சனி, 3 செப்டம்பர், 2016

கேடிகள்

பேச்சுத் தமிழில் மிகுதியும் வழங்கும் ஒரு சொல் கேடி என்பதாகும்.
கேடி என்ற சொல்லுடன் ஒருவனின் பெயரையும் இணைத்தும் குறிப்பதுண்டு. சிங்கப்பூரில் பெயர்பெற்ற கேடிகள் யாரும் இருப்பதாக நாம்
கேள்விப்படுவதில்லை. மலேசிய நகரங்களில் உள்ளனர் என்பது பலரும்
அறிந்ததே. பிற நாடுகளில் மாஃபியா என்னும் பெரிய கேடிகள் இருப்பதாகத் தெரிகிறது.

கேடி என்ற சொல் தமிழா என்று முன்னர் ஒருவர் கேட்டதுண்டு. சுருக்கமாகச் சொல்வோம்/

கேடு + இ =  கேடி   கேடு செய்வோன் என்பது பொருள்.

முன்  அஞ்சடிக்காரன் என்று ஒரு வழக்கு இருந்தது.  கடைவீடுகளுக்கு வெளியே ஐந்து அடி அகலமுள்ள நடை இருக்கும். வெயில் மழை படாமல் இவற்றினூடே நடந்து செல்லும் வசதி இருக்கும்.  இவ்விடங்களில் படுத்து உறங்கி  வீட்டுக்காரர்கள் தரும் உணவை
உண்டு வாழ்ந்தவர்கள் இப்பெயரால் அழைக்கப்பட்டனர்.

முன் ஒரு தமிழன் ஒரு மலாய்க் குடும்பத்தின் வீட்டின் அஞ்சடியில்
இரவில் படுத்துறங்கிக் காலங்கழித்து வந்தான்/ அந்த வீட்டுத் தவழும்
குழந்தை அதன் தாய் அறியாமல் வெளியில் வந்து தூங்கிக் கொண்டிருந்த‌
அவனைத்  தட்டிற்று.  அவன் அதை ஒரு கம்பால் அடித்துக் கொன்றான்.. பாவம், ஒரு பெரிய துயர நிகழ்வாகிவிட்டது,  இப்போது
அஞ்சடிக்காரர்கள் யாரையும் காண முடியவில்லை.

இவர்கள் கேடிகள் அல்லர்; ஆனால் சிலர் பித்தர்கள் என்று தோன்றுகிறது.

வெள்ளி, 2 செப்டம்பர், 2016

Narayana and Water, நீராயினன்

நாராயணன்

நீராயினன் என்பதே பிற்காலத்தில் நாராயணன், நாரா என்று மாற்றம் பெற்றதென்பதை இணையத்தில் எழுதி வெளியிட்டிருந்தோம்.  இது சில‌
ஆண்டுகளின் முன்.  இது இங்கும் பதிவு பெற்றது.

ஆயினான் என்பது ஆயணா.

இது பிறரால் இங்கு புகுந்து அழிக்கப்பட்டுள்ளது.  இதை மீண்டும் பதிவு
செய்கிறோம்,

மேலும் புதிய இடுகையும் கீழே குறிக்கப்பட்டுள்ளது.

குறிப்புகள் :

பரந்தாமன்     https://sivamaalaa.blogspot.sg/2016/05/blog-post_7.HTML

நீராயினன்  >  நாராயணன்

மனு  Part 1  Ch  1  :  10. The waters are called narah, (for) the waters are, indeed, the offspring of Nara; as they were his first residence (ayana), he thence is named Narayana. Translated by George Buhler.  
If you have a copy of the old post, you may kindly transmit it to us.



