வியாழன், 29 மார்ச், 2018

மோடியும் அமித்ஷாவும் கர்நாடகாவில்....



இவ்விரண்டு இன்னிசை வெண்பாக்களும் கர்நாடகா மாநிலத் தேர்தல்கள் பற்றியவை.  மோடியாரின் வாய்ப்புகள் மாடிபோல் உயர்ந்து நிற்பதாகச் சில ஆய்வுகள் கூறுகின்றன.  அவை மோடி மந்திரம் (மேஜிக்) என்`கின்றன. தேர்தல் முடிவுகட்கு ஆர்வமுடன் காத்திருப்போம்.  நல்ல முடிவாகட்டும் .

இன்னிசை வெண்பாக்கள்.


மோடி அமிட்சா மொழிமந்  திரங்களே
கூடி உவப்புடனே கோடியாய் வாக்குகள்
வந்து குவிந்திடுமோ வைகுவம் ஆர்வமுடன்
செந்தண் முடிவாக்கும் சீர். 1


அரசகுல ஆள்வொழிந் தாலும் அகலா
முரசுகளை நன்றாய் முழக்கிவரும் கட்சிகள்
தந்தைதாய் பாட்டன் தருகோலால் ஆங்கமைதல்
நந்தா நடப்பாமோ நாடு.
      2

அருஞ்சொற்பொருள்:

பாட்டு 1 

மொழி = பேசுகின்ற; பரப்புரை செய்கின்ற. 

மந்திரம் -  மக்களிடம் ஏற்பட்டுள்ள ஒருவித மாயமயக்கு.

கூடி -   ஒன்றாகி.
இருதலைவர்களின் இணைதிறனைக் குறிக்கிறது.
உவப்பு -  மகிழ்ச்சி.
வைகுவம் -  காத்திருப்போம்.
செந்தண் -  சிறந்த.
முடிவு ஆக்கும் - முடிவுகளை உண்டாக்கும்.

பாட்டு 2

ஆள்வு -  ஆட்சிமுறை
அகலா = அரசர்கள் பதவியேற்கும் முறையினின்று
விலகாத;
தருகோலால் =  தருகின்ற ஆட்சி முறையால்.
ஆங்கு அமைதல் -  அவ்வாறு ( ஆட்சி) அமைதல்.
நந்தா -  கெட்டுப்போகாத; நீங்காத.
நடப்பு ஆமோ = நிகழ்வும் ஆகுமோ.
நாடு -  சிந்தனை செய்க.

புதன், 28 மார்ச், 2018

சிவமாலா வலைத்தளமோ ஓட வில்லை....!


சிவமாலா  வலைத்தளமோ ஓட வில்லை
செய்தனரே அதுவென்ன? வாட வில்லை
இவண்மீண்டும் வருகின்றேன் பாடலொன்றைப்
புனைந்துங்கள் முன்வைத்தேன்  தேடு முன்னே
கவண்வைத்துக் குருவியைப்போல் சிக்க வைத்துக்
காட்டுக்குள் போட்டாலும் கடுகி வந்து
கவிமாலை சொல்லாய்வு கவினு ரைகள்
கனிவோடு தரமுருகன் அருளே செய்வான். 

இது 23.3.2018ல் எழுதப்பட்டது.  வலைத்தளம் வசப்பட்டது
போல் தோன்றினாலும் எதையும் பதிவேற்றம் செய்ய
முடியவில்லை. இந்தப் பாடலை மட்டும் சேமித்து வைத்து
வேறோர் இடத்துக்கு அனுப்பி இப்போது மீட்டெடுத்தோம்.
அந்தத் தடையை நினைவு கூர்வது நல்ல அறிகுறியா 
என்று தீர்மானிக்க இயலவில்லை. எழுதப்பட்டதைப்
படித்து மகிழுங்கள்.

பல காரணங்களால் அவ்வப்போது தடைகள்
ஏற்பட்டுக்கொண்டுதாம்  உள்ளன. என்றாலும்
தொடர்வோம்.

நம் வலைத்தளத்தைத் தேடினால் வேறு தளங்களுக்கு
மாற்றிவிடுதலும் நடக்கிறது.  இத்தளம் இல்லை என்றும்
அறிவிப்பு வருகிறது. கவலை வேண்டாம்.

ை நிகழ்ந்து இன்னொரு நாட்டில்.

