வெள்ளி, 28 ஏப்ரல், 2017

உரொட்டிக் கடைகள்


பழங்காலத்தில் (அதாவது இரண்டாம் உலகப் போரின் முந்திய காலத்தில் ) உரொட்டிக் கடைகள் வைத்திருந்தவர்கள் பெரும்பாலும் பாகிஸ்தானியர்கள் என்று தெரிகிறது. சிங்கப்பூரில் அவர்கள் நடத்திய‌  சுடுமனைகள்(bakeries)பலவிடங்களில் முன்னிருந்திருப்பினும் இப்போது அவை மூடப்ப்பட்டு அவ்விடங்கள் வேறு கடைகளாகவோ அடுக்குமாடி வீடுகளாகவோ மாறிவிட்டன. அவர்களில் பலர், பாகிஸ்தானுக்குச் சென்றுவிட்டனர் அல்லது அவர்களின் பின்னோர் வேறு தொழிலர்கள்
ஆகிவிட்டனர்.

ஜொகூர்பாருவில் ஜாலான் டோபி என்னும் வீதியில் இன்னும் ஒரு கடை இருக்கிறது. இங்கு இன்னும் பழைய காலப் பாணியில் உரொட்டிகள் மற்றும் கறியுப்பிகள் (CURRYPUFFS) சுட்டு விற்கிறார்கள். யாம் சைவ‌ உணவினியாதலின், வெறும் உரொட்டியை இங்கிருந்து வாங்கியதுண்டு.

உரொட்டி சுடும் தொழில் இப்போது பெரிய குழும்பினர்களில் companies கைகளில் சென்றுவிட்டபடியால் பாக்கிஸ்தானியர் கடைகள் ஒருசில‌ மலேசியாவின் நகரங்களில் ஆங்காங்கு இருக்கலாம். இவர்கள் விட்டுப்போன இத்தொழிலைச் சில சீனர்கள் தொடர்ந்து வருகின்றனர். 

உரட்டி என்பது ஒருவகை அப்பமாகும். இதிலிருந்து திரிந்து ரொட்டி என்ற சொல் அமைந்தது என்பதை 2009க்குப் பின் வெளியிட்டு விளக்கமும் கொடுத்திருந்தோம்.1


ஓர் உருவாக அட்டு எடுத்தலால் அது உரு+ அடு + இ = உரட்டி ஆனது. 2 அடு என்பது இகரத்தின்முன் இரட்டித்தது. அட்டாலும் என்றால் சுட்டாலும் என்று
பொருள். அட்டு = சுட்டு (எச்சவினை). ஓர் உருவாகப் பிசைந்துகொண்டு சுடுதட்டில் ஒட்டி வேகவைத்து எடுப்பதாலும் உரு+ஒட்டி = உரொட்டி என்றாகி, தலையிழந்து ரொட்டி என்று வழங்கிற்று. இது பின் பிறமொழிகளிலும் பரவியது தமிழின் திறத்தை நமக்குக் காட்டுவதாகும். சொற்களை அமைக்க ஏற்ற எளிதான மொழி தமிழே ஆகும்.


சொல்லமைக்க வகர யகர உடம்படுமெய்கள் தேவையில்லை யாயின.


சொல்லமைந்த விதம் இங்ஙனமாக, பிரட் என்ற ஆங்கிலச்சொல், புரு (வடித்தெடுத்தல்) என்பதிலிருந்து வந்ததாக ஆய்வாளர் கருதுகின்றனர்.
ஐரோப்பிய மொழிகள் பலவினும், பர, ப்ரு என்றுதான் உரொட்டியின் பெயர்
தொடங்குகிறது.


புரத்தல் என்ற தமிழ்ச்சொல்லும் புர என்றபடியே தொடங்குகிறது. புரட்டுதல்
என்ற சொல்லும் புர என்றே தொடங்குகிறது. அவ்வராய்ச்சியாளர் இவற்றை
அறியாமையால், இவற்றைக் கருத்தில் கொண்டிலர். பலவகை அப்பங்களையும் புரட்டிப்போட்டுத்தான் சுடவேண்டியுள்ளது. இதிலிருந்தும் புரு என்ற மூலச்சொல் முளைத்திருக்கலாம் என்பதை அவர்கள் ஆராயவில்லை.

புரட்டா என்ற சொல்லும் இங்ஙனம் அமைந்ததே. பரோடா என்ற பாக்கிஸ்தான்
நகரத்தில், புரட்டா என்ற ரொட்டி இருந்ததில்லை என்று அறிந்த பஞ்சாபியர்
கூறுவதனால் அது அங்கிருந்து வரவில்லை. புரட்டா என்பது பஞ்சாபியர்
உணவன்று என்று அவர்கள் கூறுவர். பரோடாவிலிருந்து வந்ததனால் அது
பரோடா என்று பெயர்பெற்றதெனில், அது இங்கு வருமுன் அதற்கு அங்கு
என்னபெயர்? இவ்வகை ரொட்டிகளை ஆக்கியவர்கள் நம் தென்னிந்திய‌ முஸ்லீம்களே. அதை அவர்கள் ஆக்கியவிடம் சிங்கப்பூர் மலேசியா ஆகும். இங்கிருந்து அது இந்தியாவிற்குப் பரவிற்று. ஆனால் சிங்கப்பூர் ஜுபிளி உணவகம் உண்டாக்கிய மரியம் ரொட்டி பரவாது போய்விட்டது. இறைச்சி பெரட்டல் (புரட்டல்), கோழி பெரட்டல் என்றெல்லாம் சிலர் உண்பதனால், புரட்டுதல் உணவுவகையுடன் தொடர்புடைய சொல்லே ஆகும்.