வியாழன், 1 செப்டம்பர், 2016

பார்ப்பனர் இன்னொரு விளக்கம்



Of the non-Asian mtDNA haplotypes found in Indian populations, most are of West Eurasian origin (Table 2; Torroni et al. 1994; Richards et al. 1998). However, most of these Indian West-Eurasian haplotypes belong to an Indian-specific subset of haplogroup U, that is, U2i (Kivisild et al. 1999), the oldest and second most common mtDNA haplogroup found in Europe (Torroni et al. 1994----------http://genome.cshlp.org/content/11/6/994.long

ஆரியர் என்று பெயருள்ளவர்கள் இந்தியாவிற்குள் யாரும் வரவில்லை என்று வரலாற்றாசிரியர் சிலர்  கருதுவர். (1)ஆனாலும் வரலாற்றுக்கு முந்திய காலந்தொட்டுப் பலர் வந்துள்ளனர். இவர்களையெல்லாம் "ஆரியர்" என்ற பெயருக்குள் நுழைத்துவிடமுடியாது. வேத நூல்களிலும் பின்வந்தவற்றுள்ளும் ஆரியர் என்பது அறிவாளிகள் என்ற பொருளில் வழங்கப்பட்டுள்ளது. மேலும் ஆரிய மொழிகள், இந்தோ ஆரிய மொழிகள் என்ற பதப் பயன்பாடுகளில் ஆரிய என்பதோ மொழிக்குடும்பங்களுக்கும் பெயராக வழங்கப்படுகின்றது.

பார்ப்பனர் :  3

பார்ப்பனர் என்ற சொல் பலராலும் விளக்கப்பட்ட்டுள்ள சொல் ஆகும். அது இங்கும் முன்னர் விளக்கப்பட்டுள்ளது.அதற்கு இன்னொரு விளக்கம் இப்போது காண்போம்.

பார் ‍ : உலகம், பரந்தது.

பர : இது புகழ்தல் என்று பொருள். புகழானது எங்கும் பரவுதற்குரிய‌

நற்செய்தியை அன்றோ குறிக்கும்!

" அயோத்தியர் கோமானைப் பாடிப் பர!" 

பர என்றால் புகழ்தல்.

பர> பார் > பாராட்டுதல். அதாவது புகழ்தல். இதில் ஆட்டுதல் என்பது ஆற்றுதல்,செய்தல் என்பதினும் வேறன்று.

ஆகவே பார் என்பது புகழ்தல், பாராட்டுதல் என்ற சொல்லும்  பொருளும் தமிழில் உள்ளது தெரிந்ததே .

பன்னுதல் : திரும்பத் திரும்பச் சொல்லுதல்.

பார்ப்பன்னர்: இறைப் புகழைத் திரும்பத் திரும்பச் சொல்லும் வேலையைச் செய்பவர் என்று பொருள்.

பன்னர் என்பது பின் பனர் என்று குறைந்தது.

இதுவரை கூறப்பட்டவற்றோடு இதுவும் சேர்ந்துகொள்ளட்டும்,

அடிக்குறிப்புகள் ;

(1) ரோமிலா தாப்பார், வரலாற்றாசிரியர் .

(2)http://blogs.discovermagazine.com/gnxp/2013/08/what-the-harappa-ancestry-project-has-resolved/#.V8fz8

(3) The similarity is so large that Tamil Brahmins are not counted as a distinct racial group

(4) சாதிகள் தோற்றம்  https://sivamaalaa.blogspot.sg/2016/06/why-castes-were-institutionalised-in.html

(5)  பார்ப்பான்  http://sivamaalaa.blogspot.com/2014/04/blog-post_30.html

(6)   அரசனின் பார்வைக்குரியவர்கள் என்ற பொருளில் பார்ப்பார் என்றும் வந்திருக்கலாம். அவர்களுக்கு ஆதரவு (மாடு தருதல்) அரசனால் செய்யப்பட்டது. ஆ= பசு; தரவு = தருவது.   ஆதாரம்  என்பதுமதுவாம் . பார்ப்பு : இது குருவிக்குஞ்சு என்றும் பொருள். எனவே அரசன் பெரிய குருவி; பார்ப்பனர் கவனிக்கப்படும் குஞ்சுகள் என்பது பொருள்.  பிள்ளைப் பட்டம் போன்றது. அரசனின் பிள்ளைகள்  என்பர்.  அக்கிரகாரம் என்ற சொல்லும் கவனிக்கக்கூடியது.  http://sivamaalaa.blogspot.com/2016/06/blog-post_86.html