காமி ( காட்டு) மற்றும் காமி (அன்புக்குரியாள்)



பிறவினைச் சொற்களில் ஏற்படுந்  திரிபுகள்


காண் என்பதன் பிறவினை காண்பி  என்பது.  இதை நம் இலக்கண நூல்கள் விளக்கும்.  செய் என்னும் வினையோவெனின் செய்வி என்று பிறவினை வடிவு கொள்ளும்.  ~தல் என்னும் தொழிற்பெயர் விகுதியைச் சேர்த்தால் காண்பித்தல்,  செய்வித்தல் என அமையும்.

செய்வி, காண்பி, செய்வித்தல் காண்பித்தல் போன்றவற்றைத் தனிச்சொற்களாய் நாம் கொள்வதில்லை.  செய், காண் என்ற சொற்களையே சொற்களென்`கிறோம்.  மற்றவை இச்சொற்களின் பிறவினை வடிவங்கள் என்`கிறோம்.  செய்வித்தல் போன்ற சில வடிவங்களை அகராதிகளும் பெரும்பாலும் தருவதில்லை.

காண்பித்தல் என்பது பேச்சுமொழியில்காமிஎன்று வருகிறது. காமி என்பது  அகரவரிசையில் இப்பொருளில் இடப்படுவதில்லை.
காமி, சத்தியபாமா, கதவைத் திற வாஎன்ற நாடகப் பாட்டில் காமி என்பது காமத்துக்குரிய பெண்ணைக் குறிக்கிறது.  கலகம் மூலம், காமினி மூலம்  என்ற மலையாளப்பாட்டிலும்  காமினி என்பது காமி என்ற பொருளிலேதான் வருகிறது.

காமம்> காமி > காமினி.

காமி  (காட்டு என்ற பொருளில் ) என்பதை   முறைப்படி அமைந்த சொல்லாய்த் தமிழாசிரியர் ஏற்றுக்கொள்வதில்லை.  

சிவகாமி என்பதில் சிவனின் இணை என்ற பொருளில் காமி என்பது சரியாக வருகிறது.
காமி என்பது அன்புக்கும் அணைப்பிற்கும் உரிய பெண் என்று தனித்து நின்றும் பொருளுணர்த்தும். ஆனால் பேச்சு வழக்கில் காண்மி, காண்பி என்பவற்றுடன் சென்று மலைவு தருகிறது.  காமினி என்பது இன்+இ என்ற இறுதிகளைப் பெற்று இவ்விலக்கலிலிருந்து தப்பிவிடுகிறது.

ஒருமித்தல் என்ற பிறவினையில் மி என்ற இறுதிநிலை  வந்து, நல்ல சொல்லாகிறது.  நிறுமித்தல் ( நிருமித்தல்) என்ற சொல்லிலும் தடைக்கற்கள் இல்லை.  நேர்மித்தல் ( நேமித்தல் ) என்பதிலும் பிறவினையமைப்பு நன்றாகவே உள்ளது. ( நியமித்தல் என்பது இன்னொன்று).   சேர்மித்தல் ( சேமித்தல்) என்பதும் நன்று.

காமி(த்தல்) என்ற பேச்சு வழக்குச் சொல்லை காண்மித்தல் என்று திருத்தமாக எழுதியிருப்பின்  அல்லது பேசியிருப்பின்  இடர் ஏதுமில்லை. அது காண்பித்தல் போலவே ஏற்றுக்கொள்ளத்தக்க உரு உடையதாகிவிடும், இடையில் நிற்கும் ணகர மெய்யை ஒலிக்க இயலாத காரணத்தால் காண்மி என்பதை ஏற்கவில்லை என்று தெரிகிறது. காண்பி என்பதும் அதே காரணத்தால் உரையாடல்களில் அருகிவிடுகிறது.

காண்மானம் என்ற பேச்சுச்சொல்,  எழுத்தில் வருவதில்லை.  "ஓரு காமானமா அதெ சொல்லுவாரு" என்று செவிகளில் வந்தேறும்.  அகராதிகளில் இல்லை.  எடுத்துக்காட்டு என்ற பொருளில் இது கையாளப்படுகிறது. இதிலும் ணகர ஒற்று மறைந்துவிடுகிறது. காண்மானம் என்பதில் இலக்கணத் தெற்று ஏதுமில்லை. 


(பிழைத்திருத்தம் பின்.)