------------------------------

அடிக்குறிப்புகள் :

1.   அவை அழிவுண்டன. இரண்டு உலாவிப் பொருத்திகளில் மென்பொருள் நிபுணர்களைக் கொண்டு மாற்றங்கள் செய்து எங்கள் உலாவியுடன் இணைத்து, அவை ஒவ்வொரு முறையும் யாம் உலாவியைப் பயன்படுத்தும்போது பல இடுகைகளையும் அழித்துவிட்டன. இவைகள் எதிரிகளால் செய்யப்பட்ட தாக்குதல்கள். கணினிக்குள் இருந்தவையும் பல‌
அழிந்தன.

2.   மாவை உருட்டிச் சுட்டுச்  செய்யப்படுவதால்   உருட்டி > உரட்டி >  ரொட்டி
என்பது இன்னொரு விளக்கம் .

3    புரத்தல் -  பாதுகாத்தல்.  உடலைப் பாதுகாத்தல் . புரதச் சத்து  என்பதில்
புரத்தல்  என்னும் சொல்  காண்க . 

will review and reedit

வியாழன், 27 ஏப்ரல், 2017

இழந்தவை இருப்பவை ........

பண்டைத் தமிழர் சிறப்புகள் பலவுடையராக வாழ்ந்தனர். எனினும் எல்லாச் சிறப்புகளும் அவர்களிடம் தங்கிவிடவில்லை. இன்று அவர்களிடம் உள்ள சிறப்புகளில் கருதத்தக்கது யாது எனின், மொழி ஒன்றே என்று கூறின், அதுவே உண்மையாகும். பிற சிறப்புகள்
பலவும் கழிந்தன.


நம் சிறப்புகளிற் சிலவற்றைப் பிறர் பெற்றுக்கொண்டு அதைப் போற்றிவைத்திருந்தனராயின், நாம் அவற்றை இழந்துவிடினும் அவர்களிடமிருந்து அவற்றைத் தெரிந்துகொள்ளலும் வேண்டியவிடத்து மீண்டும் கொணர்தலும் கூடும். முற்றும் அழிந்தவற்றை எவ்வாற்றானும் மீளப்பெறுதல் இல்லை. புட்பக வானூர்தி இவற்றுள் ஒன்றாக இருக்கலாம்; எனினும் இப்போது அவற்றினும் நல்ல வானூர்திகள் கிட்டுவதால், அவற்றை மறந்துவிட வேண்டியதுதான். பண்டைப் போர்க்கருவிகள் இன்று பயனற்றவையாய்விட்டன.

காட்டில் வேட்டையாடச் செல்பவன் சுடுகருவிகள் இல்லையேல் சில ஆயுதங்களையாதல் எடுத்துச்செல்லவேண்டும். ஈட்டி முதலியவை   இன்று போர்க்கருவியாகப் பெரிதும் பயன்பாடு அற்றவையாய்விடினும்  வேட்டைக்காரனுக்குப் பயன் உடையதாய் இருக்கக்கூடும்.

ஈட்டி என்ற சொல் வடிவே பெரிதும் இன்று பலரும் அறிந்தது. இதன் அடிச்சொல் இடு என்பது. பண்டைக்காலத்தில் ஈட்டியை இடுதல் என்பது வழக்காய் இருந்தது தெரிகிறது. இடு > இட்டி என்று சொல் அமைந்தது. இது பின்னர் ஈட்டி என்று முதனிலை நீண்டது.

ஈட்டி ஓர் ஆயுதம். ஆய்வதற்குப் பயன்படுவது ஆயுதம். ஆய்தலாவது சொற்களைப் பகுத்தும் தொகுத்தும் சேர்த்தும் கோத்தும் செய்வதுபோன்று பிறபொருட்களுக்கும் செய்தல். இது ஆய்+ உது + அம் என்றவை சேர்ந்து ஆனது. அது, இது மற்றும் உது என்பன சேர்ந்து பல சொற்கள் அமைந்துள்ளன. உது எனின் முன் நிற்பது. இங்கு சொல்லாக்க‌ இடைநிலையாய் நின்றது.

ஆய்தம் என்பது ஓர் எழுத்தின் பெயர். இதுவும் ஆய் அதாவது ஆய்தல்
என்ற சொல்லடிப்படையில் எழுந்ததே ஆகும். ஆயின் ஆய்+ த் + அம் என்ற முறையில் அமைந்தது. த் எனினும் து எனினும் விளைவு
வேறுபடாது. ஒரே அடியிற் தோன்றினும் இச்சொற்கள் வேறுவேறு ஆகும்.

இழந்தவை   இருப்பவை

விவசாயம்

விவசாயி

இச்சொல்லை முன் விளக்கியிருந்தோம், அந்த இடுகை காணப்படவில்லை. ஆகவே மறுபதிவு செய்கிறோம்.

விவசாயமே சிறப்பான தொழில். உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார்.

விவசாயம்: வி=  விழுமிய;  வ:  வாழ்வினை; சா: சார்ந்திருப்போர். அம் என்பது விகுதி. இதில் வ என்பது வா: வாழ்வு என்பதன் குறுக்கம். வாழ்த்துதல் என்ற சொல் வழுத்துதல் என்றும் குறுகும். விவ என்ற‌
இலத்தீன் சொல், விவா; விவோ, விவோஸ் என்றும் திரிதலை உடையது ஆகும்.

விழுமிய வாழ்வினைச் சார்ந்திருப்போர் விவசாயிகள் ஆவர்