியத்தைக் குற்றமாகக் கூறும். யாமெனலையும் காமியமும் வெல்வீர்.  வெல்லான் கீழ்த்தரத்து உள்ளான்.

காம் + ஈ என்பது காமீ என்று வந்து காமம் ஈதல் என்று பொருடரும்,  ஆயின் அது பிறப்புக்கணிப்புகளில் ஏழாமிடம் குறிக்கும்.

காம் > காமி > காமித்தல் என்பது வினைச்சொல். விரும்புதல்.

பின் சந்திப்போம். அளவளாவுவோம்.

திருத்தம் பின்.



வெள்ளி, 2 நவம்பர், 2018

ரொக்கம்

இன்று "ரொக்கம்"  சொல் எங்ஙனம் அமைந்தது என்பதைப் பார்ப்போம்.

இச்சொல் உரு + ஒக்கு + அம் என்ற மூன்று துண்டுகளில் சேர்க்கை ஆகும்.

இதில் உரு என்ற சொல் மதிப்பின் உருவை முன்வைக்கிறது.  இது வெளி உருவோ வெற்றுருவோ அன்று.  இதை இப்போது விரித்து அறிந்துகொள்வோம்.

ஒரு மாணவன்  தன் பாடங்களைப் படிக்காமல் ஆடிக்கொண்டும் அலைந்துகொண்டு மிருக்கின்றான் என்று வைத்துக்கொள்வோம்.  ஊரார் இவன் உருப்பட மாட்டான்  என்று குறிப்பிடுவார்கள்.  முன்னரே அவர் நல்ல உருவத்துடன் தானே இருக்கிறான்,  இனி என்ன உருப்படுவது.    உருப்படுவதற்கு ஒன்றுமில்லை.  உலகில் உள்ள அனைத்துக் காணத்தக்க பொருள்களும் ஒவ்வொன்றும்  ஓர் உருவில்தான் உள்ளன. புதிதான ஓர் உரு ஏற்படப்போவதில்லை.  அப்படியானால் உருப்படுதல் அல்லது உருவு கொள்ளுதல் என்பதன் பொருள் என்ன?

பண்டமாற்று விற்பனை பொருள்தரவு  வரவு முதலியவற்றில் பொருள் ஒவ்வொன்றுக்கும் ஓர் உரு இருக்கின்றது.  இவ்வுரு கண்காணாத உரு ஆகும்.   இந்த ஆட்டுக்கு ஐம்பது வெள்ளி விலை என்றால் அது ஓர் உரு,  சடப்பொருள் கொள்ளும் உருவன்று;  மதிப்புரு ஆகும்.   ஐம்பது வெள்ளி என்பது ஆட்டுக்கு ஈடாக வைக்கப்படுகின்றது.  அத்தகைய மதிப்பீட்டினால்தான் வணிகம் நடைபெறுகின்றது.  ஆட்டுக்கு உரு உள்ளது;  மதிப்புக்கு ஓர் உருத்தந்து அதனை ஆட்டுக்கு ஈடாக வைத்து  விற்பனை அல்லது வாங்குதல் செய்ய வேண்டும்.   ரொக்கம் என்ற சொல்லில் முன்னிற்கும் நிலைமொழி அல்லது நிலைப்பகவு:  மதிப்புருவே  என்று உணர்தல் வேண்டும்.

மனிதர்களுகும் ஓர் உரு உள்ளது.  இதை இமேஜ் என்ற ஆங்கிலச் சொல்லும் ஒருவாறு உணர்த்தவல்லது.   உண்மையில் விற்பனைப் பொருள்களில் அல்லது பண்டங்களில்இது  மதிப்பு உரு  ஆகும்.

உரு ஒக்க வேண்டும் அல்லது பண்டமாற்றுக்கு மதிப்பு ஒப்புமை வேண்டும். இதையே விலை என்று சொல்கின்றோம்.  ஒக்குதலாவது ஒத்திருத்தல்.  ஊரில் எங்கு பார்த்தாலும் ஆட்டுக்குட்டிகளாக இருந்தால் ஆட்டு விலை வீழ்ச்சி அடைந்துவிடும்.  எவ்வளவுக்கு  எவ்வளவு ஆடு தேடப்படும் பொருளாகவும் எளிதில் கிட்டாத பொருளாகவும் உள்ளதோ, அவ்வளவுக்கு அவ்வளவு அது  விலையாக்கம் பெறும். அப்போது பெறும் பணமே ரொக்கம் ஆகும்.  இது பின் பணத்தாள்களின் சேர்க்கை அல்லது கட்டினைக் குறித்தது இயற்கையான அடைவே ஆகும்.

உரு ஒக்கு அம் என்பது பொருள்மதிப்பு ஒக்கும் அமைப்பே ஆகும்.  விலை ஐம்பது உரூபாயாக இருந்தால் உரொக்கம் என்பது அதைக் குறித்துப் பணத்தின் கட்டினைக் குறிக்க வழங்கிற்று.

உரு ஒக்கு என்பன சொல்பகவுகள் அல்லது துண்டுகள். அம் என்பது ஈண்டு விகுதி எனக் கொள்க.

நாளடைவில் இச்சொல் தன் தலையிழந்து,  அரங்க சாமி ரங்க சாமி ஆனது போல  உரொக்கத்திலிருந்து ரொக்கமாயிற்று.
 ஆகவே இங்கு உரு என்பது மனக்காட்சி  ஆனது. மதிப்பீடு என்றும் கொள்க.


இவ்விடுகைக்கான முற்பார்வை  ( ப்ரிவியூ)  கிட்டவில்லை.
திருத்தம் பின்,