ஞாயிறு, 4 டிசம்பர், 2016

இசு > இச்சை

மனம் இழுக்கப்படுவதே இச்சை. உண்மையில் மனம் என ஒன்று உள்ளதா என்பதைப் பலர் ஆய்ந்து இல்லை என்பர். இல்லைதான்,
ஆயின் அப்படிக் கொள்வது மொழிமரபும் மக்கள் பண்பாடும் ஆகும்.
இருதயம்  (ஈர்+து+ அ+(ய) + அம் )  என்பது அரத்தம் அல்லது குருதியை ஈர்க்கும் மற்றும் வெளிப்படுத்தும் ஓர் உறுப்பு.  ஈர் = இங்கு
இழுத்துக்கொள்வது;  அ = அங்கு செலுத்துவது.  இப்படி இச்சொல்லை அமைத்துள்ளனர் இவ் அறிவாளிகள்.

இழு என்பது இசு என்று திரியும்.  இசு + வு = இசிவு.  உகரம் கெட்டு ஓர் இகரம் தோன்றிற்று. வகர ஒற்று உடம்படு மெய். இசிவு ‍ இழுத்தல்.

பசு > பச்சை.  சகர இரட்டிப்பு,
இசு > இச்சை.  இதுவும் அங்ஙனம் கட்டமைந்த சொல்.  இறுதி ஐ ஒரு விகுதி.    கொலை என்பதில் கூட ஐ இருக்கிறது. கொல்+ஐ
கொலை.

இது முன் எழுதப்பட்டு அழிபட்டதால், உங்களிடம் இருந்தால்
அனுப்பிவைக்கவும். நன்றி

ஆசை மனம் அசைவு

ஆசை என்ற சொல்லை முன் விளக்கி யிருப்பினும், அது  திருடர்களால் அழிக்கப்பட்டது.   பின் எழுதியது இன்னும் உள்ளது.

மனம் ஒன்றை நோக்கி அசைவதே  ஆசையாகும்.   அசை > ஆசை. முதனிலை திரிந்த தொழிற்பெயர். முதல் எழுத்து நீண்ட சொல்.
சுடு > சூடு என்பதுபோல.

மன அசைவு  பொன்னைப் பற்றியோ பொருளைப் பற்றியோ  இருக்கலாம். அல்லது பூமி பற்றியதாக இருக்கலாம். மனம் "ஆடாமல் அசையாமல் " இருப்பதானால், ஆசை இல்லை என்று பொருள்.

ஆசை ‍ அகரச் சுட்டடிச் சொல்.

சனி, 3 டிசம்பர், 2016

கம்பு கொம்பு. கொடும்பு

பெம்மான் என்ற பதத்தைப் பாருங்கள். இதில் பெம் என்பதென்ன? பெரும் எம்ற முன் துண்டுதான் பெம் என்று திரிந்துள்ளது. "பிறவா வரம் தாரும், பெம்மானே, தப்பிப் பிறந்திடினும் உனை மறவா வரம் தாரும்" என்று பத்திமான் (பற்றுமகன் > பற்றிமான் > பத்திமான் > பக்திமான்) பாடி இன்புறுத்துவான். மகிழ்ச்சிதான் அன்றோ?

இதில் யாம் சொல்ல விழைந்தது அதுவன்று. பெரும் என்பதில் ருகரம் தொகுந்து பெம் ஆயிற்று என்பதுதான்.

அம்மணி என்ற சொல், அருமணி என்பதன் ருகரம் ஒழிந்த சொல்.
அருமணி என்றே இருந்திருந்தால், செந்தமிழ் அழகாகவே இருந்திருக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். அம்மணி என்பதும் அழகுதான். பச்சைப் பாலும் காய்ச்சின பாலும் எல்லாம் இனிமைதான். எதை உண்டு பழகியிருக்கிறோம் என்பதைப் பொறுத்தது அதுவாகும்

அம்மை (அம்மா) + மணி  =  அம்மணி ஆனது என்று நினைக்கலாம்.

கருமம் என்பதும் கம்மம் என்றாகும். ருகரம் ஒழியும்.

கம்முதல் என்பது ஒளி குறைதல். அதாவது ஒளி குறைதல். அதாவது வானம் ஒளி குறைதல். கருப்பு ஆதல். கருமுதல் > கம்முதல் என்பது தெளிவு. கம்மி > ஒளி குறைவு, குறைவு.
ஆகாயம் கம்மிக்கொண்டு இருக்கிறதென்பது கேட்டிருக்கலாம்.

இடையில் ரு ஒழிவதுபோலவே, டுகரம் கூட ஒழியும். கடும் > கம் > கம்பு. கடினமான தானியம். இதுபோலும் பிற இடைக்குறைகளைப் பின்கவனிப்போம்.

கொடு  +  பு  =  கொடும்பு  >  கொம்பு.    கொம்பு  என்பது வளைவு  குறிக்கும் சொல். கொடும்பு  பலபொருட் சொல்.  அது கன்னத்தின் உட்புறமும் குறிக்கும் .
"குடித்த பால் கொடும்பில் இருக்கிறது "  என்பது பழமொழி .

கொடும்பு  >  கொம்பு. இங்கு டு  ஒழிந்து  சொல்  பொருள் மாறிற்று .

டகரம் பிறமொழிகட்குச் செல்கையில் குறையும் அல்லது ஷ என்று
மாறும். பீடு > பீடுமன்> பீஷ்மன். (பெருமிதத்திற்குரிய மன்னன்).
பீடுமன் > பீமன் என்று டுகரம் மறையும். பின்னர் அது வீமன் என்றுமாகும்.