திங்கள், 31 அக்டோபர், 2016

சதிபதி என்ற தொடரில்..................

சத்தி அல்லது சக்தி என்பது பார்வதி தேவிக்கும் பெயர்.
சக்தி அல்லது சத்திக்குச் சிவனே பதி என்பது
சிவமதத்தார் கொள்கையாகும்,

சத்தி ( சக்தி ) என்பது இடைக்குறைந்தால் சதி என்று வரும்,
சதி என்பது பார்வதியையும் குறிக்கும்.  மனைவி என்றும்
பொருள் படும்.

சதிபதி என்ற தொடரில், கணவன்‍ மனைவி என்பது
பொருளாம் எனல் நீங்கள் அறிந்தது.

மனைவி அல்லது பெண்ணே ஆற்றலுடையாள்
 என்பது இதிலிருந்து பெறப்படுகிறது.  சதிபதி
 என்பதில் சதியே முன்வருதல் காண்க..


அசைவும் இயக்கமும் சத்தி ஆகும்.  இருப்பு
அல்லது அசைவற்ற நிலை சிவமென்பதும் கணவர்
- ஆடவர் என்பதும் இதிலிருந்து பெறப்படும்.

சதி என்ற சொல்லும் பிறவும் குடும்பத்துக்குப் பெண்
தலைமைகொண்ட‌ மிகப்பழங்காலத்தையே  
முன் கொணர்ந்து நிறுத்துகின்றன.

இதனைப் பதி  என்பதனுடன் ஒப்பிட்டு நோக்கவும்.

https://sivamaalaa.blogspot.sg/2016/10/blog-post_38.html  செல்க .

The world is made up of dynamic  and static forces.  Dynamic is சக்தி
 , சத்தி  அல்லது சதி .

வெள்ளி, 28 அக்டோபர், 2016

சுரர் என்போர் அறிவின் ஊற்றுக்கள்.

http://sivamaalaa.blogspot.com/2014/10/blog-post_22.html

நீரகத்துத் தோன்றிய சூறாவளியை நீரின் அமைப்பாகவும் (அம்ஸம்)  கடலாகவும் விண்ணாகவும் இலங்கும்  கண்ணன்
அடக்கினான். நீரக சூறா என்பதே நரகாசூறா > நரகாசுரா என்றானதை மேற்கண்ட இடுகையில் விளக்கி யிருந்தோம்.
.

இதில் வரும் அசுரன் என்ற  சொல் பிறழ்பிரிப்பு.
நல்லோர் என்று பொருள்படும் சுரன் என்பது  வேறு. அதன்
எதிர்ச்சொல் அசுரன்

இதனை அடுத்து விளக்குவோம்,

சுரர் என்போர்  அறிவின் ஊற்றுக்கள்.   அவர்களிடமிருந்து  அறிவு சுரந்து
மனித குலத்துக்குப் பயன்படுகிறது.    சுரர் அல்லாதோர்  அசுரர் ஆவர். ( which means "A  non-Sura or non-Suran  is Asuran:  suran - antonym : Asuran) 
ஆரிய என்ற சொல்லும்  அறிவாளிகள் என்றே பொருள் பட்டதுபோல்
இதுவும் அங்ஙனம் ( likewise )  அமைந்தது.

சொல் அமைப்பைப் பின் விரித்துரைப்போம்.

வியாழன், 27 அக்டோபர், 2016

தேன் வந்து பாயுது காதினிலே - மது


மது  என்பது ஒரு சொல்லின் இடைச்சுருக்கம்,  அதாவது:   ம ‍  து.
மயக்குவது,  மயங்குவது என்ற இரண்டில் எதிலும்  இடைநிற்கும் எழுத்துக்களை எடுத்துவிட்டால்  மது கிடைக்கின்றது;  பூவின் இடை
நிற்கும்  சாற்றை எடுத்து தேனீக்கள் மதுவைத் தருவது போல.

மது என்பது கள்ளையும் குறிக்கும்.  ஏனை மயக்குத் தேறல்களையும்
குறிக்கும்.  தேனையும் குறிக்கும்.

மதுவுண்ட வண்டானேன் எனின் ,  வண்டு  கள் குடித்தது என்று பொருள் ஆகாது.  வண்டு தேனை உண்டது என்பதே பொருள்.

மது  என்பது பொதுப் பொருளினது  ஆதலின் " பூமது "  " மது மலர்"  என்றெல்லாம் வரணனைகள்  ஏற்றப்  படுவதுண்டு.

"தேன்  வந்து பாயுது  காதினிலே" என்று பாடலில் வந்தால்,  தேன்  நாவிற் பட்டால்  ஆங்கு  உணரப்  படும் இனிமை போலும் ஓர் இனிமை,  செவிக்குள் சென்று பாய்கிறது  ,  என்பதே பொருள்.  தேனின் இனிமை `செவி உணராது
என்று குற்றம் காணலாகாது.  ஒரு சிறு கைக்குழந்தையைப் பார்த்து, Sweet   
என்று  நாம் மட்டுமா சொல்கிறோம் ?  சீனர்  மலாய்க்காரர்கள், ஏனை  மக்களாலும் சொல்லப்படுகிறதே;  குழ்ந்தை என்ன சீனியா  வெல்லமா ?  மொழிகளின் இயல்பும் மனிதனின் பொருள் உணர்ந்து உணர்த்தும் தன்மையும் அப்படி .எல்லா மொழிகளிலும் இவ்வகை ஒப்பீடு  உள்ளது  அறிக.

மயங்குவது என்பதை  ம - து  என்று சுருக்குவது  அதனை வெளிப்படையாகச் சுட்டாமையினால் ஏற்பட்டது,   இது  இடக்கர் அடக்கல் போன்ற ஒரு தேவையாகவோ  விரைந்து வணிகம் செய்தற்பொருட்டோ  ஏற்பட்டிருக்கக் கூடும்.  நாளடைவில் இது ஒரு தனிச் சொல்லானது,

இது பற்றி மேலும் அறிய:

https://sivamaalaa.blogspot.sg/2016/04/blog-post_2.html

மது என்பது மலாய் மொழியிலும் வழங்குகிறது.  அது  மா - டு  என்று  ஒலிக்கப்  பெறும் .தமிழ் மூலங்களிலிருந்து பிறந்த சொல்  பல வேறு திரிபுகளால், பிற மொழிகட்கும்  சென்று வழங்குதல் தமிழின் பெருமையே ஆகும்,