வெள்ளி, 2 டிசம்பர், 2016

சொ ல் : கம்பீரம்

கம்பு முதலிய தானியங்களை அவற்றை ஈரமாக்கியே பின் குத்திச் சமைக்கவேண்டும். ஆகவே கம்பீரமென்பது  பயன்பாடு உள்ள நிலைமையைக் குறிக்கிறது,  அது தயார் நிலை என்று சுருங்கச் சொல்லலாம். காய்ந்த கம்புபோல் இருப்பதானது பயன்படுத்தத் தயார் நிலையில் இல்லாமையைக் குறிக்கும்.

இந்தச் சமையற் கட்டுச் சொல்  பின் பிற நிலைமைகளையும் தழுவி.
நின்றதுடன், அயல் மொழிகளிலும் பரவிற்று. கம்பு என்பது தமிழகத்தில்
நீண்ட காலமாகப் பயன்கண்டு வரும் ஒரு தானியமாகும்.  தோற்றம் சாயல்  முதலியவற்றையும்  இச்சொல் பின்னர் உள்ளடக்கிற்று, .

தானியமாவது, தான் உணவாக்கிக் கொள்வதற்காகச் சேர்த்து வைத்துள்ள தாவரப் பொருள். இது கூலமெனவும் படும். ஆங்கிலத்தில் தன் உடைமை என்று பொருள்படும் பெர்ச்னால்டி அல்லது பெர்சனல் சாட்டல்ஸ்  personalty and personal chattels  போலும்  ஒரு சொல்லாகும்.
தான் இயங்கத் தேவையான விளை  உண்பொருள் தானியமாயிற்று என்க.
இது காரண இடுகுறி.

கம்பு +  ஈரம்  =  கம்பீரம்

ஈர்ப்பு உடைய  கம்பு  எனினும்  ஏற்கலாம் .

கம்பு  என்பது திண்மைக்கு  எடுத்துக் காட்டு.   கம்பன் என்ற பெயரும்  திண்ணவன்  என்று பொருள் தருவதே . நொய்  நொய்ம்மை என்பன  திண்மை இன்மைக்கு  அறிகுறி ஆவன .

பெரிதும் மழைச்சார்பு இல்லா இடங்களிலும் வளர்வது கம்பின் திண்மை ஆகும்/


வியாழன், 1 டிசம்பர், 2016

புலவர்களும் குலங்களும்

புகழ்ப்பெற்ற பெரும்புலவர்களும் அவர்களின் குலங்களும்.

தொல்காப்பியன்    பிராமணன் (தொல்காப்பியம்)
வேத வியாசன்  ‍   மீனவன்   (மகாபாரதம்)
வான்மீக முனி     தலித்து.   (இராமாயணம்)
சாணக்கியன்       சாணான்   (அர்த்தசாத்திரம்)
பாணினி           பாணன்    (வடமொழி இலக்கணம்)
கம்பன்             உவச்சன்   (கம்ப இராமாயணம்)
ஒட்டக்கூத்தன்     செங்குந்தன் ( தக்கயாகப் பரணி)
இளங்கோ அடிகள்  அரசகுலம்  (சிலப்பதிகாரம் )
சாத்தனார்          வணிககுலம் ( மணிமேகலை.)
திருத்தக்கர்           சமண தேவர்   (சீவக சிந்தாமணி )
மாமூலர்           இடையர்   ( திருமந்திரம் )  சிவயோகி
பதஞ்சலி  1         நாகர் (நாக தீபம் )           ( யோகசூத்திரம்)  சிவயோகி

1 .பாத + அஞ்சலி =   பதஞ்சலி   நாக தீபம் - இலங்கை      .பதம் = பாதம்
It appears many other unknown authors also used this name to publish their works..    

Any further information pl forward.
Some wish to know these details.

முரு > முறு அடிச்சொற்கள்

முரு > முறு  அடிச்சொற்களிலிருந்து,  

முரு  >  முரடு > முரண்டு > முரண்டுதல்.

 முரண்டுதல் என்பது எதற்கும் இசைந்து செல்லாமையைக் குறிக்கிறது. பெரும்பாலும் இது செய்வோர் குணத்தில் முரடாக இருப்பவர்கள். இசையாமையை முரண்டுதல், முரண்டு பிடித்தல் என்ற வழக்குகள்
காட்டுகின்றன,

முரி <>  முறி.

இது முரித்தல் என்றும் முறித்தல் என்றும் வேறுபாடின்றி எழுதப்படலாம்,  ஒடித்தல் என்பது இதன் பொருள்

அகத்து முரி  என்ற வழக்கில்  முரி  பாலைவனமாகும்.

மருந்து அல்லது உணவில்  ஒன்று இன்னொன்றுக்கு "முரிவு " கொடுக்கும் என்பது  கேள்விப் பட்டிருக்கலாம் .

முருடன்  =  முரடன் .

முறுக்குதல் என்பதும் ஓடித்தல் , மாறுபடுதல் என்று  பொருள் தரும்.

இந்த அடிச்சொற்கள் (முரு. முறு  என்பவை )  வலிமை என்ற  மூலப்  பொருளைக் கொண்டவை என்பது இதன் மூலம் தெரிகிறது.